முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோசடியாகப் பட்டா மாறுதல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்ற பொய்யான பிரமாணப் பத்திரம் கொடுத்த வட்டாட்சியருக்கு தண்டனை வழங்கிய உயர்நீதிமன்றம்

முறைகேடாகப் பட்டா மாறுதல் செய்த திண்டுக்கல் வருவாய் வட்டாட்சியர் நீதிமன்றத்தில் பொய்யான தகவலைக் கூறியதால். உயர்நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை எடுக்க அதிரடியாக உத்தரவு



ஒரு மக்களுக்கான அரசு பணியாளர்  சட்டத்தின் ஆட்சியை மதிக்காதவர்களுடன் இணைந்து ஆவணங்களைத்  திருத்துவது மட்டுமின்றி, மோசடியான நடைமுறைகளையும் எவ்வாறெல்லாம் கையாள முடியும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணம் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை கூறியுள்ளது.

முறைகேடாக நிலப் பட்டாவை மாறுதல் செய்த விவகாரத்தில் பொய்யான தகவல்களுடன் நிதிமன்றத்திலேயே துணிந்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த நிலக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.            இப்போதுள்ள சூழலில் பட்டா மாறுதல் விவகாரங்களில் மோசடி செய்தாலே அல்லது அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்தாலே கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர், சார் பதிவாளர்கள் மற்றும் வருவாய் துறையில் பணியாளர்கள் முதல் வட்டாட்சியர் வரை அத்தனை பேருமே சிக்குவார்கள்.




லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்களை, லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் மக்கள் முன்வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். தவறு செய்யும் அரசு ஊழியர்கள் தாங்கள் மக்கள் பணியாளர்கள் என்ற நிலை மறந்து அலுவலர்கள் எல்லாம் அதிகாரிகள் மற்றும் சர்வாதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு ஜனநாயக நாட்டில் வருவாய்த் துறை சட்டங்கள், விதிமுறைகள், வருவாய் நிலையாணைகள் மற்றும் மத்திய, மாநில அரசின் அரசாணைகள்,  உச்சநீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றம் வழங்கிய முன் தீர்ப்புகள் எதுவுமே தெரியாமல், சட்டங்கள் தாங்கள் லஞ்சம் பெறுவதைப் பாதுகாக்க மட்டுமே உள்ளது எனும் தவறான சிந்தனை கொண்ட அரசு ஊழியர்கள் பெருகியதால் அதைத் தடுக்க சரியான முகாந்திரம் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கைக்கு உள்ளாக்க முடியும். அதற்குப் பல வழிகள் உள்ளன, ஆனால் அதை மக்கள் யாரும் உணராமல் உள்ள நிலையை புரிந்து இந்த லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் பயம் இல்லாமல் ஊழல் அலுவலர்களாகத் தான் பல இடங்களில் உள்ளனர். திண்டுக்கல்  மாவட்டம் மணி என்பவர் நிலக்கோட்டை வருவாய் வட்டாட்சியருக்கு  எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இப்போது அந்த வருவாய் வட்டாட்சியர் மாபெரும் சிக்கலில் சிக்கியுள்ளார். இனி அவர் ஊழல் மூலம் சம்பாதித்த பணம் அவருக்கு உதவாது, 


திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த மணி, சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், எனது பெயர் மணி, என் தந்தையின் மறைவுக்கு பின்னர் திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டியிலுள்ள அவரது வாரிசுரிமைச் சொத்துகளை நான் அனுபவித்து வருகிறேன். இந்த நிலத்தில் எனக்கும், என் தம்பிக்கும் சம உரிமைப் பாகம் இருக்கிறது. அவர் கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் உள்ளதால், அந்த நிலத்தை நானே பராமரித்து வருகிறேன். இந்தச் சொத்துகள் இதுவரை பாகப் பிரிவினை எதுவும் செய்யப்படவில்லை.


ஆனால் என் தம்பி, பாகப்பிரிவினை செய்யாத நிலத்தில் கண்டதில் சரிபாதி எனகா குறிப்பிட்டு வேறு நபர்களுக்கு கிரையம் செய்து கொடுத்து விட்டார். இந்தக் கிரைய ஆவணத்தில் நீளம், அகலம் மற்றும் நான்கு மால் மற்றும் சரியான  பரப்பளவுகள் என எதுவுமே குறிப்பிடப்படவில்லை. கிரையம் செய்த நபர் பெயரில் பட்டா வழங்குவதற்கு மனு மூலம் நில உட்பிரிவு செய்ய நான் ஆட்சேபம் தெரிவித்திருந்தேன். ஆனால், வருவாய் துறை, நில அளவைத் துறை அரசு பணி செய்யும் அலுவலர்கள் தங்கள் கடமையை மீறி தங்கள் பணியாளர்கள் விதிகளை மீறி அவருடன் சமரசமாகச் செல்லுமாறு என்னை வற்புறுத்துகிறார்கள்.  இது தொடர்பாக நான் தொடர்ந்த வழக்கில் பட்டா மாறுதலுக்கு உட்பிரிவு செய்யக் கூடாது என்றே உத்தரவானது. ஆனால், முன் தேதியிட்டு பட்டா உட்பிரிவு மாறுதல் செய்தது போல ஆவணம் மற்றும் கோப்பு மோசடியாகத் தயாரித்து, பட்டா மாறுதல் செய்து கொடுத்துள்ளனர். இது சட்டத்திற்கும், நீதிமன்ற உத்தரவுக்கும் நடைமுறைக்கும் எதிரானது. எனவே, பட்டா உட்பிரிவு மாறுதல் செய்த உத்தரவையும், அவர்கள் மோசடி செய்து பட்டாவையும் ரத்து செய்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.                                                                      -விளம்பரம்-

                           -விளம்பரம்-                இந்த மனு சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் பட்டியலிடப்பட்டு  நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்து வந்த  வழக்கில் அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-  ஒரு அரசு ஊழியர் சட்டத்தின் ஆட்சியை மதிக்காதவர்களுடன் இணைந்து ஆவணங்களை மோசடி செய்து திருத்தியதுடன், நடைமுறைகளையும் எவ்வாறெல்லாம் மீறிக் கையாள முடியும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது.

இந்த வழக்குடன் தொடர்புடைய ஆவணங்களைப் பார்க்கும் போது, நிலக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் சார்பில் இந்த நீதிமன்றத்தில் பொய் கூறி தவறான பிரமாணப் பத்திரம் மூலம் வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, பொய் சாட்சியம் அளிக்க முயன்றதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு விசாரணை தொடங்கும் போதே பொய்யான குற்றச்சாட்டுக்கு போதுமான முகாந்திரம் இருந்தால் அதில் திருப்தி கொள்ளலாம். இது தொடர்பான உத்தரவுகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டன, இந்த உத்தரவுகளை உருவாக்குவதில் வருவாய் வட்டாட்சியரின்  பங்கு உள்ளிட்டவைகள் நிரூபிக்கப்பட்டவை. சட்டப்படியான அரசு பொது ஊழியர் ஒருவர் பொது நீதிக்கு எதிராக ஆவணங்களை மாற்றம் செய்து கொடுப்பதும் சட்டப்படி தவறு தான்.இந்த வழக்கில் வருவாய் வட்டாட்சியர் தனது பிரமாண வாக்குமூலத்தில் பொய்யான தகவலைக் கூறியுள்ளார் என்பது நிரூபணமானது. அரசு பொது ஊழியரான அவர், தனது சட்டப்படியான கடமைகளில் இருந்து விலகி தனிநபர்களுக்காக நேர்மையின்றிச் செயல்பட்டுள்ளார். இதுபோன்ற செயல்களை கண்களை மூடிக்கொண்டு நீதிமன்றம் வேடிக்கை பார்க்க முடியாது. அவர், இந்த நீதிமன்றத்தையும் தவறாக வழிநடத்த முயன்றுள்ளார்.                                                                     -விளம்பரம்-

                         -விளம்பரம்-              ஆகவே மனுதாரர் நிலத்திற்கு பட்டா மாறுதல் வழங்கியது மற்றும் உட்பிரிவு தொடர்பான அனைத்து உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகிறது. நிலக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் மீது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் துணைப் பதிவாளர் ஒருவர் மூலம் மதுரை 6-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  வழக்குத் தொடர வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை அக்டோபர் மாதம் 24- ஆம் தேதி அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்" என நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். இந்தியாவில் லோக்பால் சட்டம் வலுவான நிலையில் உள்ளது, அதை அமல்படுத்த நேர்மையான நிர்வாகமோ அல்லது பொதுநலன் கருதும் மக்களோ இல்லாமல் போனதால் தான் ஊழல் பெருகும் நிலை ஆனால் நீண்ட காலம் இந்த ஊழல் வாதிகளைப் பாதுகாக்க முடியாது என்பதே இந்தத் தீர்ப்பு தரும் தற்போதைய பொது நீதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...