முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆர் எஸ் எஸ் பேரணியை தளவாய் சுந்தரம் அதிமுகவில் பொறுப்புகளில் இருந்து நீக்கம்

இரண்டு நாட்கள்  முன் கன்னியாகுமரியில் ஆர் எஸ் எஸ் பேரணியை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்ததால் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என அரசியல் ரீதியாக தெரிவிக்கிறார்கள். 



 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், டெல்லியின் தமிழ்நாடு சிறப்புப் பிரதிநிதியாக பொறுப்பு வழங்கப்பட்டது தளவாய் சுந்தரம். தொடர்ந்து 20 ஆண்டுகளாக. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர், அதிமுக அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்த நிலையில் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அதிமுகவில்  எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.எடப்பாடி கே.பழனிசாமி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது கட்சியின் கோட்பாடுகள், சட்டத்திட்டங்களுக்கு முரணாக செயல்பட்டதால் தளவாய் சுந்தரம், அதிமுக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னத்தை வாங்கிக் கொடுக்க முக்கியக் காரணியாக இருந்தவரும் தளவாய் சுந்தரமே. எடப்பாடி கே.பழனிசாமியின் இந்த அறிவிப்பால் மூத்த நிர்வாகிகள் கலக்கம். ஆர்எஸ்எஸ், பாஜகவுடன் தளவாய் சுந்தரம் நெருக்கம் காட்டி வருகிறார் என்பதைக் காட்டிலும் அவர்கள் தான் இவருடன் தேடி வந்து நெருக்கம் காட்டுவதாக உள்ளூர் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கும் நிலையில் தளவாய்சுந்தரம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் RSS நடத்தும் ஊர்வலத்தை துவங்கி வைத்தார் அதேபோல் தான் "சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன் என்பதற்காக RSS ஊர்வலத்தை துவங்கி வைத்தேன்" என்று சொல்வதும் தவறு என கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் 

கட்சியில் உள்ள பலர் இதற்கு அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கியிருக்க வேண்டும், மேலும் வழக்கமாக இதுபோன்ற நீக்கம் குறித்த அறிவிப்பில் "கழக த்தொண்டர்கள் யாரும் இவரிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது" என்ற குறிப்பு இருக்கும் ஆனால் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் அப்படி ஏதும் இல்லை. விசாரணை நடத்தி விளக்கம் பெற வேண்டும் என்பதால் அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து தற்காலிகமாக விடுத்திருக்கிறார். இந்த நடைமுறை பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பேசிய பழைய நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமிக்கு கடைப்பிடிக்கப்படவில்லையே.

அன்றைக்கு தொண்டர்கள் மனநிலை பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக இருந்தது, அதிமுகவில் பொதுச்செயலாளர் ஜெ‌ ஜெயலலிதா நிலைப்பாடு மற்றும் பொதுக்குழுத் தீர்மானம் பாஜக வேண்டாம் என்பது, அதை தான் அன்று அவர் வலியுறுத்தினார் அந்தக் காலகட்டத்தில் அதிமுக பாஜகவுடன் இணைந்து பயணிக்கும் என்ற எந்தவிதமான அதிகாரப் பூர்வமான அறிவிப்பும் இல்லை. அப்பொழுது பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பேசினார் என்ற ஒற்றை காரணத்திற்காக அடிப்படை உறுப்பினர் உட்பட அணைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக அவரை நீக்கினார்கள்.

ஆனால் இன்று வழக்கறிஞர் தளவாய்சுந்தரம் மாற்று சித்தாந்தம் கொண்ட அமைப்பு ஊர்வலத்தை துவங்கி வைத்திருக்கிறார். அதற்கு யாரும்  பாஜக அடிமை கட்சி என யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக கட்சி பொறுப்புகளில் இருந்து மட்டும் தற்காலிகமாக விடுவித்துள்ளார்கள். இது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே தெரிகிறது என பலரும் பேசும் நிலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...