ஜெரூஜலத்தின் இயேசுவை கடவுள் அவதாரமாகவும், அயோத்தி ராமரை கட்டுக்கதையாகவும் பார்க்கப்படும் நிலைக்கு காரணம் யார் ?
என கோயம்புத்தூர் வெராண்டா கிளப் சார்பில், 'வெஸ்டர்ன் காட்ஸ் லைட் பெஸ்ட்' சிறப்புக் கருத்தரங்கில் விவாதம், புரூக் பீல்ட்ஸ் மாலில், நேற்று முன்தினம் துவங்கி நேற்றுடன் முடிந்த கருத்தரங்கில், 'வரலாற்றில் உள்ள திரிபுகளை முதலில் நீக்குதல்' என்ற தலைப்பில், கேப்டன் பிரவீன் சதுர்வேதி பேசினார் அதில்,''தற்போதிருப்பது இந்தியாவின் உண்மையான வரலாறில்லை. போலியான வரலாறுகளுக்கு மாற்றாக, இந்தியாவின் உண்மையான வரலாற்றைக் கூற வேண்டும். போலியான பிரசாரங்களுக்குப் பதில், எதிர் பிரசாரங்கள் மட்டுமே தீர்வாகும்.
ஒரு சிலர் மட்டுமே, நமது உண்மையான வரலாறை அறிந்துள்ளனர். பல கோடி ஹிந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். யூதர்களின் இனப் படுகொலைகளுக்கு உலகம் முழுவதும் நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளன.
ஹிந்துக்கள் கொல்லப்பட்டது குறித்து யாரும் பேசவில்லை. அதற்கு ஒரு நினைவுச் சின்னமும் கிடையாது. ஹிந்துக்கள், இந்தியர்களின் வரலாறு, முகலாயர்களின் படையெடுப்பால் அழிக்கப்பட்ட ஆலயங்கள் உள்ளிட்ட பல லட்சம் உயிர் பலியுடன் தான், இஸ்லாமியப் படையெடுப்புகள் முடிந்திருக்கின்றன. ஆங்கிலக் கல்வியை ஆயுதமாக மாற்றி, பாரத நாட்டின் பெருமைகளை அழித்தனர். காலம், பிரதமர் நரேந்திர மோடியை இந்தியாவுக்குப் பரிசாகத் தந்துள்ளது,'' எனத் தெரிவித்தார். அடுத்ததாக பேசிய எழுத்தாளர் அப்பாஸ் மலாடியார் :-, ''நாம் தர்மத்தை நம்புகிறோம். தர்மம் என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை. இந்திய வரலாறு முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. தவறான, போலியான கருத்துக்களே புனையப்பட்டுள்ளன. தாஜ்மஹால் அன்பின் சின்னமில்லை. ஹிந்துக்களைப் படுகொலை செய்தவர்களின் அடையாளம் தான் தாஜ்மகால். இங்கு, இயேசு வரலாறாகப் பேசப்படுகிறார். ராமர் கட்டுக்கதையாகப் பார்க்கப்படுகிறார். அறிவியல் பூர்வமான விஷயங்களைக் கடைபிடிக்க, பல்வேறு கருத்துக்கள் ஹிந்து மதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. உலகத்துக்கு பாரதம் அளித்த நவீன அறிவியல் அறிவுக் கொடைகள் ஏராளம். அவையனைத்தும் மறைக்கப்பட்டுள்ளன,'' எனத் தெரிவித்தார். கருத்தரங்கில், பல எழுத்தாளர்களின் புத்தகங்கள் வெளியிடப்பட்டன, வெராண்டா கிளப் இயக்குனர் சரவணக்குமார், கேப்டன் பிரவீன் சவுத்திரி, வெராண்டா கிளப் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த நிர்வாகி ரத்தன் சாரதா, யோகி ஆதித்யநாத் சுயசரிதை எழுதிய சாந்தனு குப்தா, வெராண்டா கிளப் நிறுவனர் ஜகநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள்