முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாலைப் பராமரிப்புக்கு கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ரூ.1,214 கோடி நிதி ஒதுக்கீடு

சாலைப் பராமரிப்புக்கு கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ரூ.1,214 கோடி நிதி ஒதுக்கீடு

திருத்தப்பட்ட சி.ஆர்.ஐ.எஃப் சட்டம், 2000-ன் விதிகளின்படி, மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் மாநில சாலைகளை மேம்படுத்தவும், பராமரிக்கவும் மாநில அரசுகள்  யூனியன் பிரதேசங்களுக்கு அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்கிறது.


கடந்த மூன்று ஆண்டுகளில் சி.ஆர்.ஐ.எஃப் திட்டத்தின் கீழ் மாநில சாலைகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்ததற்காக மாநில  யூனியன் பிரதேச வாரியாக நிதி விடுவிப்பு மற்றும் செலவிடப்பட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


தமிழ்நாட்டுக்கு 2021-22-ல் ரூ.350.15 கோடியும், 2022-23-ல் ரூ.377.63 கோடியும், 2023-24-ல் ரூ.486.15 கோடியும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.


புதுச்சேரிக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.22.95 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் சி.ஆர்.ஐ.எஃப் திட்டத்தின் கீழ் ஒப்பளிக்கப்பட்ட  இறுதி செய்யப்பட்ட மாநிலயூனியன் பிரதேச சாலைத் திட்டங்களின் மாநில  யூனியன் பிரதேச வாரியான விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன.


தற்போது, ரூ.37,098 கோடி மதிப்பிலான 14,369 கி.மீ. நீளமுள்ள 1,209 மாநில சாலைப் பணிகள் செயலாக்கத்தில் உள்ளன. 2027ஆம் ஆண்டில் இவை படிப்படியாக முடிக்கப்படும்.


தேசிய நெடுஞ்சாலைகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் பராமரித்தல் அமைச்சின் முதன்மையான பொறுப்பாகும். 2014 மார்ச் மாதத்தில் 91,287 கிலோ மீட்டராக இருந்த தேசிய நெடுஞ்சாலை தற்போது 1,46,126 கிலோ மீட்டராக உயர்ந்துள்ளது.


மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.தேசிய நெடுஞ்சாலைப் பாலங்களை ஆய்வு செய்ய புதிய அமைப்பு உருவாக்கம்



நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய விரிவான இந்திய பால மேலாண்மை அமைப்பை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தி பராமரிப்பது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் முக்கிய பொறுப்பாகும். நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் பாலங்கள் இடிந்து விழுந்த சில சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் பாலங்கள் இடிந்து விழுந்த விவரங்கள், உயிரிழந்தவர்கள், புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட விவரம் மற்றும் ஒப்பந்ததாரர்கள்  சலுகைதாரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை பற்றி இணைப்பில் இத்துடன் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை,  2022-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணைக்கரை என்னுமிடத்தில் உள்ள பெரிய பாலத்தின் ஒரு பகுதி கர்டர் தொழில்நுட்பக்  கோளாறு காரணமாக விழுந்தது.  இது குறித்து உடனடியாக நிபுணர் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் நான்கு பேர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மறு உத்தரவு வரும் வரை பணிகள் நிறுத்தப்பட்டன. சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் மீது 7.305 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. விழுந்த கர்டரை நிறுவனம் சொந்தச் செலவில் மறுகட்டுமானம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுமான  நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அடையாள அபராதமான ரூ.5 லட்சத்தை அந்த நிறுவனம் 29.08.2022 தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் செலுத்தியது.


தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதிக்கான தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதன் ஒரு பகுதியாக தற்போதுள்ள பாலங்களின் நிலை குறித்த கணக்கெடுப்பை அமைச்சகம் மேற்கொள்கிறது. பெருவழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போதுள்ள பாலங்களின் பழுதுபார்ப்பு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதுள்ள பாலங்களின் ஆய்வு மற்றும் நிலை கணக்கெடுப்பு, அதைத் தொடர்ந்து இடர்பாடுகளின் தன்மை மற்றும் தீவிரத்தின் அடிப்படையில் பொருத்தமான பழுதுபார்ப்பு  புனரமைப்பு  ஆகியவற்றிற்கான வழிகாட்டுதல்களை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பாலங்களின் கட்டமைப்பு மற்றும் சுகாதார கண்காணிப்பிற்கான கொள்கை வழிகாட்டுதல்கள் மற்றும் மாதிரி ஏல ஆவணங்களையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பாலங்களின் நிலை மதிப்பீடு மற்றும் பழுதுபார்ப்பு  புனரமைப்பு  புனரமைப்பு ஆகியவற்றிற்கான அடுத்தடுத்த முடிவுகளை எடுக்கும் செயல்முறைக்காக விரிவான இந்திய பால மேலாண்மை அமைப்பையும் அமைச்சகம் தொடங்கியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...