முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருப்பதி ஆலய பிரசாத லட்டு அன்னத்தில் வின்னம் கலந்த அயோக்கியர்கள்

திருப்பதி ஆலயத்தில் பிரசாதம் லட்டில் மாட்டிறைச்சிக் கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றிக்கொழுப்பு

கலந்துள்ளதாக வெளியான அதிர்ச்சித் தகவல் 

பால் மற்றும் பால் பொருட்களைச் சோதனை செய்வதில் கவனம் செலுத்தும் தனியார் துறை ஆய்வகம் NDDB CALF திருப்பதி லட்டை ஆய்வு செய்த ஆய்வறிக்கையில், "திருப்பதி லட்டு மாதிரிகளில் பாமாயில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சிக் கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.



புரட்டாசியில் நடக்கும் பிரமோற்சவம் சமயத்தில் திருப்பதி லட்டுவில கலக்கப்படும் மூலப்பொருட்களை பார்த்தால் குறிப்பாக 4 வது உள்ள பொருள் பார்த்தால் சைவ உணவு மட்டுமே உண்டு வாழும் வைணவ மக்கள் மனம் வேதனைப்படுகிறது கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் வாங்கிய நெய்யில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணை கலந்துள்ளதாக தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.  திருப்பதி லட்டுக்கள் தயாரிப்பு குறித்து குற்றம்சாட்டிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு தேவஸ்தான அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பா ரெட்டி சவால் விடுத்துள்ளார் ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்கள் சந்திப்பில்,  திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.


கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை மதிக்காததை கண்டு முந்தைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும், அவரது கட்சியும் அவமானப்பட வேண்டுமென்றார். இவரது இத் தகவல் பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியின் வெங்கடரமண ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி பிரசாத லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் மாதிரி குஜராத் மாநிலத்திலுள்ள தேசிய கால்நடை ஆராய்ச்சி மைய, ஆய்வுக்கூடத்தில்  ஜூலை மாதம் பரிசோதனை செய்யப்பட்டதில் தரமற்ற நெய் விநியோகிக்கப்பட்டுள்ளதில் 



மீன் எண்ணெய், பன்றியின் கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு, பாமாயில், சோயா எண்ணெய் ஆகியன கலந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.    தேவஸ்தான செயல் அலுவலர் கூறிய தகவல்களில் இரண்டு மாதங்களுக்கு முன் 8.5 லட்சம் கிலோ நெய் விநியோகம் கோரி விடப்பட்ட டெண்டரில் அந்த டெண்டர் எடுத்த நிறுவனம் 68 ஆயிரம் கிலோ நெய் சப்ளை செய்ததில் 20 ஆயிரம் கிலோ நெய் தரமற்றதாக இருந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது நெய் சப்ளை நிறுத்தப்பட்டு, டெண்டர் நிறுவனம் மீது கிரிமினல் குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றார். முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ். கட்சியின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மறுத்துள்ளார்.


ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருமலையின் புனிதத்தையும் பல நூறு கோடி ஹிந்துக்களின் நம்பிக்கையையும் புண்படுத்தியுள்ளார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. லட்டு பிரசாதம் தொடர்பாக சந்திரபாபு நாயுடுவின் கருத்துக்களில் உண்மையில்லை. அரசியலுக்காக எந்த மட்டத்திலும் இறங்குவதற்குத் தயங்கமாட்டார் என்பது நிரூபணமாகியுள்ளது. எனத் தெரிவித்துள்ளார்.திருப்பதி ஆலய பிரசாத சைவ அன்னத்தில் அசைவ வின்னம் கலந்த அயோக்கியர்கள் மீது நடவடிக்கை விரைவில் வரும். முதலில் திருப்பதி லட்டு 

பிரசாதம் நைவேத்யம் கிடையாது பெருமாளுக்கு

இப்போது வந்தது இதெல்லாம் தற்கால வியாபாரம்"நாங்கள் அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை.- என  திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை.. ஜூன், ஜூலை மாதங்களில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் அனுப்பிய திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் கொடுத்த விளக்கமிது மாட்டுப் பால் நெய் கொழுப்பு உள்ளது அதில் கொழும்பு இருக்கக்கூடாது என்றால் அது நெய்யே இல்லை பொய். ஆந்திரா மாநிலம் திருப்பதி லட்டு விவகாரம் ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் வந்து அரசியல் செய்ய முடியாதபடி தற்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு வைத்திருக்கும் அரசியல் செக் மேட். ஏற்கனவே பலவீனமாக இருக்கும் அவரது கட்சி இன்னும் பலவீனமான இடத்துக்கு தள்ளப்படும். ஆந்திராவில் வலதுசாரி அரசியலை பலப்படுத்தும். அது புரியாமல் இங்கிருக்கும்  ட்ரிக்கர் ஹேப்பி so called  bogus தமிழக முற்போக்காளர்கள் மற்றும் போராளிகள் தங்களுக்குத் தாங்களே லட்டு கொடுத்துக் கொண்டாடிக் கொள்வது தான் புரியவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...