வருமானவரிப் பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது
சென்னையில் உள்ள வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையரகம், டிடிஎஸ் சரகம் -3, தமிழ் சேம்பேர் ஆப் காமெர்ஸ் இணைந்து வருமானவரி வரிப்பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை சென்னையில் நடத்தின..வரிப்பிடித்தம் செய்பவர்களின் நலன் கருதி, வருமான வரித் துறை கூடுதல் ஆணையர் திரு எம் அர்ஜுன் மானிக் வழிகாட்டுதலின் கீழ், 2024, ஜூலை 5 அன்று நடைபெற்ற இந்தக் கருத்தரங்கத்தில் தமிழ் சேம்பேர் ஆப் காமெர்ஸ் தலைவர் திரு சோழ நாச்சியார் ராஜசேகர் வரவேற்புரை ஆற்றினார்.
வருமானவரி அலுவலர்கள் திரு ராஜாராமன், திரு தீபன் குமார், திரு செந்தில் குமார் ஆகியோர், வருமானவரி பிடித்த விதிகள், வருமானவரிப் பிடித்தம் செய்பவர்களின் கடமைகள், பொறுப்புகள், ஒருவேவேளை வரிப்பிடித்த விதிகளை முறையாகப் பின்பற்றவில்லை எனில் எழும் சிக்கல்கள் குறித்து விளக்கினர்
வரிபிடித்த ஆலோசகர் திருமதி ஜானகி கார்த்திகேயன், ட்ரேசஸ் (TRACES) தளம் மூலம் வருமான வரிப்பிடித்தம் செய்பவர்கள் மேற்கொள்ளவேண்டிய செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
திரு ரவிக்குமார் டேவிட் நன்றி கூறினார்
இந்த கருத்தரங்கித்தில், வருமான வரிப்பிடித்தம் செய்பவர்களின் நலன் கருதி, சென்னையில் உள்ள வருமானவரித்துறை மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள், வரிப்பிடித்தம் செய்பவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
1. வரிப்பிடித்தம் செய்பவர்களுக்கான வழிகாட்டும் துண்டுப் பிரசுரங்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), கணினி வழி நகல் வழங்கப்பட்டது
2. வரிப்பிடித்தம் செய்பவர்களுக்கான வழிகாட்டும் கையேடு (தமிழ் மற்றும் ஆங்கிலம்), கணினி வழி நகல் வழங்கப்பட்டது
3. வரிப்பிடித்தம் செய்பவர்களுக்கு வழிகாட்டும் ட்ரேசஸ் (TRACES) தளத்தில் எழும் பல்வேறு சிக்கல்களுக்குத்த தீர்வாக , பல்வேறு தலைப்புகளின் கீழ் , வருமானவரித்துறையின், அதிகாரபூர்வ யூடியூப் தளத்தில் https://www.youtube.com/@incometaxtamilnaduandpuduc9090 வெளியிடப்பட்டுள்ள காணொலிகள் குறித்த விவரங்கள் பகிரப்பட்ட்டன
4. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டிடிஎஸ் சேட்போட் (TDS CHATBOT)- ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் (iOS) பயன்பாட்டாளர்களுக்கு கிடைக்கிறது என்ற விவரம் பகிரப்பட்டது
இந்தக் கருத்தரங்கத்தில் 60க்கும் அதிகமான பல்வேறு தொழில் மற்றும் வணிகம் செய்வோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்
கருத்துகள்