முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞர் பால் கனகராஜ்

நீளும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு:


பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியும் வழக்கறிஞருமான பால் கனகராஜ்





விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகி உள்ளார்.

ஆறு ஆண்டுகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்தவர், தற்போது பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாட்டின் உறுப்பினராகவும் உள்ளார் மூத்த வழக்கறிஞர். பால் கனகராஜ்  உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களை காவல் துறை உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியதன் பின்னர் 2009 ஆம் ஆண்டில  திமுகவிலிருந்து வெளியேறி பால் கனகராஜ். தமிழ் மாநில கட்சினு ஒரு கட்சி ஆரம்பித்து .





அதன் பின்னர் ஜாபர் சாதிக்கை 2017 ஆம் ஆண்டு சிறையிலிருந்து ஜாமீன் எடுத்த போது திமுகவில் இணைந்து!  பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தற்போது அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் 2020 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ஆம் தேதி பழிக்கு பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவனது கூட்டாளிகள் திருவேங்கடம் உள்ளிட்ட 21 பேர் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். அதில், திருவேங்கடம் காவல் துறை என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டார்.

நடந்த கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்குரைஞர்கள், ரவுடிகள் என பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளரான  வியாசர்பாடி எஸ்.எம்.நகரைச் சேர்ந்த தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அஸ்வத்தாமன் (வயது 32) கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் நேரடியாக ஈடுபட்ட பொன்னை பாலு உள்ளிட்ட கொலையாளிகளை அஸ்வத்தாமன்  வெளியிலிருந்து இயக்கியதை காவல்துறை கண்டறிந்தனர்.

கொலைக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்தது அஸ்வத்தாமனின் தந்தையும், வேலூர் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியான தாதா நாகேந்திரன் என்பதும் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். அதையடுத்து, அவரை சிறையில் கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்தனர். மேலும் அஸ்வத்தாமனை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என காவல்துறையினர் எதிர் பார்க்கின்றனர்.

திமுக மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த இரண்டு அரசியல் பிரமுர்கள் மீது போலீஸாரின் சந்தேக பார்வை விழுந்துள்ளது. அவர்கள் முக்கிய பொறுப்பில் உள்ளதால், அவர்களுக்கு எதிரான ஆவணங்களை திரட்டும் பணியை துரிதப்படுத்தி உள்ளனர். இதுமட்டுமல்லாது, கொலையாளிகளை ஒருங்கிணைத்ததோடு அவர்களுக்கான சட்டவிரோதப் பணப்பரிவர்தனைகளை செய்தது பிரபல தாதாவான ரவுடி சம்போ செந்தில் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது

அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு, மற்றும் 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாம். ஆனால், இதுவரை  கைதாகாமல் தலைமறைவாக உள்ளவர் மும்பையில் பதுங்கி உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளதையடுத்து தனிப்படை காவல்துறையினர் மும்பை விரைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, சம்போ செந்திலின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், தண்டுபத்து அங்கு சென்றும்  விசாரித்துள்ளனர். ஆனால், அவர் சொந்த ஊரை விட்டு வெளியேறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் மும்பையில் அவரது தொடர்பில் உள்ளோரின் விவரங்களைச் சேகரித்து அதை அடிப்படையாக வைத்து துப்புத் துலக்கி வருகின்றனர்.


கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், ராமு, சிவ சக்தி, ஹரிதரன் ஆகியோரைக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதில் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் ஆகியோர் மூன்றாவது முறையாக காவலில் எடுத்து விசாரிக்கப்படுகின்றனர். கொலையாளிகளில் முக்கியமானவர்களாக கருதப்படும் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் ஆகியோர் கடந்த இரண்டு முறை விசாரணை நடந்த போது, சில தகவல்களை மாற்றி மாற்றிக் கூறியுள்ளனர்.

ஆனால் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை விசாரித்த போது அவர்கள் வேறு விதமாக பதில் அளித்ததுடன், கொலைத் திட்டம் தொடர்பான வேறு சில புதிய தகவல்களையும் தெரிவித்துள்ளனர். எனவே தான் 3-வது முறையாக பொன்னை பாலு மற்றும் வழக்கறிஞர் அருள் ஆகியோர் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சேலம் சிறையிலிருக்கும் சம்போ செந்திலின் கூட்டாளி ஈசாவை, கட்டிட ஒப்பந்ததாரர் ஒருவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாகவும் விசாரித்துள்ளனர். அப்போது, சம்போ செந்தில் நெட்வொர்க், ஈசா அவரை சந்திக்கும் இடம், சென்னையில் அவருக்கு யார் யாரெல்லாம் மாமூல் வசூலித்துக் கொடுப்பவர்கள்?, ஆம்ஸ்ட்ராங் கொலையில் எந்தெந்த ஊரைச் சேர்ந்த கூலிப்படை கும்பல்களுக்கு தொடர்புள்ளது? என பல கோணங்களில் விசாரணை நடத்தியுள்ளனர்.

சேலம் மத்திய சிறையில் இருக்கும் சம்போ செந்திலின் மற்றொரு கூட்டாளியாகக் கூறப்படும் எலி யுவராஜையும், கட்டிட ஒப்பந்ததாரரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக, எலி யுவராஜுக்குத் தெரிந்த தகவல்களை பெற்று அதன் அடிப்படையிலும் விசாரணையை தீவிரப்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளனர்.

மேலும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான பால் கனகராஜ் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டுமென செம்பியம் காவல் நிலையத்திலிருந்து நேற்றிரவு சம்மன் அனுப்பி இருந்தனர். அதையடுத்து பால் கனகராஜ் எழும்பூரிலுள்ள தனிப்படை காவல்துறையின்அலுவலகத்தில் இன்று காலை நேரில் விசாரணைக்கு ஆஜரானார். முக்கிய பிரமுகர்கள் அடுத்தடுத்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவதால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை மீண்டும் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...