முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாம்சங் நிறுவனத் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ததாக சி.ஐ.டி.யு. கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் குற்றம் சாட்டும் நிலையில் 

போராட்டத்திற்காகப் போடப்பட்டிருந்து பந்தலை அகற்றிய காவலர்கள், தொழிலாளர்களைக் கைது செய்தனர்.

சாம்சங் நிறுவனத் தொழிலாளர்களின் போராட்டம்  தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார். அதில் :-  பேச்சுவார்த்தை நடத்த மூன்று அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை காரணமாக சாம்சங் நிறுவனம் பல்வேறு கோரிக்கைகளை ஏற்கவும் முன்வந்துள்ளது.

ஊழியர்கள் சம்பளத்துடன் சிறப்பு ஊக்கத்தொகையை மாதந்தோறும்  ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். பணிக்காலத்தில் தொழிலாளர்கள் உயிரிழக்க நேர்ந்தால் சிறப்பு நிவாரணத் தொகையாக ரூபாய் ஒரு லட்சம்  உடனடியாக வழங்கப்படும்.


அனைத்துத் தொழிலாளர்கள் சென்று வர குளிர் சாதன வசதிப் பேருந்துகள்  ஏற்படுத்தித் தரப்படும்.  உணவுக் கேன்டீன் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்த சாம்சங் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி.ஐ.டி.யு.வின் மூலம்  கோரிக்கை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளதால் நீதிமன்றத்தின் உத்தரவுபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

படித்த இளைஞர்களின் எதிர்கால நலன் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு. இந்தப் பேராட்டத்தை கைவிடுமாறு அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

வீடு புகுந்து கைது செய்யப்படவில்லை. விபத்து நடைபெற்ற இடத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் நீதிமன்றத்தில் பிணையில் வந்துள்ளார்கள். அரசாங்கம் யாரையும் ரிமான்ட் செய்யவில்லை. அரசுக்கு அந்த நோக்கமும் இல்லை. சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு மாற்றமாகிச் செல்லவில்லை. தமிழ்நாட்டில் நிறுவனங்கள் தொழில் தொடங்க உகந்த சூழ்நிலை நிலவுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான 

சிஐடியு அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதாகப் பார்க்கவில்லை. நாங்கள் அதை விரோமாகவும் பார்க்கவில்லை.




தொழிலாளர்களுக்கு எதிராக அடக்கு முறைகளைக் கையாளவில்லை. அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தப்படும் போது எந்த அரசும் எடுக்கும் நடைமுறை தான் எடுக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் அந்த நடைமுறையை எடுத்துள்ளது. இந்த இடங்களில் உள்ள பல நிறுவனங்களில் தொழிற்சங்கங்களை தொழிலாளர் துறை பதிவு செய்துள்ளது.



பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை பேசித் தீர்ப்பதில் தெளிவாக இருக்கிறோம்.

என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.                 


ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவன ஊழியர்களில் கம்யூனிஸ்ட் சார்ந்த ஒரு பிரிவினர் CITU சார்பில் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்ட 8 நபர்களைக் கைது செய்தது தொடர்பான ஹேபியஸ் கார்பஸ் மனுவை (HCP) சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 9, 2024 புதன்கிழமை முடித்து வைத்தது . அக்டோபர் 8, 2024 செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்ட எட்டு ஊழியர்களையும் நீதிமன்றக் காவலில் வைக்க மறுத்ததை யடுத்து விடுதலை செய்யப்பட்டதாகக் கூடுதல் அரசு வழக்கறிஞர் (AGP) ஏ.தாமோதரனின் வாக்குமூலத்தை நீதிபதிகள் பி.பி.  பாலாஜி மற்றும் ஜி.அருள் முருகன் பதிவு செய்தனர்.   191(2), 296(b), 115(2), 132, 121(1) ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பெயரிடப்பட்ட 6 பேர் அடங்கிய 30 நபர்கள் மீது செவ்வாய்க்கிழமை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளதாக APP நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில். , 351(2) மற்றும் 49 பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023.அரசு ஊழியர்களின் கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் தானாக முன்வந்து காயப்படுத்தியது, அரசு ஊழியர்களுக்கு எதிராக கிரிமினல் பலத்தை பிரயோகித்தது, கலவரத்தில் ஈடுபட்டது, ஆபாசமான வார்த்தைகளைப் பிரயோகித்தது, காவல்துறையினரை மிரட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீதானதாகும் என வாதிட்டார்.

சாம்சங் தொழிற்சாலையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளதாகவும், நள்ளிரவில் கைது செய்து காவலில் வைக்க முயற்சிப்பதன் மூலம் தொழிலாளர்களின் போராட்ட உரிமையைக் குறைக்க முடியாதென்றும் வாதிட்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...