முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னாள் ஆந்திரப்பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வர் மீது விரிவாகக் குற்றம் சாட்டி அறிக்கை

தெலுங்கானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது


தான் கலப்பட நெய் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்திலிருந்து அந்த நெய்யை வாங்கியதாகவும், அங்கு தயாரிக்கப்பட்டதுதான் கலப்பட நெய் என்றும் தகவலையடுத்து, கலப்பட நெய் தொடர்பாக, தெலுங்கானா மாநிலத்தைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த வைஷ்ணவி நிறுவனத்துக்கு மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக இரண்டு நாட்கள் முன் தகவல்,


உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006 (FSSAI சட்டம்) ன் படி NDDB-க்கென உணவுப் பாதுகாப்பு அலுவலராக அங்கீகரிக்கப்படவில்லை, எனவே அதன் கண்டுபிடிப்புகள் செல்லுபடியாகாது என அந்த நிறுவனம் வாதிட்டது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த NDDB-கால்ஃபின் ஆய்வக அறிக்கைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD)நம்பியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவுப் பொருட்கள் தரநிலைகள் மற்றும் உணவு சேர்க்கைகள்) விதிமுறைகள், 2011ஐ மீறுவதாகக் கூறப்படும் காரணத்தால், மத்திய உரிமத்தை ஏன் இடை நிறுத்தக் கூடாது என்பதற்கான விளக்கத்தைக் கோரி, செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று, திண்டுக்கல் AR டெய்ரி ஃபுட் நிறுவனத்திற்கு FSSAI மற்றொரு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியது


fssai சட்டத்தின் கீழ் fssai சரியான நடைமுறையைப் பின்பற்றவில்லை என திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனம் வாதிடுகிறது மற்றும் நோட்டீஸ் வழங்கப்பட்ட பிறகு அதன் திண்டுக்கல் யூனிட்டிலிருந்து மட்டுமே மாதிரிகள் எடுக்கப்பட்டன என்றும் அவர்கள் தரப்பில் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். குற்றச்சாட்டுகளை மறுத்து அந்த நிறுவனம் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று பதில் மனு தாக்கல் செய்தது. இருப்பினும், செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று, மீண்டும் NDDB-ஆய்வகத்திற்கு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது, இது இப்போது திண்டுக்கல் AR டெய்ரிக்கு சவாலாக உள்ளது.




எஸ்ஐடியில் மத்திய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு அலுவலர்கள் (CBI), ஆந்திரப் பிரதேச மாநில காவல்துறையைச் சேர்ந்த இரண்டு அலுவலர்கள் மற்றும் fssai யின் மூத்த அலுவலர் ஒருவர் அடங்குவர். இந்தக் குழு சிபிஐ இயக்குனரால் கண்காணிக்கப்படும் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசால் முன்னர் அமைக்கப்பட்ட எஸ்ஐடிக்கு மாற்றாக இருக்கும். இந்த நிலையில் ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தின் தலைவர்கள் பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டனர், அதில் திருமலை திருப்பதி லட்டு பிரசாத தயாரிப்பில் கலப்பட நெய்  விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் அவதானிப்புகள் இருந்தும் முதல்வர் என். சந்திரபாபு நாயுடுவிடம் அதற்கான எந்த ஒரு வருத்தமும் இல்லை




என YSR காங்கிரஸ் கட்சியின் தலைவர் Y.S ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார். “திரு. நாயுடு தொடர்ந்து அதே பொய்களைப் பரப்பி வருகிறார்,” என ஜெகன் மோகன் ரெட்டி கடந்த வெள்ளிக்கிழமை தனது முகாம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.      சந்திரபாபு நாயுடு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியிருப்பதை உணர்ந்த உச்ச நீதிமன்றம், அவரைக் கண்டித்ததுடன்,

அரசியல் நாடகத்தில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டது, உச்சநீதிமன்றம் தீவிரமான பிறகும், லட்டு பிரசாதம் தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதென்ற பொய்களுக்கு நாயுடு விசிறி வீசுவதை நிறுத்தவில்லை . கடந்த கால YSR காங்கிரஸ் அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்து விட்டது என்று பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்.


“உண்மையில் உச்ச நீதிமன்றம் யாரை பொறுப்பாக்கியது? கடவுள் முன் நிற்க யார் பயப்பட வேண்டும்? யாருக்கு உண்மையாக பக்தி இருக்கிறது?” என்று குறிப்பிடுகிறது. என்பதை நாடறியும் என ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடுவுக்குப் பக்தி இருந்தால் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார். "முதலமைச்சர் கடவுளுக்குப் பயப்படுவதில்லை அல்லது வருத்தப்படுவதில்லை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD)நிர்வாக அலுவலரின் விளக்கம் இருந்த போதிலும் அவர் மீண்டும் மீண்டும் தவறான கூற்றுக்களில் இருந்து வருவது தெளிவாகத் தெரிகிறது" என முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறினார். முதலமைச்சரின் நடவடிக்கைகள் திருமலை திருப்பதி கோவிலின் புனிதத்தை குறைந்த மதிப்பிற்கு உட்படுத்துவது மட்டுமல்லாமல்,


கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையையும் புண்படுத்தும் என்றும், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தவறான செயல்கள் இறுதியில் தெய்வீக நீதியை எதிர்கொள்ளும் என அவர் கூறினார்.




துணை முதல்வர் கே. பவன் கல்யாண் ஜனாதன தர்மத்தைப் பற்றிய புரிதல் குறித்தும் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கேள்வி எழுப்பினார், அவர் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் செயல்களை அறிந்திருந்தும் அவரை ஆதரித்ததை சுட்டிக்காட்டினார்.


குறிப்பாக கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை பாதித்த திருமலை திருப்பதி லட்டு குறித்து திரு.நாயுடுவின் பொய்யான அறிக்கைகளுக்கு துணை முதல்வர் பவன் கல்யாண் கண்களை மூடிக்கொண்டார்.


"ஒரு மரியாதைக்குரிய கோவிலைப் பற்றிய இத்தகைய கடுமையான மீறல்களைப் புறக்கணித்து விட்டு, ஜனாதன தர்மத்தைப் பற்றி எப்படிப் பேச முடியும்" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...