முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நல்லிரவில் தாக்குதல் ஹிஸ்புல்லா உளவு படை மையம் தரைமட்டமானது

ஹிஸ்புல்லா உளவு படை மையம் தரைமட்டமானது  நள்ளிரவில் இஸ்ரேல்  தாக்குதல் லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் இப்போது தீவிரப்படுத்தியுள்ளது.


நேற்று  தினம் இரவு நடந்த வான்வழித் தாக்குதல்களில் ஹிஸ்புல்லாவின் உளவுப் பிரிவு தலைமையகம் தாக்கப்பட்டது. ஹிஸ்புல்லாவின் இரண்டாம் தலைவராகக் கருதப்பட்ட சஃபிதீன் என்பவர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தாக தகவல் வெளியானது. மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் மீது ஒரு பக்கம் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரமாக நடத்திய நிலையில், அடுத்த கட்டமாக ஹிஸ்புல்லா மீது தனது பார்வையைத் திருப்பியது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படைகள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக முக்கிய இலக்குகளைக் கண்டறிந்து குறிவைத்து வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. உளவுப் படை: நேற்றிரவு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள பல இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தியதில் குறிப்பாக பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் உளவுத்துறைத் தலைமையகத்தைத் தாக்கியதாக இஸ்ரேல் அறிவித்தது. இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் புலனாய்வுப் பிரிவின் மிக மூத்த ஹிஸ்புல்லா அதிகாரியான முகமது அனிசியைக்  கொன்றதாக இஸ்ரேல் கூறியது. ஏற்கனவே கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் வாரிசாகக் கருதப்படும் மூத்த ஹிஸ்புல்லா அதிகாரி ஹஷேம் சஃபிதீன் என்பவரும் இதில் கொல்லப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி இருப்பினும், இந்தத் தகவலை இன்னும் இஸ்ரேலும் உறுதி செய்யவில்லை.

ஹிஸ்புல்லா அமைப்பும் இது குறித்து எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் பல சர்வதேச ஊடகங்களில் இந்தத் தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்டுள்ளபடி வியாழன் நள்ளிரவில் பெய்ரூட்டை குறிவைத்து இஸ்ரேல் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ரகசிய சுரங்கத்தில் ஹிஸ்புல்லா அதிகாரிகளின் கூட்டத்தில் சஃபிதீன் கலந்து கொண்ட நிலையில், இதில் அவர் கொல்லப்பட்டார். லெபனான் நாட்டில் இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இது தான் மிக பெரியது என்றும் சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. இந்தத் தாக்குதலில் மொத்தம் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

நஸ்ரல்லா இருந்த போதே ஹிஸ்புல்லாவின் இரண்டாம் தலைவராக சஃபிதீன் பார்க்கப்பட்டார். நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்ற நிலையில், சஃபிதீன் கட்டுப்பாட்டில் மொத்தமாக ஹிஸ்புல்லா அமைப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் அவரையும் கொன்றுள்ளது இஸ்ரேல்.

 2017ஆம் ஆண்டில் அமெரிக்காவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர் தான் ஹஷேம் சஃபிதீன். ஹிஸ்புல்லா அரசியல் விவகாரங்களில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்துள்ள சஃபிதீன், ஹிஸ்புல்லா ஜிஹாத் கவுன்சிலில் உறுப்பினராகவும் இருக்கிறார். இந்த ஜிஹாத் குழு தான் ஹிஸ்புல்லாவின் ராணுவ நடவடிக்கைகளை நிர்வகிப்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் ஆட்சியுடன் நேரடியாகவே உறவுகளைக் கொண்ட ஒரு தலைவரா சஃபிதீன் கருதப்படுகிறார்.

 நேற்றிரவு பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தாஹியே மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. இது ஹிஸ்புல்லாவின் கோட்டையாகக் கருதப்படும் பகுதியாகும். இந்தப் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் சொல்லி சில மணி நேரத்தில் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலுக்கு உதவி செய்ய அமெரிக்க ராணுவத்திற்கு ஜோ பைடன் உத்தரவிட்ட பின்னர் 

இஸ்ரேலைக் குறிவைத்து ஏவப்படும் ஏவுகணைகளைத் தகர்க்குமாறு அமெரிக்கப் படைகளுக்கு பைடன் உத்தரவிட்டுள்ளார். ஈரானின் 80 சதவீதம் ஏவுகணைகளை இஸ்ரேலில் இலக்கைத் தாக்கி உள்ளதாகவே உலகப் போர் வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்கெல்லாம் கண்டிப்பாக இஸ்ரேல்  கொடுக்கும் பதிலடி போரைக் கூட உருவாக்கும். ஏற்கனவே பல நாடுகள் போரில் ஈடுபட்டு வரும் நிலையில். இஸ்ரேலின் பதிலடி வெறும் போரை மட்டும் உருவாக்காது. அது உலகப்போரையே உருவாக்கும் நிலை தான் தற்போது தெரிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...