முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்யக் கோரி தாக்கலான வழக்கு விசாரணைக்கு வருகிறது

காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்ய


உள்துறை அமைச்சகத்திற்கு (எம்ஹெச்ஏ) உத்தரவிடக் கோரி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார் . இந்த மனு ரிட் மனுவாக (PIL) தாக்கல் செய்யப்பட்டதுகாங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து சந்தேகமும், வழக்கும்,. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 9 மற்றும் இந்திய குடியுரிமைச் சட்டம், 1955 ஆகியவற்றை மீறுகிறது என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார். அவர் தனது கடிதத்திற்குப் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கடந்து விட்ட போதிலும், என்ன முடிவு எடுத்தது என்பது குறித்து எம்ஹெச்ஏவிடமிருந்து இன்னும் தெளிவில்லை எனக் கூறினார். அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து







டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடினார். அவருக்கு உதவியாக வழக்கறிஞர் சத்யா சபர்வால் இருந்தார் . இந்திய யூனியன் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ஏஎஸ்ஜி) சேத்தன் சர்மா ஆஜரானார். டெல்லி உயர்நீதிமன்றம் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியின் பொதுநல வழக்கு ரிட்டில் பொது நலனை ஒப்புக்கொண்டு, அதை பொதுநல மனுவாகப் பட்டியலிட்டது

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்யக் கோரி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரிக்கை வைத்தார் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த ரிட் மனுவை , தில்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்கிழமை பட்டியலிடுவதாகக்கூறியது. பொது நல வழக்கு (PIL). நீதிபதி சஞ்சீவ் நருலா , MHA க்கு ரிட் உத்தரவுகளை வழங்குவதற்காக எந்தவொரு " அமுலாக்கக்கூடிய அரசியலமைப்பு உரிமைகளை "  டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி நிரூபிக்கத் தவறியதைக் கவனித்து, பொதுநல வழக்குகளைக் கையாளும் ரோஸ்டர் அமர்வுக்கு வழக்குக் கோப்பை அனுப்பினார் .

எவ்வாறாயினும், இந்த விஷயத்தில் பொது நலன் சம்பந்தப்பட்டது என்ற டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியின் நிலைப்பாட்டை நீதிமன்றம் ஏற்றுக் கவனித்தது , எனவே, இந்த விவகாரம் பொதுநல வழக்குகளை கையாளும் ரோஸ்டர் பெஞ்ச் முன் ஒரு பொதுநல வழக்காக பட்டியலிடப்படும் எனக் கூறியது. PIL பட்டியலில் இருந்து தற்காலிகத் தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான டிவிஷன் அமர்வுக்கு மாற்றப்பட்டது. "தகுதிகள் குறித்து நாங்கள் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை" என்று நீதிபதி நருலா தெளிவுபடுத்தினார். அடுத்த விசாரணையில் தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் முன் செப்டம்பர் 26 ஆம் தேதி திட்டமிடப்படும் என்று டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் இடுகையில் கூறினார்:

வாதங்களின் போது, ​​இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 9 மற்றும் இந்திய குடியுரிமைச் சட்டம், 1955 ஆகியவற்றை மீறுகிறது என்று சுவாமி கூறினார்.

2015 ஆம் ஆண்டில், ராகுல் காந்திக்கு சொந்தமான BackOps என்ற பிரிட்டிஷ் நிறுவனத்தின் பொது ஆவணங்களை சுப்பிரமணியன் சுவாமி செய்தார், இது ராகுல் காந்தி பிரிட்டிஷ் நிறுவனப் பதிவேட்டில் தன்னை ஒரு பிரிட்டிஷ் குடிமகனாக அறிவித்ததைக் சுட்டிக் காட்டுகிறது. 2004 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், இந்த பிரிட்டிஷ் நிறுவன ஆவணங்களில் ராகுல் காந்தி 2003 ஆம் ஆண்டு முதல் முதல் 2009 ஆம் ஆண்டு வரை தன்னை பிரிட்டிஷ் குடிமகனாகவே அறிவித்தார் .

நிறுவனம் 2009 ஆம் ஆண்டில்  கலைக்கப்பட்டது, மேலும் ராகுல் காந்தி தனது இந்திய முகவரியையும் நாடாளுமன்ற உறுப்பினரையும் மறைத்து, இங்கிலாந்து நாட்டின் லண்டனில் வசிப்பவராகக் காட்டப்பட்டார். ராகுல் காந்தி இந்த நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரராகவும், இந்த பிரிட்டிஷ் நிறுவனமான BackOps இன் இயக்குனர் மற்றும் நிறுவனத்தின் செயலாளராகவும் பல பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளார். ராகுல்காந்தி பிரிட்டிஷ் வங்கியான பார்க்லேஸ் வங்கியின் லண்டன் கிளையில் - ரவுல் வின்சி என்ற பெயரில் டிசம்பர் 2014 ஆம் ஆண்டு வரை கணக்கு வைத்திருந்தார். கேம்பிரிட்ஜில் இருந்து அவரது எம்ஃபில் சான்றிதழும் அவரை ரால் வின்சி என்று பெயரிடுகிறது .

இந்த ஆவணங்களைப் பகிரங்கப்படுத்திய பிறகு, 2015 ஆம் ஆண்டில், மக்களவையின் நெறிமுறைகள் குழு ராகுல் காந்திக்கு ஒரு காரணம் கேட்க நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், எல்.கே.அத்வானி தலைமையிலான குழு அதைத் தொடரவில்லை. பின்னர் 2017 ஆம் ஆண்டில், டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி MHA க்கு புகார் அளித்தார், மேலும் ஏப்ரல் மாதம் 2019 ஆம் ஆண்டில்  ராகுல் காந்திக்கு ஒரு ஷோ காஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

எம்ஹெச்ஏ ஏப்ரல் 29, 2019 ஆம் தேதி அன்று ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியது , பதினைந்து நாட்களுக்குள் இது சம்பந்தமாக "உண்மையான நிலைப்பாட்டைத் தெரிவிக்க" வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தனது கடிதத்திற்குப் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கடந்து விட்ட போதிலும், அதன் மீது என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து எம்ஹெச்ஏவிடம் இருந்து இன்னும் தெளிவு இல்லை என்று வாதிட்டார். சுவாமி தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு 2019 ஆம் ஆண்டு MHA க்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...