முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தேவி மாங்குடி இரண்டாம் மேல்முறையீட்டு மனு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி விரிவான விசாரணைக்கு வருகிறது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்தில் அடங்கிய சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் தோ்தல் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் மாதம். 16-ஆம் தேதியில் விசாரணை நடைபெறும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் தோ்தல் வாக்குகள் எண்ணிக்கை மற்றும் வெற்றி பெற்றவர்கள் குறித்து அலுவலர்கள் செய்த குழப்பம் காரணமாக முன்பே உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் அது தேர்தல் விசாரணை நீதிமன்றத்தில் விசாரணைக்கு உத்தரவிடவே வழக்கு சிவகங்கை தேர்தல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது


அதில் வழங்கப்பட்ட தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுவை தேவி மாங்குடி தாக்கல் செய்தார். அதில் விசாரணை நடத்து தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அது மேல்முறையீடு தாக்கல் செய்த பின்னர் விவகாரம்  சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு பின்னர் வழங்கிய தீர்ப்பை  எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில்



டிசம்பர் மாதம். 16-ஆம் தேதியில்  விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.      காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தோ்தலில் காரைக்குடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் மாங்குடியின் மனைவி தேவியும்,  ஜயப்பன் என்பவர் மனைவி பிரியதா்ஷினியும் மற்றும் சிலரும் போட்டியிட்டனா். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த இந்தத். தோ்தலில் 62 வாக்குகள் வித்தியாசத்தில் தேவி வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியானது. மறு நாள் வாக்கு எண்ணிக்கையில் தேவியை எதிா்த்துப் போட்டியிட்ட பிரியதா்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.



இப்படி ஒரு முறை தேவியும் மற்றொரு முறை பிரியதா்ஷினியும் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. பின்னா் தேவி வெற்றி பெற்றதாக மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்தது.


ஆனால், இருவருக்குமிடையேயான இந்த தோ்தல் விவகாரம் மாவட்ட தோ்தல் சிறப்பு நீதிமன்றத்திற்கு விசாரணை சென்றது. இதில் தேவியின் வெற்றி செல்லாது என்றும், அவரை எதிா்த்துப் போட்டியிட்ட பிரியதா்ஷினியின் வெற்றி செல்லும் என தேர்தல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.





இதை எதிா்த்து தேவி சென்னை உயா்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்தாா். இதில் சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவியாக உள்ள தேவியின் வெற்றி செல்லாது எனவும்


பிரியதா்ஷினியின் வெற்றி செல்லும் என சென்னை உயா்நீதிமன்றம் மதுரை கிளை நவம்பர் மாதம்.14- ஆம் தேதியில் உத்தரவிட்டது. தற்போது இதை எதிா்த்து மேல்முறையீட்டு மனுவை தற்போது காரைக்குடி சட்ட மன்ற உறுப்பினர் மாங்குடி மனைவி தேவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அதில் தேவி சாா்பில் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ஆஜரானாா். அவா் குறிப்பிடுகையில்,



‘‘இந்தத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2020 ஆம்  ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற போது முதலில் 62 வாக்குகள் வித்தியாசத்தில் தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. பின்னா் அடுத்த நாள் காலையில் மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கை என்ற பெயரில் தலைவராக வெற்றி பெற்ற தேவியை தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இது ஊழல் மற்றும் முறைகேடாகும். மேலும் இந்த விவகாரத்தில் சில வாக்குப் பெட்டிகள் திறக்கப்படவே இல்லை. இந்த நிலையில் கூட்டுத் தொகையிலும் வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளது. இதனை சென்னை உயா்நீதிமன்றம் மதுரை கிளை கருத்தில் கொள்ளவில்லை.



வாக்குகள் எண்ணப்படாமல் விடுபட்டதை ஒரு விஷயமாக உயா்நீதிமன்றம் கருதவில்லை. எனவே, இதில் முறைகேடு நடைபெற்றுள்ளது எனக் கூறுகிறோம். மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கையை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோருகிறோம்’’


என வாதிடப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் கவனிக்கத் தவறிய விபரங்கள் பட்டியலிடப்பட்டு அதன் சரியான Grounds ஐ மேல்முறையீட்டு விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் கருத்தில் கொள்ளவில்லை. வாக்குகள் எண்ணப்படாமல் விடுபட்டதை ஒரு விஷயமாக உயா்நீதிமன்றம் கருதவில்லை. எனவே, இதில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்பதால் மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கையை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோருகிறோம்’’

என வாதிடப்பட்டது. முதலில் வெற்றி பெற்ற சான்றிதழ் தேவிக்கு வழங்கிய பின்னர் அடுத்ததாக மறுநாள் 



வெற்றி பெற்றதாகக் கூறப்பட்ட பிரியதா்ஷினி என்பவர் தரப்பும் உச்சநீதிமன்றத்திற்கு கேவியட் மனு தாக்கல் செய்து வந்தது. இவா்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி தோ்தல் ஆணையம் செயல்பாட்டை கீழமை தேர்தல் விசாரணை நீதிமன்றம் உறுதி செய்துள்ளதனால், இதில் மறுவாக்கு எண்ணிக்கை என்பதே தேவையில்லை எனவும் வாதிட்டாா். இதைத் தொடா்ந்து நீதிபதிகள் இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு வருகின்ற டிசம்பா் மாதம் 16 -ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனா்.

முன்னதாக நீதிபதிகள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு வழக்கை தள்ளி வைப்பதாகக் கூறினா். அப்போது வழக்குரைஞா்கள் டிசம்பா் மாதமே விசாரணைக்கு எடுக்குமாறு கோரியதை அடுத்து நீதிமன்றம் டிசம்பா் மாதம் 16- ஆம் தேதிக்கு பட்டியலிட சம்மதித்தது. இந்த நிலையில் மேற்கண்ட சங்கராபுரம் ஊராட்சி மன்றத்தை காரைக்குடி மாநகராட்சியின் நிர்வாக எல்லைப் பகுதியில் இணைந்து அரசாணையும் வெளியிடப்பட்ட நிலையில் அதற்கான மாநகராட்சியின் நிர்வாக ஆணையர் பணி நியமனம் செய்யப்பட்ட நிலையில் புதிய மேயர் அடுத்த தேர்தல் மூலம் தேர்வாக முடியும், தற்போது நகராட்சி தலைவர் மற்றும் இணைந்த பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளின்  தலைவர்கள் அந்த இடத்தில் அதே பொறுப்புகளை கவனித்து வருகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...