முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீட் மறு தேர்வே தீர்வென்கிறது உச்சநீதிமன்றம் நாளையும் விசாரணை தொடரும்

நீட் மறு தேர்வே தீர்வென்கிறது உச்சநீதிமன்றம்.


நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் ஏன் மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி வாதாடுகிறார்? என்ற வினா எழுகிறது, தேசியத் தேர்வு முகமையானது தனிப்பட்ட அமைப்பு அதற்கும் மத்திய அரசுக்கும் என்ன தொடர்பென மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் வினா எழுப்பியுள்ளார். நீட் தேர்வில் நடைபெற்ற  முறைகேடுகள் குறித்த வழக்கை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் பார்வதிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரடங்கிய அமர்வு விசாரிக்கிறது.  வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது,  விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தனது அதிருப்தியைத் தெரிவித்தார். மேலும் 67 மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றது எப்படி எனவும், தேர்வு எழுதிய 20 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.

மேலும்  வினாத்தாள் எப்போது அச்சடிக்கப்படுகிறது, எப்படி விநியோகிக்கப்படுகிறது? இப்படி பல கேள்விகளை முன்வைத்த நீதிபதி சந்திரசூட். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்? முதல் தகவல் அறிக்கை எத்தனை பேர் மீது பதியப்பட்டுள்ளது? உள்ளிட்ட விவரங்களை  தேசியத் தேர்வு முகமை சமர்ப்பிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார். 

வழக்கு மீண்டும் 11 ஆம் தேதி நாளை விசாரணைக்கு வருகிற நிலையில் இந்தத் தேர்வை நடத்துவதே மத்திய அரசு இல்லை. தேசியத் தேர்வு முகமை என்பது தனிப்பட்ட அமைப்பு. அதன் மீதான முறைகேடுகளைத்தான் நீதி மன்றம் விசாரிக்கிறது. அப்படியான நிலையில், இந்த வழக்கில் ஏன் மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர் பங்கேற்று வாதிடுகிறார் என்ற கேள்வியை எழுப்பும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பல்வேறு சந்தேகங்களை முன்வைக்கிறார்.,

"இப்போதுதான் 'நீட்' தேர்வுத் தாள் கசிவு குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. இன்னும் பல நாட்கள் விசாரணை தொடரும் என்பது தான் உண்மை. இப்போது ஏதோ முதல் முறையாக இந்தத் தேர்வுத் தாள் கசிவு நடைபெறவில்லை. பலமுறை சிறிய அளவில் நடந்துள்ளது. மிகப்பெரிய அளவில் இப்போது தான் நடந்துள்ளதால், இந்தளவுக்கு இந்த விவகாரம் நீதிமன்றம் வரை போயுள்ளது. இந்திய அளவில் நடைபெறும் எந்த வினாத் தாள் கசிவு சர்ச்சைகளில் ஒன்றில் கூட, தமிழ்நாடு பெயர் அடிபட்டதில்லை. தமிழ்நாடு இந்த மாதிரியான காரியங்களில் ஈடுபடுவதில்லை. வடமாநிலங்களில்தான் இது தொடர்ந்து நடக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதி மறுதேர்வு ஏன் வைக்கக் கூடாதென்று கேட்டுள்ளார்.



அப்படி என்றால் 28 லட்சம் பேரும் தேர்வு எழுத வேண்டும். அது அனைவரையுமே பாதிக்கும் என விளக்கம் தந்துள்ளார்கள். அப்படியானால், யாரெல்லாம் வினாத் தாள் கசிவு விவகாரத்தில் பலனடைந்துள்ளனர் என்பதை அடையாளம் கண்டுவிட்டீர்களா?, பயனாளிகள் 100 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனரா? எனவும் நீதிபதி கேட்டுள்ள நிலையில் வெளிநாட்டில் எப்படி நீட் தேர்வு நடத்தப்பட்டது? வெளிநாடுகளுக்கு எப்படி வினாத் தாள் விநியோகம் செய்யப்பட்டது? என்றெல்லாம் நீதிபதி கேட்டுள்ளார்.

அதன்பின் தான் வெளிநாடுகளிலும் நீட் தேர்வு மையங்கள் உள்ளதென்பதே நமக்குத் தெரிகிறது. அப்படியானால், வினாத்தாள் கசிவு வெளிநாட்டிலிருந்து ஏன் நடந்திருக்கக் கூடாது? எனும் சந்தேகம் வருகிறது,இந்த மாதிரியான முடிச்சுகள் இப்போது தான் அவிழ்க்கப்படுகிறது.

இந்த வழக்கின் போக்கைப் பார்க்கும்போது மீண்டும் மறுதேர்வென்பது சாத்தியமில்லை எனத் தெரிகிறது? ஏனென்றால், ஒரு தேர்வர் 2 ஆயிரம் கட்டணம் கட்டுகிறார். அதில் 28 லட்சம் பேர் கட்டியுள்ளனர். அப்படி வந்த மொத்தத் தொகையை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்தத் தாள் கசிவு வழக்கில் மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜாரகி வாதடி வருகிறார். நீட் தேர்வை நடத்துவது அரசு அல்ல. தேசிய தேர்வு முகமைதான் நடத்துகிறது. அது சுயேச்சையான அமைப்பு. அது மத்திய அரசின் ஒரு அங்கமில்லை. அப்படி இல்லாத போது எப்படி மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கில் ஆஜராகிறார்? அதுவே புரியாத புதிர்.தேசியத் தேர்வு முகமை அமைப்பை சீர்திருத்தக் கஸ்தூரி ரங்கன் கமிட்டி போட்டுள்ளோமென மத்திய அரசு வாதிட்டுள்ளது. அரசு சாரா அமைப்பை எப்படி அரசு கமிட்டி போட்டுச் சீர்திருத்த முடியும்? அதற்கெப்படி அதிகாரம் கொடுக்கப்படும்? இந்தத் தனிப்பட்ட அமைப்பு நீட் தேர்வுக்காக இவ்வளவு பணத்தை வசூல் செய்து என்ன செய்கிறது? அதை யாருக்கு வழங்குகிறது? இந்த வினாத் தாள் கசிவு தொடர்பாகப் பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதில் ஒரு தரப்பு மறுதேர்வு வேண்டுமென வாதிடுகிறது.

இன்னொரு தரப்போ வலியுறுத்தவில்லை. ஆகவே, அனைவரையும் ஒரு அணியாகக் கூடி ஒரு மனுவைத் தாக்கல் செய்ய சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார். ஆகவே அந்தப் பொது மனுவைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். இதில் மறு தேர்வு வேண்டாம் என ஒரு தரப்பு வழக்குப் போட்டுள்ளதில்லையா? அது மத்திய அரசின் ஏற்பாடாக இருக்குமென்றே சந்தேகம் எழுகிறது" என்கிறார்.இளநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பாகவே பீகார் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்தது. அதனால் ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் இதே மாதிரியான ஒரு புகார் எழுந்தது. அந்த விவகாரம் நாடு முழுவதுமுள்ள மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியது  என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு