முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கார்த்திகேயன் நேற்று கைதான நிலையில் சொந்த ஜாமீனில் விடுவித்தது திருச்சிராப்பள்ளி நீதிமன்றம்

பழநி ஆலயத்தில் வழங்கும் பஞ்சாமிர்தம் குறித்து கருத்துத் தெரிவித்ததாக திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கார்த்திகேயன் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில்,


அவரை சொந்த ஜாமீனில் விடுவித்து திருச்சிராப்பள்ளி நீதிமன்றம்


உத்தரவிட்டது. திருப்பதி கோவிலில் லட்டு பிரஷாத சர்ச்சையைத் தொடர்ந்து, பழநி ஆலய பஞ்சாமிர்தம் குறித்து திரைப்பட இயக்குனர்  மோகன் ஜி கார்த்திகேயன் கைது செய்யப்பட்டதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர் 

பழநி ஆலயத்தில் பிரஷாத பஞ்சாமிர்தம் குறித்த கருத்தால் கைது செய்யப்பட்டார் அது சட்டவிரோதம் என கூறி மோகன் ஜி கார்த்திகேயனுக்கு  ஜாமீன் வழங்கியது 

இயக்குநர் மோகன் ஜி கார்த்திகேயனைக் கைது செய்து திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த காவலர்கள். பழநி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கார்த்திகேயன் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரை சொந்த ஜாமீனில் விடுவித்து அது தொடர்பாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்  மேலாளர் கவியரசு கொடுத்த புகாரி மனுவின் மீது, திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கார்த்திகேயன் மீது 5 பிரிவுகளின் கீழ் சமயபுரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்ததைத்.

தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில், சென்னை இராயபுரத்தில் இருந்த இயக்குநர் மோகன் ஜி கார்த்திகேயனை சமயபுரம் காவல்துறையினர் நேற்று கைது செய்து, திருச்சிராப்பள்ளிக்கு அழைத்து வந்து 3-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிபதி பாலாஜி (பொறுப்பு), “இந்த வழக்கில் கைது செய்வதற்கான முகாந்திரம் இருந்தாலும், காவல்துறையினர் முறையான கைது நடவடிக்கைகளைப் பின்பற்றவில்லை. கைது நடவடிக்கை சட்டவிரோதமானது” எனக் கூறி, அவரை சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.

 மோகன் கார்த்திகேயன் கைதுக்கு பாட்டாளி மக்கள் கட்சி  நிறுவனர் மருத்துவர்  ச.ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 மருத்துவர் ச.ராமதாஸ்:- "அரைகுறை புரிதலுடன் திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறையினர் மோகன் ஜி-யை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. அவர் கூறியதில் எந்தத் தவறும் இல்லை. பொதுநலன் கருதிக் கூறியதை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல், அங்கொன்றும், இங்கொன்றுமாக வார்த்தைகளைப் புரிந்துகொண்டு அவரைக் கைது செய்திருப்பது அநீதி" எனத் தெரிவித்தார்.


மருத்துவர் அன்புமணி ராமதாஸ்: "பழநி தண்டாயுதபாணி கோவில் பஞ்சாமிர்தம் சில வாரங்களுக்கு முன் பெருமளவில் அழிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, அது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் எழுப்பப்பட்ட சந்தேகங்களைத்தான் மோகன் ஜி சுட்டிக்காட்டியிருந்தார். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பவர்களை கைது செய்யாத தமிழ்நாடு அரசு, கிளி ஜோசியர்களையும், சமூக ஊடகங்களில் பேசுபவர்களையும் கைது செய்து வீரத்தைக் காட்டக் கூடாது" என்றார்.

பாஜக அஸ்வத்தாமன்:- "திரைப்பட இயக்குநர் மோகன்ஜி கைது கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சியில் எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்துக்குப் புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கஞ்சா, கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத காவல் துறை, இதுபோன்ற ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாகச் செய்கிறது" என்றார். மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் முயற்சி செய்து கட்சி வழக்கறிஞர் கே பாலு அவரது ஜாமீன் விடுதலைக்கு வாதம் செய்தார். இருந்த போதிலும் தற்போது அவர் மீது பழனியிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக வரும் தகவல் மேலும் அந்த கட்சியின் பிரமுகர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...