முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விளையாட்டுத்துறைகளில் கார்ப்பொரேட்டுகளின் ஆதிக்கம்

சொந்தத் தாய் நாட்டின் ஆதரவில்லை.

விளையாட்டுத்துறைகளில் கார்ப்பொரேட்டுகளின் ஆதிக்கம் புகுந்து விட்டது.

அரசியல் முதல் விளையாட்டுப் போட்டிகள் வரை யார் வெற்றி பெற வேண்டும் என்பதை முன்னரே தீர்மானிப்பது தான் இதுவும் சூதாட்டமே .


கிரிக்கெட் முதல் எல்லா போட்டிகளிலும் கார்ப்பொரேட்களின் தலையீட்டு அரசியல்.

திரைப்படத்துறைகளிலும் கார்ப்பொரேட் மாபியாக்களின் கொள்கைத் திணிப்புகள்.

இதனால், எந்த போட்டிகளிலும் உண்மைத்தன்மை இல்லாத நிலையில், இவர்களை  ரசிக்கும் மக்களே முட்டாள்களாக்கப்படுகின்றனர்.


தற்போது வினேஷ் போகத் தகுதி நீக்கம் மீதான அரசியல் குறித்த கேள்விகள் பல நியாயமானது.

 பாரிஸ் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டுமென் வலியுறுத்தியுள்ளார் அதன் விபரம் பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் செவ்வாய்க்கிழமை களமிறங்கிய இந்திய விளையாட்டு நட்சத்திரம் வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்திருந்தார். தகுதி சோதனையில் நிர்ணயித்த 50 கிலோ எடையை விட 100 கிராம் எடை அளவு அதிகமிருந்ததால், வினேஷ் போகத் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது நாட்டில் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூன்று போட்டிகளின் போதும் முன்னும் பின்னும் எடை சரியாக இருந்திருக்கிறது. ஆனால் அன்று மட்டும் 100 கிராம் எடை கூடியிருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது. பயிற்சியாளர் குறித்தும் இந்தப் போட்டியில் அவர் சந்தேகம் எழுப்பி இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியிலுள்ள அரசியல் என்ன என்பது குறித்து மக்கள் கேட்கும் கேள்விகளும் நியாயமானதே. கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்திற்கு விடப்பட்ட சவாலாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்..

ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியக் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் குத்துச்சண்டை, மல்யுத்த வீரர்களால் ஒரே இரவில் 5-6 கிலோ வரை எடையைக்குறைக்க முடியும், 100 கிராம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. பசி, தூக்கத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது எப்படி என தங்களுக்குத் தெரியும். இந்தியா விளையாட்டில் சாதிப்பதைப் பிடிக்காதவர்கள் செய்த சதியாக இதைப் பார்ப்பதாகச் சொல்லியிருப்பதை எளிதில் புறந்தள்ளி விட முடியாது.



வினேஷ் போகத்தின் கடந்த கால அரசியல் போராட்டங்களை மனதில் கொண்டு பழிவாங்கப்பட்டிருக்கிறார் என்று மக்கள் பேசுவதற்குப் பதில் அளிக்கும் வகையில்             


        இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் நெறியாளர்கள், பயிற்சியாளர்கள் மீது வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற திறமைசாலிகள் ஒருக்காலும் புறக்கணிக்கப்படக் கூடாது. வினேஷ் போகத் ஒலிம்பிக் பதக்கத்தைத் தவற விட்டிருந்தாலும் மக்களின் மனங்களை வென்றிருக்கிறார் என்பது நிதர்சனமான உண்மை எனவும் இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் உலக மல்யுத்தக் கூட்டமைப்புடன் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பேசினார். விதிகளில் சற்று தளர்வு தருமாறு கேட்டும். வினேஷ் மீது தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் சிறப்பாக விளையாடினார். அவரது பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்களே இதற்கு முழு பொறுப்பாளர்கள். வினேஷ் போகாட்டின் உடல் எடை எவ்வாறு அதிகரித்து என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். வினேஷ் போகாட்டின் பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்" என சஞ்சய் சிங் தெரிவித்தார்.

100 கிராம் என்பது 100 மில்லி தண்ணீர். அதாவது  அரை டம்ளர் தண்ணீர்.

ஒலிம்பிக் போட்டிகளில் உடல் எடையை அடிக்கடி சோதனை செய்து கொண்டேயிருப்பார்கள். போட்டியாளரின் உடல் எடையைக் கண்காணித்து அவருக்கான உணவை எடைபார்த்து அளிக்க வேண்டியது அவருடைய பயிற்சியாளரின் கடமை.  இந்த உடல் எடையை 350 கிராம் வரையில் எளிதில் குறைக்கவோ கூட்டவோ முடியும்.  முதல் நாள் இரவு உணவு காலை உணவு குடிநீர் ஆகியவற்றை சரிசெய்து அளிப்பதன் மூலம் பயிற்சியாளர் போட்டியாளரின் உடல் எடையை சரியாக பார்வை செலுத்த முடியும்.  எவ்வளவு பணம் அளிக்கப்பட்டதோ..விலை போய்விட்டார்களா. விலைக்கு வாங்குவது பலருக்கும்  கைவந்த கலை .

 ஒரே ஒரு ஆறுதல். போதை மருந்தையோ ஸ்டீராய்டையோ உணவில் கலந்து அளித்து அவரை ஒரு கிரிமினல் குற்றவாளியாக ஆக்காமல் விட்டார்களே.. ! 

அந்த தங்க மங்கை விரும்பினால் அவரை அள்ளி எடுத்து அரவணைத்து குடியுரிமை அளிக்க நாடுகள் காத்துக்கிடக்கின்றன. அழிப்பவர்கள் யாராக இருக்கும் மக்களுக்கு நினைவுக்கு வருக்கிறதா? முகேஷ் அம்பானி அனிடா ஆனந்த் அம்பானி தானே ஒலிம்பிக் குழுவின் சர்வதேச உறுப்பினர் .வெறும்  100 கிராம் அல்ல, இரண்டு கிலோ 100 கிராம் .

50 கிலோ எடை பிரிவில் அதிகம்  இரண்டு கிலோ வரை அனுமதி அதற்கு மேல் இடமில்லை.

இது முழுமையாக விஷயம் அறியாமல் ஊடக விஷமம் அதன் வன்மம்

ஆனால் சாதனையாளர்களுக்கு இது சோதனை கலந்த விளையாட்டு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...