முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநிலம் முழுவதும் லஞ்ச ஊழல் தடுப்பு சோதனையில் சிக்கிய சிலர் சிக்காத பலர்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியிலுள்ள ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்படுகிறது.


நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர்  சோதனை நடத்தியபோது, அங்குள்ள பணியாளர்களிடம் கணக்கில் வராத, 68,900 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாலை 4:00 மணிக்கு துவங்கிய சோதனை, இரவு, 7:00 மணி வரை நீடித்தது.ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.

வேலுார் மாவட்டம், ஆந்திரப் பிரதேச எல்லையிலுள்ள காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சோதனைச்சாவடியில் கணக்கில் வராத, 1.38 லட்சம் ரூபாயை வேலூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.


தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியிலுள்ள நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில், கணக்கில் வராத 24,300 ரூபாயை தஞ்சாவூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றி, விசாரிக்கின்றனர்சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தீயணைப்பு நிலையத்தில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய  சோதனையில் 1.24 லட்சம் ரூபாயை கைப்பற்றி, விசாரிக்கின்றனர்.திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் 85,000 ரூபாய் சிக்கியுள்ளது.

துாத்துக்குடி அருகே புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் பணம் தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபோல, மாநிலத்தின் பல நகரங்களில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர்.தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் (24.10.2024) காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில்  ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டதோடு, பல அலுவலர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த அலுவலர்களிடம் ஒரு சிலரை கையுடன் பிடித்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை  திருச்சி மாநகரைச்  சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வாகன உரிமம் பெறுவது, வாகனங்கள் பதிவு செய்வது, எப்.சி புதுப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் பெறவேண்டியுள்ள நிலையில் ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர், துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு உள்ளே நுழைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.


அந்த சோதனையில் தற்போது வரை ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் சோமசுந்தரத்திடமிருந்து ரூபாய்.20,300 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல வட்டார போக்குவரத்து அலுவலர்(பொறுப்பு) பவுலின் தெரசாவிடம் ரூபாய்.40, 200 மற்றும் அங்கு பணியாற்றும் அலுவலர்கள் சிலரிடம் என மொத்தமாக கணக்கில் வராத ரூபாய்.69,000 பணம் சிக்கியுள்ளது. அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்தபோது வட்டார போக்குவரத்து அலுவலர் பொறுப்பு வகிக்கும் பவுலின் தெரசா, “ஆரம்பத்தில் நீங்கள் எப்படி என்னைச் சோதனை செய்யலாம்.” என்று தன்னுடைய இஷ்டத்திற்கு கோபப்பட்டுள்ளார். அதையடுத்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தையும், ஒவ்வொரு சான்றிதழுக்குமான தொகையையும் குறிப்பிட்டு இணையத்தில் குறிப்பெடுத்து வைக்கப்பட்டிருந்த தொகையும் சமமாக இருந்தது.

அதே போல் அவரை கடந்த 15 நாட்களாக எப்படி கண்காணித்தோம் என்றும், அவரது கணவர் புகைப்படத்தையும் அதிகாரிகள் காணவில்லை. அதன்பிறகு தான், அவர் தான் தவறு செய்துவிட்டதாகக் கதறி அழுதுள்ளார். அவர் உட்பட அலுவலக கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்களும் தாங்கள் தெரியாமல் செய்துவிட்டதாகக் கூறி தங்களை விட்டு விட வேண்டும் என்று கெஞ்சியுள்ளனர்.

இந்த அதிரடி சோதனை குறித்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறுகையில், “குறிப்பாக ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி இந்த அலுவலகத்தில் மட்டும் பல்வேறு சான்றிதழ்களுக்கான தொகை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களிடமிருந்தும் பல்வேறு புகார்கள் வந்துள்ளன. அதன்பிறகே கடந்த 15 நாட்களாக இந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தைக் கண்காணித்துள்ளோம். தற்போது பொறுப்பு வகிக்கும் பவுலின் தெரசா நாள்தோறும், வசூலாகும் பணத்தை மாலை 5.30 முதல் 5.45 வரை ஒவ்வொரு நாளும் டீ கடை, மருத்துவமனை, பேருந்து நிறுத்தம், கோவில் என ஒவ்வொரு பகுதியிலும் வந்து நிற்கும் தனது கணவரிடம் ஒப்படைக்கும் பணியை இந்த அலுவலர் செய்துள்ளார். அதுவும் தன்னுடைய உதவியாளர் மூலம் கொண்டு சேர்த்தால் சந்தேகம் ஏற்படாது என்று அவர் அதைச் செய்தார்.மேலும் கண்காணிப்பாளர் சோமசுந்தரி அதேபகுதியில் வீடு எடுத்துத் தங்கிப் பணியாற்றி வருகிறார். ஒவ்வொரு வாரமும் திருச்சிராப்பள்ளியிலிருந்து மதுரை மேலூருக்குப் புறப்பட்டுச் சென்று அந்த வாரம் வசூலான பணத்தைப் பட்டியலிட்டு தன்னுடைய கணவரிடம் ஒப்படைத்து விட்டு வருவார். இப்படி இருவரும் தாங்கள் வசூல் செய்யும் பணத்தை தாங்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க தங்களுடைய கணவர் மூலம் பணத்தை ஒப்படைத்து வந்துள்ளனர். மேலும் சோமசுந்தரி தங்கியிருக்கும் வீட்டில் சோதனை செய்யலாமா என்று கேள்வி எழுப்பியபோது, ​​முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளார்.


இறுதியாக ஒப்புக்கொண்டார்.பவுலின் தெரசா வழக்கம் போல் நேற்று வசூல் ஆன தொகையை அவர் தனது கணவரிடம் கொடுக்காமல் தன்னிடமே வைத்துள்ளார். நேற்று அவரிடம் பணம் வாங்குவதற்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளார். இதை அறிந்த நாங்கள் அவருடைய கணவர் வருவதற்கு முன்னதாகவே சென்று அதிரடியாக சோதனை செய்தோம். ஆனால் இவர்கள் நேரடியாக லஞ்சம் வாங்கும் போது பிடிபட்டிருந்தால் கைது செய்யப்பட்டிருப்பார்கள். ஆனால் இவர்களிடம் கணக்கில் வராத பணம் இருப்பது தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் இவர்கள் கைது செய்வதிலிருந்து தப்பித்துள்ளனர். ஆனால் இவர்கள் கைது செய்யப்பட வேண்டும்” என்று கூறினார்கள்.

வழக்கமாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்தப் பண்டிகை காலங்களில் மட்டும் அதிரடி சோதனைகளில் ஈடுபடுவது போல, மற்ற நாட்களிலும் இந்த சோதனையில் ஈடுபட்டால் இன்னும் பல ஊழல் வாதிகள் லஞ்சம் வாங்கும் அலுவலர்கள் களையெடுக்கப்படுவார்கள். லஞ்சத்தை முழுமையாக ஒழிக்க லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து  செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் பதிவாளர் அலுவலகங்கள், சோதனை சாவடிகள், அரசு அலுவலகங்கள், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர்  தீவிர சோதனை நடத்தினார்கள். அந்த வகையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும்  லஞ்ச ஒழிப்புத் துறையினர் இரவு முதல் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அலுவலர்களைக் கண்டதும் தப்ப முயன்ற ஒரு புரோக்கர் சிக்கினார். தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும நிலையில் அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்பு  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு திடீர் சோதனை நடவடிக்கையில் இறங்குவது வழக்கமாகும். அந்த வகையில் பொதுமக்களிடம் இருந்து பணம் மற்றும் பொருட்களை வசூல் செய்வதை தடுக்கும் விதமாக தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர் நேற்று  செங்குன்றம், ஆலந்தூர், அச்சரப்பாக்கம், திருப்போரூர், காஞ்சிபுரம் பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதேபோல், திருச்செங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்திலும், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சார் பதிவாளர் அலுவலகத்திலும், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினார்கள். இதேபோல் கொல்லங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். வேலூர் மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில்  திடீர் சோதனை நடத்தினார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் சார் பதிவாளர் அலுவலகத்திலும் சோதனை  நடத்தினார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தை பொறுததவரை சோதனைச்சாவடி மற்றும் நகர ஊரமைப்பு அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினார்கள்.  , தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஒரு கிராம நிர்வாக அலுவலக சுவரில் நேற்று காலையில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது. அதில், சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிட சான்று, இறப்பு சான்று, வாரிசு சான்று, அடங்கல், கூட்டுப்பட்டா, தனிப்பட்டா, நத்தம் பட்டா, நத்தம் காலிமனை பட்டா ஆகியவற்றை குறிப்பிட்ட நாட்களில் பெறுவதற்கு ஒவ்வொன்றுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்ததன்படி கூட்டுப்பட்டா வாங்க 1000 ரூபாயும், தனிப்பட்டா வாஙக 4000 ரூபாய், நத்தம் பட்டா வாங்க 8000 ரூபாய், சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச் சான்று வாங்க தலா 200 ரூபாய், நத்தம் காலி மனை ரூபாய் 10000, வாரிசு சான்றிதழ் ரூபாய் 500, அடங்கல் ரூபாய் 500, இறப்பு சான்றிதழ் வாங்க ரூபாய் 300 ரூபாய் என விலைப்படியல் இருந்தது.

மேலும் கிராம நிர்வாக அலுவலரின் பெயர், செல்போன் எண்ணும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 'கூகுள்-பே' மூலம் பணம் பெறும் வசதியும் உண்டு என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த கிராம மக்கள் மகிழ்ச்சி சி அடைந்தனர். கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒட்டப்பட்டு இருந்த விலைப்பட்டியல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.



இதையடுத்து அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர் உடனே தூத்துக்குடி மாவட்ட வருவாய்த்துறையினர் விரைந்து சென்று, கிராம நிர்வாக அலுவல சுவரில் ஒட்டப்பட்டு இருந்த விலைப்பட்டியலை அகற்றினார்கள்.அது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பிரபாகன் கூறுகையில்,



"யாரோ மர்மநபர்கள் வேண்டுமென்றே, எங்களை களங்கப்படுத்தும் நோக்கில் விலைப்பட்டியலை ஒட்டியிருக்கிறார்ககள். அரசு விதிகளின்படியே அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது" என்றார். (ஆனால் நாங்கள் லஞ்சம் வழங்குவதில்லை  என கூறவில்லை ) இதுதொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் விசாரணை நடத்த வேண்டிய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை ஆழ்ந்த தூக்கத்தில் குரட்டை வருகிறது.அரூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் ரூபாய். 3.57 லட்சம் பறிமுதலானது.


அரூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் புதன்கிழமை நடத்திய திடீா் சோதனையில் 

அரூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சாா் பதிவாளா்  அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளா் பெருமாள் தலைமையிலான ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீா் சோதனை மேற்கொண்டனா். புதன்கிழமை மாலை 4 மணி முதல் முன் இரவு வரையில் நீடித்த சோதனையின்போது அரசு கணக்கில் வராத ரொக்கம் ரூபாய். 3, 57, 600-தை  பறிமுதல் செய்தனா்.


கணக்கில் வராத பணம் ரூபாய். 3.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அரூா் சாா் பதிவாளா் உள்ளிட்ட அலுவலக ஊழியா்களிடம் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...