வீரதீரச் செயல்களுக்கான விருதுகளைக் குடியரசுத்தலைவர் வழங்கினார்
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (5.7.2024) நடைபெற்ற பாதுகாப்புப் படையினருக்கான வீர தீரச் செயல்களுக்கான விருது வழங்கும் விழா-2024-ன் முதல் கட்ட நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்று வீரதீரச் செயல்களுக்கான விருதுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பாதுகாப்புப் படையினரின் வீர திரச் செயல்களுக்கான விருது - குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார்
பாதுகாப்புப் படைகளில் பணிபுரிவோருக்கு, வீர தீர செயல்கள் புரிந்ததற்கான முதல் கட்ட விருது வழங்கும் விழா புதுதில்லியில் இன்று (05.07.2024) நடைபெற்றது. குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார்.
ஆயுதப்படைகள், மத்திய ஆயுதக் காவல் படைகள், மாநில, யூனியன் பிரதேசக் காவல்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
10 பேருக்கு கீர்த்தி சக்ரா விருதுகளும், 26 பேருக்கு சௌர்ய சக்ரா விருதுகளும் வழங்கப்பட்டன.
இதில் ஏழு பேருக்கு மரணத்திற்குப் பிந்தைய கீர்த்தி சக்ரா விருதுகளும், ஏழு பேருக்கு மரணத்திற்குப் பிந்தைய சௌர்ய சக்ரா விருதுகளும் வழங்கப்பட்டன.
வெல்லமுடியாத துணிச்சல், கடமையில் தீவிர அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தியவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
கருத்துகள்