முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கதர் மற்றும் கிராமத் தொழில் தயாரிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் புதிய விற்பனையில் சாதனை

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் புதிய சாதனை படைத்துள்ளது 


பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், 2023-24 நிதியாண்டில் உற்பத்தி, விற்பனை, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் புதிய சாதனை படைத்துள்ளது.

2023-24 நிதியாண்டிற்கான தற்காலிக புள்ளிவிவரங்களை இன்று வெளியிட்ட காதி கிராமத் தொழில் தலைவர் திரு மனோஜ் குமார், முந்தைய அனைத்து புள்ளிவிவரங்களையும் மிஞ்சும் வகையில், 2013-14 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது விற்பனையில் 399.69 சதவீதம், (தோராயமாக 400%), உற்பத்தியில் 314.79 சதவீதம் (தோராயமாக 315%), மற்றும் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் 80.96 சதவீதம் (தோராயமாக 81%) அதிகரித்துள்ளது என்றார்.

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் இந்த குறிப்பிடத்தக்க செயல்திறன், 2047-க்குள் 'வளர்ந்த இந்தியா' என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்கும், இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது என்று திரு குமார் கூறினார். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக, 2023-24 நிதியாண்டில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தயாரிப்புகளின் விற்பனை ரூ.1.55 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 2022-23 நிதியாண்டில் விற்பனை எண்ணிக்கை ரூ.1.34 லட்சம் கோடியாக இருந்தது. மோடி அரசின் கடைசி 10 நிதியாண்டுகளில், கிராமப்புறங்களில் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு காதி மற்றும் கிராமத் தொழில் பொருட்களின் விற்பனை, 2013-14 நிதியாண்டில் ரூ.31154.20 கோடியாக இருந்தது, இது 2023-24 நிதியாண்டில் மிக உயர்ந்த மட்டமான ரூ.155673.12 கோடியாக உயர்ந்துள்ளது, இது இதுவரை இல்லாத மிகப்பெரிய சாதனையாகும். 2023-24 நிதியாண்டில், ஆணையத்தின் முயற்சிகள் கிராமப்புறங்களில் 10.17 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கி, கிராமப்புற இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளன.

இந்த வரலாற்று சாதனைக்கு வணக்கத்திற்குரிய அண்ணலின் உத்வேகம், பிரதமர் திரு நரேந்திர மோடியின் உத்தரவாதம் மற்றும் நாட்டின் தொலைதூர கிராமங்களில் பணிபுரியும் கோடிக்கணக்கான கைவினைஞர்களின் அயராத முயற்சிகள் ஆகியவை காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

2013-14 நிதியாண்டில் ரூ.26,109.08 கோடியாக இருந்த காதி மற்றும் கிராமத் தொழில் தயாரிப்புகளின் உற்பத்தி, 2023-24 நிதியாண்டில் ரூ.108,297.68 கோடியை எட்டியது, இது 314.79 சதவீதம் அதிகரித்து, 2022-23 நிதியாண்டில் உற்பத்தி ரூ.95956.67 கோடியாக இருந்தது. தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தியே கதர் கிராமத் தொழில் ஆணையம் கிராமப்புறங்களில் வரலாற்றுப் பணிகளைச் செய்துள்ளது என்பதற்கு வலுவான சான்றாகும்.

கடந்த 10 நிதியாண்டுகளில் கதர் மற்றும் கிராமத் தொழில் தயாரிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் புதிய விற்பனையில் சாதனை படைத்துள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் கதர் துணிகளின் உற்பத்தியும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 2013-14 நிதியாண்டில் காதி துணிகளின் உற்பத்தி ரூ.811.08 கோடியாக இருந்த நிலையில், 2023-24 நிதியாண்டில் 295.28 சதவீதம் உயர்ந்து ரூ.3,206 கோடியை எட்டியது.

கடந்த 10 நிதியாண்டுகளில் கதர் துணிகளுக்கான தேவையும் வேகமாக அதிகரித்துள்ளது.

கதர் கிராமத் தொழில் ஆணையத்தின் முக்கிய நோக்கம் கிராமப்புறங்களில் அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகும். கடந்த பத்து ஆண்டுகளில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம்  இதில் சாதனை படைத்துள்ளது. 2013-14 நிதியாண்டில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு 1.30 கோடியாக இருந்த நிலையில், 2023-24 ஆம் ஆண்டில் இது 43.65 சதவீத அதிகரிப்புடன் 1.87 கோடியை எட்டியது.

புதுதில்லியில் உள்ள காதி மற்றும் கிராமோத்யோக் பவனின் வர்த்தகமும் கடந்த 10 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2013-14 நிதியாண்டில் இங்கு வணிகம் ரூ.51.13 கோடியாக இருந்த நிலையில், 2023-24 நிதியாண்டில் 87.23 சதவீதம் அதிகரித்து ரூ.95.74 கோடியாக அதிகரித்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...