முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்

இன்று அதிகாலை கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகை சிஐடி சகுந்தலா  சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். 


பெங்களூருவில் அவரது மகள் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு, நேற்று செப்டம்பர்.17 ஆம் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 84 சகுந்தலாவின் மறைவுக்கு திரை கலைஞர்கள் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குரூப் டான்சராக திரை வாழ்க்கையைத் துவங்கியவர்  திறமையால் பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

கவர்ச்சி நாட்டிய நடிகையாக திரை வாழ்க்கையை துவங்கியவர் சிஐடி சகுந்தலா. குரூப் டான்ஸர் என்று ஓரங்கட்டப்படாமல் தன் திறமையால் வில்லி பாத்திரம் ஏற்று நடித்தார், குணசித்திர நடிகை, ஹிட் ஹீரோயின் என் பல தலைமுறை ரசிகர்களிடையே வலம் வந்தவர்.


கவர்ச்சிப் பாடல்களில் நடனம் ஆடுவது மட்டுமே தனது திரை வாழ்க்கை கிடையாது என்பதில் அவர் உறுதியாகவே இருந்தார்.  சேலம் மாவட்டத்தில் அரிசிப் பாளையத்தில் பிறந்தவர், சிறுவயதிலேயே சினிமா மீதான ஆர்வத்தினால் நடிக்க வந்தவருக்கு நான்கு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும். இவருடைய வருமானத்தில் தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் தொடர்ந்து இரவு பகலாக நடித்தார்,

அறிமுகமான புதிதில் குரூப் டான்சர்களில் ஒருவராக இருந்தார் சகுந்தலா இருந்தார். அன்பே வா உள்ளிட்ட பல படங்களில் குரூப் டான்சர்களில் ஒருவராகவே நடனமாடினார். அதன் பின்னர் மெல்ல சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். அதன் பிறகு சில படங்களில் வில்லியாக மிரட்டி உயிரிழக்கிற கதாபாத்திரங்கள்.

இந்த நிலையில் மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் உரிமையாளர் சுந்தரம் மூலம் சகுந்தலாவின் களையான முகத்தையும், திறமையையும் பார்த்து அவர்கள் தயாரிப்பில் உருவான திரைப்படத்தில் கதாநாயகியாக வாய்ப்புக் கொடுத்தார். நடிகர் ஜெய்சங்கர் ஜோடியாக சி.ஐ.டி வேடத்தில் நடித்த  படம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த சிஐடி சங்கர். அதன் பிறகு சகுந்தலா, ரசிகர்களின் மனதில் சிஐடி சகுந்தலாவாக சிம்மாசனமிட்டமர்ந்தார். தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் 600 படங்கள் தொடர்ந்து நடிகையாகத் திகழ்ந்தவர்.

சிஐடி சகுந்தலா படத்தில் காதல் ததும்பும் ரொமான்ஸ் மட்டுமில்லாமல் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடித்ததால் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். அதன் பிறகு ஜஸ்டிஸ் விஸ்வநாதன், புதிய வாழ்க்கை, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் புன்னகை, சிவாஜியுடன் வசந்த மாளிகை, எம்ஜிஆருடன் இதயவீணை உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

அதன் பின்னர் வில்லி வேடத்தில் நடித்து வந்தார். 1980 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு கட்டத்தில் சிஐடி சகுந்தலா திரைப்படம் நடிப்பதை நிறுத்தியதும் தொலைக்காட்சித் தொடரில் கவனம் செலுத்தினார். சன் டிவியில் ஒளிபரப்பான குடும்பம், சொந்தம், வாழ்க்கை ஆகிய சீரியல்களிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான அக்னிசாட்சி உள்ளிட்ட பல தொடர்களில்  நடித்துள்ளார். இன்று சிஐடி சகுந்தலா காலமானாலும் ரசிகர்களின் மனதில் என்றென்றும் நினைவுக்கூறப்படுவார். அவரது சென்னை இல்லம் ராயப்பேட்டை பூரம்பிரஹாச ராவ் தெருவில் நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் வீட்டின் எதிராக உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...