முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கர்நாடகாவில் மத்திய அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு

பன்னாட்டு நிறுவனங்களை மிரட்டி, 8,000 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரம் வாங்க வைத்ததாக


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவரான மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா  கர்நாடகா மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மீது, பெங்களூரு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர், ஜனாதிகார சங்கர்ஷ பரிஷத் எனும் அமைப்பின் இணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர், வயது 50; இவர், ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியில் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது : 


"தேர்தல் பத்திரம் வாங்கி பாரதிய ஜனதா கட்சிக்கு நன்கொடையளிக்க வேண்டுமென பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலரான நிர்வாக இயக்குனரை மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன், அமலாக்க துறையினர், பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ஜெ. பி.நட்டா, டில்லியிலுள்ள பாரதிய ஜனதா கட்சியின், அலுவலக ஊழியர்கள், கர்நாடக மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின், முன்னாள் தலைவர் நளின்குமார் கட்டீல்,



தற்போதுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் விஜயேந்திரா, கர்நாடக மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின், அலுவலக ஊழியர்கள் மிரட்டியுள்ளனர். பணம் தராவிட்டால் அமலாக்கத் துறையின் வாயிலாக, சோதனை நடத்துவோம் எனக் கூறி, 8,000 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரம் வாங்க வைத்துள்ளனர். இது குறித்து, பெங்களூரு திலக் நகர் காவல்  நிலையத்தில் மார்ச் மாதம் 30 ஆம் தேதி புகார் செய்தேன். பெங்களூரு தென்கிழக்கு மண்டல DCB யிடம் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியில் புகாரளித்தேன். என்னுடைய புகார்  மனு மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.




CRPC, 156 / 3 ன் கீழ், மிரட்டி பணம் பறித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்த    உத்தரவிட வேண்டும். என நீதிமன்றம் மூலம் வழங்கிய புகாரில் கூறப்பட்டிருந்ததுமக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது, மேற்கண்ட புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி, நீதிபதி கே.என்.சிவகுமார், திலக்நகர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி, நேற்று மதியம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதில், முதல் குற்றம் சாட்டப்பட்டவராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், குற்றம் சாட்டப்பட்ட இரண்டாம் நபராக அமலாக்க துறை, குற்றம் சாட்டப்பட்ட 3 ஆம் நபராக மத்திய அமைச்சர் ஜெ. பி.நட்டா, A 4 ஆக நளின்குமார் கட்டீல், A-5 ஆக விஜயேந்திரா, A- 6 ஆக பிறரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.




மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறுகையில், “ மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதன் பின்னணியில், முதல்வர் சித்தராமையா இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது.





தேர்தல் பத்திரத்தில் முறைகேடு நடந்துள்ளது என்றால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் மீதும் நடவடிக்கை வேண்டும். நிர்மலா சீதாராமன் எக்காரணம் கொண்டும் ராஜினாமா செய்ய மாட்டார்,” என்றார்.




மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி கூறுகையில், “மூடா முறைகேடு வேறு, தேர்தல் பத்திர வழக்கு வேறு. தேர்தல் பத்திரத்தின் மூலம் கிடைத்த பணத்தை, நிர்மலா சீதாராமன் தன் சொந்தத் தேவைக்குப் பயன்படுத்தவில்லை.


''கட்சிக்கு தான் வாங்கிக் கொடுத்துள்ளார். அவரை ராஜினாமா செய்யச் சொல்வதற்கு, கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுக்கு தகுதியில்லை,” என்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...