முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்

இன்று அதிகாலை கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகை சிஐடி சகுந்தலா  சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். 


பெங்களூருவில் அவரது மகள் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு, நேற்று செப்டம்பர்.17 ஆம் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 84 சகுந்தலாவின் மறைவுக்கு திரை கலைஞர்கள் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குரூப் டான்சராக திரை வாழ்க்கையைத் துவங்கியவர்  திறமையால் பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

கவர்ச்சி நாட்டிய நடிகையாக திரை வாழ்க்கையை துவங்கியவர் சிஐடி சகுந்தலா. குரூப் டான்ஸர் என்று ஓரங்கட்டப்படாமல் தன் திறமையால் வில்லி பாத்திரம் ஏற்று நடித்தார், குணசித்திர நடிகை, ஹிட் ஹீரோயின் என் பல தலைமுறை ரசிகர்களிடையே வலம் வந்தவர்.


கவர்ச்சிப் பாடல்களில் நடனம் ஆடுவது மட்டுமே தனது திரை வாழ்க்கை கிடையாது என்பதில் அவர் உறுதியாகவே இருந்தார்.  சேலம் மாவட்டத்தில் அரிசிப் பாளையத்தில் பிறந்தவர், சிறுவயதிலேயே சினிமா மீதான ஆர்வத்தினால் நடிக்க வந்தவருக்கு நான்கு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும். இவருடைய வருமானத்தில் தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் தொடர்ந்து இரவு பகலாக நடித்தார்,

அறிமுகமான புதிதில் குரூப் டான்சர்களில் ஒருவராக இருந்தார் சகுந்தலா இருந்தார். அன்பே வா உள்ளிட்ட பல படங்களில் குரூப் டான்சர்களில் ஒருவராகவே நடனமாடினார். அதன் பின்னர் மெல்ல சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். அதன் பிறகு சில படங்களில் வில்லியாக மிரட்டி உயிரிழக்கிற கதாபாத்திரங்கள்.

இந்த நிலையில் மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் உரிமையாளர் சுந்தரம் மூலம் சகுந்தலாவின் களையான முகத்தையும், திறமையையும் பார்த்து அவர்கள் தயாரிப்பில் உருவான திரைப்படத்தில் கதாநாயகியாக வாய்ப்புக் கொடுத்தார். நடிகர் ஜெய்சங்கர் ஜோடியாக சி.ஐ.டி வேடத்தில் நடித்த  படம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த சிஐடி சங்கர். அதன் பிறகு சகுந்தலா, ரசிகர்களின் மனதில் சிஐடி சகுந்தலாவாக சிம்மாசனமிட்டமர்ந்தார். தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் 600 படங்கள் தொடர்ந்து நடிகையாகத் திகழ்ந்தவர்.

சிஐடி சகுந்தலா படத்தில் காதல் ததும்பும் ரொமான்ஸ் மட்டுமில்லாமல் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடித்ததால் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். அதன் பிறகு ஜஸ்டிஸ் விஸ்வநாதன், புதிய வாழ்க்கை, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் புன்னகை, சிவாஜியுடன் வசந்த மாளிகை, எம்ஜிஆருடன் இதயவீணை உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

அதன் பின்னர் வில்லி வேடத்தில் நடித்து வந்தார். 1980 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு கட்டத்தில் சிஐடி சகுந்தலா திரைப்படம் நடிப்பதை நிறுத்தியதும் தொலைக்காட்சித் தொடரில் கவனம் செலுத்தினார். சன் டிவியில் ஒளிபரப்பான குடும்பம், சொந்தம், வாழ்க்கை ஆகிய சீரியல்களிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான அக்னிசாட்சி உள்ளிட்ட பல தொடர்களில்  நடித்துள்ளார். இன்று சிஐடி சகுந்தலா காலமானாலும் ரசிகர்களின் மனதில் என்றென்றும் நினைவுக்கூறப்படுவார். அவரது சென்னை இல்லம் ராயப்பேட்டை பூரம்பிரஹாச ராவ் தெருவில் நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் வீட்டின் எதிராக உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...