முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு மக்களின் எண்ணங்களில் 50 ஆண்டுகளாக விஷம் ஏற்றப்பட்டுள்ளதாக ஆளுநர் கருத்து

தமிழ்நாடு மக்களின் எண்ணங்களில் 50 ஆண்டுகளாக விஷம் ஏற்றப்பட்டுள்ளதாக


(தூர்தர்ஷன்) சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா மற்றும் ‘ஹிந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச்சி நேற்று அக்டோபர் மாதம்.18ஆம் தேதி சென்னையில் நடைபெற்றதில் கலந்துகொண்ட  தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து. திராவிடம் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) இணைந்த 20 ஆம் நூற்றாண்டில் வந்த கலாச்சாரப் பெயர் கொண்ட கட்சிகளின் ஆட்சி மற்றும் ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு எனும் விவகாரத்தை முன்வைத்தே அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.             

 ஆளுநர் பேசியது: “ஆயிரக்கணக்கான பள்ளிகள் மொழி சிறுபான்மையினரால் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அவ்வாறான பள்ளிகள் அமைந்துள்ள மாநிலங்களில் அந்த மாநில அரசுகள், தங்களது மொழிகளை கற்பிக்க அனுமதியளிப்பதில்லை

எனக் கூறி அப்பள்ளிகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இறுதியில், மொழி சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் அவர்களுடைய மொழிகளைக் கற்பிப்பது, அவர்களுடைய அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  தீர்ப்பளித்தது.

தமிழ்நாடு மக்களின் எண்ணங்களில் 50 ஆண்டுகளாக விஷம் ஏற்றப்பட்டுள்ளது. இத்தகைய எண்ணங்கள், நாட்டின் பிற பகுதிகளில் இருந்து நமது மக்களைப் பிரித்துள்ளது. இந்த நிலத்தின் மிகவும் சக்திவாய்ந்த மொழி சமஸ்கிருதம். தமிழ்நாட்டிலுள்ள அண்ணாமலை பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் மாபெரும் வள்ளல் பெருமக்களால் உருவாக்கப்பட்டவை. அவர்கள் எவ்வாறு இதுபோன்ற பல்கலைக்கழகங்களை உருவாக்கினார்கள்? அவர்கள் சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களைத் தொடங்கினர், தமிழ்ப் பல்கலைக்கழங்களையும் தொடங்கினர். அப்படித்தான், இந்தப் பல்கலைக்கழகங்கள் பெரிதும் வளர்ச்சி பெற்றன.



ஆனால், இன்று சமஸ்கிருதப் பாடம் முடக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை மற்றும் அழகப்பா பல்கலைக்கழங்களில் சமஸ்கிருதப் பாடமில்லை. ஒருகாலத்தில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் மிகத் தீவிரமான துறையாக சமஸ்கிருத மொழித் துறை விளங்கியது. ஆனால், இன்று அது காணாமல் போய்விட்டது. அது போன்ற செயல்கள் தான், தமிழ்நாடு நாட்டின் பிற மாநிலங்களில் இருந்து துண்டித்து, தனிமைப்படுதப்பட்ருக்கிறது. இது ஒரு பிரிவினைவாதக் கொள்கை. தமிழ்நாட்டில் வேரூன்றிக் கிடக்கும் இந்தக் கொள்கைதான், தமிழ்நாட்டை நாட்டின் பிற மாநிலங்களில் இருந்து தனிமைப்படுத்தியுள்ளது. கடந்துபோன 50 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியா என்பது எப்போதும் ஒன்றுதான். எனவே, அது ஒருபோதும் நடக்காது. இந்தியாவின் ஆன்மிகக், கலாச்சாரத் தலைநகரம் தமிழ்நாடு. சங்க காலம், பக்தி இயக்கம் தொடங்கி ஆழ்வார்களும், நாயன்மார்கள், மற்றும் நால்வர் மூலம் தான் நாட்டின் பல பகுதிகளுக்கு ஆன்மிகம், கலாச்சாரம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. புரட்சிகரமான தனது கவிதைகளால் மஹாகவி பாரதியார், சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்டது இந்த மண்ணிலிருந்துதான். இதுதான் நமது பலமே தவிர, பிரிவினைவாதக் கருத்துகளோ, நச்சுத்தன்மைக் கொண்ட கருத்துகளோ அல்ல.1947-ஆம ஆண்டில் நாம் சுதந்திரம் பெற்ற போது, இந்தியா உலகின் 6-வது மிகப் பெரிய பொருளாதாரமாக விளங்கியது. அதுவே, 2014-ஆம் ஆண்டில் அந்த நிலையிலிருந்து கீழிறிங்கி 11-வது இடத்துக்குச் சென்றுவிட்டது. வறுமை ஒழிப்பு குறித்து நாம் பேசிக் கொண்டிருந்தாலும், நாம் பின்தங்கிய நிலையில் இருந்தோம். ஆனால், கடந்த  பத்தாண்டுகளில், உலகின் 5-வது பொருளாதாராமாக வளர்ச்சிக் கண்டிருக்கிறோம்.

உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இன்று இந்தியா இருந்து வருகிறது. இன்னும் ஒருசில ஆண்டுகளில், உலகில் வேகமாக வளர்ந்து வரும் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை எட்டும். பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் குரலை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், இன்று உலகின் எந்தவொரு முடிவையும், இந்தியா இல்லாமல் எடுக்க முடியாது. இதுதான் இந்தியாவின் பலம். இவ்வாறாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. அதேநேரம், சில சக்திகள் இந்தியாவை பலவீனப்படுத்துகின்றன. அவர்கள் இந்தியாவை பின்னுக்கு இழுத்து வர விரும்புகின்றனர். இந்தியாவுக்குள் அவர்கள் வசித்துக் கொண்டே, இந்தியா குறித்து வெளியே தவறாகப் பேசுகின்றனர். மொழி மற்றும் இனத்தின் பெயரிலும், அரசியலமைப்புச் சட்டம் ஆபத்தில் இருப்பதாகவும் கூறி, அவர்கள் இந்தியாவில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்க விரும்புகின்றனர்.

தமிழை வெளி உலகுக்குக் கொண்டு சென்று பெருமை சேர்த்தது யார்? தமிழ்நாட்டிற்க்கு வெளியே எத்தனை கல்வி நிறுவனங்களில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது? ஒருவரும் செய்யவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தான் பாரதியார் இருக்கையை உருவாக்கினார். கௌஹாத்தி பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிப் பாடம் கற்பிக்கப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா, பாஸ்டன் பல்கலைக்கழங்களில் திருவள்ளுவர் இருக்கை உருவாக்கப்பட்டது. ஐ.நா.வுக்கு தமிழ் கொண்டுச் செல்லப்பட்டது. தமிழ், தமிழ் என்று கூறி இங்கே சத்தமிட்டுக் கொண்டிருப்பவர்கள் யாரும் தமிழுக்காக எதையும் செய்யவில்லை. சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மையத்தின் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், இங்கிருக்கும் சிலர் வெறுமனே தமிழைப் பற்றி பேசிக் கொண்டும், அதை வைத்து அரசியல் செய்தும் வருகின்றனர். தமிழின் பெயரால் மக்களிடம் உணர்ச்சிகளைத் தூண்டி விடுகின்றனர். இது போன்றவர்கள், நீண்ட நாட்களுக்கு வெற்றி பெற முடியாது. உலகின் பெருமையான மொழி தமிழ். அதற்காக ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் கொண்டாடப்பட வேண்டிய மொழிகள் தான்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.  இந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தெரியாமல் ஒருவர் பாடியது குறித்து ஒரு கருத்து பலரும் கூறும் நிலையில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய நிகழ்வு உள்ளது, முன்னாள் முதல்வர் காலம்சென்ற டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி 

ஆரியம் போல் வழகங்கொழிந்த என்ற வரிகள் உள்ளன அந்தப் பாடலில் உள்ள பகுதியையே நீக்கினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிட நல் திருநாடு என்பதை நீக்கி விட்டுப் பாடிய நிகழ்வில் உடன் இருந்தார். இதுவே, அது அவரவரது கொள்கை சார்ந்த நிகழ்வுகள் ஆனாலும் 

தமிழர்களே இதை பெரிதாக உணரவில்லை ஆரிய திராவிடம் பேசும் அரசியல் வியாதிகள் உங்கள் கோவணத்தை அவிழத்து விட்டு விட்டு ஏதோ ஒரு கொடிக் கூத்தாடிகள் பக்கம் கொடிப் பிடிக்கிறீர்கள்?      டி டி தமிழ் என்பது நபரா? தொலைக்காட்சி நிறுவனமா?

மதுரையில் தேர்வான மக்கள் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் இதையல்லவா தட்டிக் கேட்கும் நிலை வேண்டும்  அதை விடுத்து ஆளுநர் மீது கருத்து ஏற்புடையதல்ல, சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது 'திராவிட நல் திருநாடும்' என்ற வரி தவிர்த்து பாடப்பட்டது தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், மற்றும்  கடந்த 75 ஆண்டு காலம் ஹிந்தியை  ஆதரிக்கிறது காங்கிரஸ் அந்த காங்கிரஸ் கட்சியில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது இது நேர்மறை நிலையில், பாரதிய ஜனதா கட்சி ஒரு புதிய விளக்கத்தை அளித்திருக்கிறது.

ஏற்கனவே ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி மாதம் கொண்டாடப்படுவதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் இது ஹிந்தி திணிப்பு முயற்சி என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமும் எழுதி இருந்தார்.

அதில்,"சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இணைந்து 18-10-2024 அன்று நிறைவடையும் 'ஹிந்தி மாத' நிறைவுவிழா நடைபெறுவது குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை. சட்டமியற்றுதல், நீதித்துறை மற்றும் தகவல் தொடர்பு போன்ற அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், ஹிந்திக்கு தனி இடம் அளிப்பதும், ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. எனவே, ஹிந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற ஹிந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம் அல்லது ஒன்றிய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாதக் கொண்டாட்டங்களையும் அதேபோல் கொண்டாட வேண்டும்.

இந்திய அரசு செம்மொழியாக அங்கீரித்துள்ள அனைத்து மொழிகளின் சிறப்பையும் செழுமையையும் கொண்டாட இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று தாம் பரிந்துரைப்பதாகவும் இது அனைவரிடையேயும் ஒரு சுமுகமான உறவை மேம்படுத்தும்" எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி டிடி தொலைக்காட்சியில் ஹிந்தி மாத நிறைவு விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தொடக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியவர்கள் "தெக்கணமும் அதிர்ச்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரிகளை விட்டுவிட்டு பாடினார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுதியது. ஆளுநரை திருப்திப் படுத்துவதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு 'திராவிட நல் திருநாடு' என்ற வார்த்தையை விட்டு விட்டு பாடியதாக பேசப்படுகிறது.

இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"ஆளுநரா? ஆரியரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.

ஹிந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்! திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!" என கூறியுள்ளார்.

இந்த நிலையில் திட்டமிட்டு திராவிடம் என்ற வார்த்தை புறக்கணிக்கப்பட்ட குற்றச்சாட்டை பாரதிய ஜனதா கட்சி மறுத்துள்ளது. இது தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர் கரு.நாகராஜன்," தமிழ் தாய் வாழ்த்துப் பாடத் தெரியாதவர்களை வைத்து நிகழ்ச்சியில் பாட ஏற்பாடு செய்ததால் திராவிடம் என்ற வார்த்தை தெரியாமல் தவிர்க்கப்பட்டதாகவும், அதில் உள்நோக்கம் இல்லை" என விளக்கம் அளித்துள்ளார். DD தமிழ் பொதிகை நடத்திய ஹிந்தி பொன்விழா நிகழ்வில் அனுபவமில்லாதவர்கள் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இப்படி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது,  பாவம் ஆளுநர் அவர் பேசிய கருத்தில் தவறில்லை.  அதற்கு தூர்தர்ஷன் விளக்கமளித்துள்ளது.     இந்தியாவில் 600 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் ஒன்று படாத காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில்  ஆலப்புழையில் 4.4.1855 ஆம் தேதியில் பெருமாள் பிள்ளை – மாடத்திக்கும் மகனாகப் பிறந்தவரின்


தந்தையார் மதுரை சோமசுந்தரக் கடவுளின் நினைவாக சுந்தரர் எனப் பெயரிட்டார். நாஞ்சில் நாட்டை பூர்விகமாக கொண்டவர்கள் தொழில் நிமித்தமாக ஆலப்புழைக்கு குடிபெயர்ந்து வாழ்ந்தார்கள்.                    1891- ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணீயத்திலுள்ள பாயிரத்தில் தமிழ் கடவுள் வணக்கம் எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதிதான் இந்தப் பாடலாகும்.சுந்தரனார் இயற்றிய பாடலின் திருத்தம் செய்யப்பட்டு ஒரு பகுதிதான் இப்போது உள்ள தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலாகும். அவர் எழுதிய முழுமையான பாடலிது:

"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்

உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்

ஆரியம் போல் உலக வழக்கழிந் தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

இப்பாடல் முல்லைப்பாணி பண்ணிலும். மூன்றன் நடை தாளத்தில் அமைந்தது.  இதில் பொதுவாக பார்க்க வேண்டிய நீதி யாதெனில்: அரசியல் கொள்கைகள் பேசும் இரண்டு தரப்பினரும் முழுமையாக இந்தப் பாடல் பாடவில்லை என்பதே நாம் காணும் உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...