முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முறைகேடாக சொத்து சேர்த்த எட்டு அரசு அலுவலர்களின் இடங்களில் லோக் ஆயுக்தா சோதனை

முறைகேடாக சொத்து சேர்த்ததாக வந்த தகவலின் அடிப்படையில், எட்டு அரசு அலுவலர்களின் வீடுகள், மற்றும் அலுவலகங்களில் கர்நாடகா மாநிலத்தின் லோக் ஆயுக்தா


காவலர்கள் நேற்று முன்தினம் அதிரடியாக, சோதனை நடத்தியதில், கணக்கில் காட்டப்படாத 22.51 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், நகைகள், சொகுசு கார்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ஊழலை ஒழிக்க லோக் பால் சட்டம் பிரிவு 63 ன்படி கர்நாடகாவில் லோக் ஆயுக்தா அமைப்பு நிறுவப்பட்டது. அரசு துறைகளில் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கும் முதல்வர் முதல் அலுவலர்கள், ஊழியர்களை கண்காணிப்பு செய்து பிடித்து, தண்டனை பெற்றுத் தருகிறது. ஆனாலும், ஊழல் செய்து லஞ்சம் வாங்கும் அலுவலர்கள் திருந்தவில்லைலோக் ஆயுக்தாவுக்கு வந்த பல்வேறு புகாரை அடுத்து, நேற்று முன்தினம் அதிகாலை பெலகாவி, ஹாவேரி, தாவணகெரே, கலபுரகி, மைசூரு, ராம்நகர், தார்வாட் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலர்கள் எட்டு பேரின் வீடுகள், மற்றும் அலுவலகங்களில், சோதனை நடத்தினர்.பெலகாவியில் கிராமக் கணக்காளர் விட்டல் சிவப்பா; வணிகவரித் துறை உதவி கமிஷனர் வெங்கடேஷ் மஜும்தார்; கிராம குடிநீர், வணிக துணை பிரிவு உதவி இன்ஜினியர் காசிநாத் பஜந்த்ரி; தாவணகெரேயில் வர்த்தகம், தொழில்துறை உதவி இயக்குனர் கமல்ராஜ்.பீதரில் மாவட்ட பயிற்சி மைய உதவி இயக்குனர் ரவீந்திர குமார்; மைசூரு மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் நாகேஷ்; ராம்நகர் கே.எஸ்.ஆர்.டி.சி., மெக்கானிக்கல் இன்ஜினியர் பிரகாஷ்; தார்வாடில் கர்நாடக தொழில் பகுதி மேம்பாட்டு வாரிய உதவி செயல் இன்ஜினியர் கோவிந்தப்பா ஆகிய எட்டு பேரின் வீடு, அவர்கள் சார்ந்துள்ள உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள் என, மொத்தம் 37 இடங்களில் சோதனை நடத்தினர். பெங்களூருவில் வணிக வரி துறை உதவி கமிஷனராக உள்ள வெங்கடேஷ் மஜும்தார், பெலகாவியில் பணியிலிருந்த போது அங்கு வாங்கிய வீட்டில் சோதனை நடத்தி, ரொக்கம், ஆவணங்களை பறிமுதல் செய்தனர் அதுபோன்று பெலகாவியின் நிப்பானியில் உள்ள போரகான் கிராமக் கணக்காளர் விட்டல் சிவப்பா வீடு, பண்ணை வீடுகளிலும் சோதனை நடத்தினர். இவர் ஏற்கனவே, சிக்கோடியில் இருந்து பாகல்கோடிற்கு முறைகேடாக 1.10 கோடி ரூபாய் கொண்டு வந்ததாகக் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, அவரின் வீட்டில் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரொக்கம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தார்வாடில் கர்நாடக தொழில்பகுதி மேம்பாட்டு வாரிய உதவி செயல் இன்ஜினியர் கோவிந்தப்பாவுக்கு சொந்தமாக, சவதத்தியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ஆவணங்களை பறிமுதல் செய்தனர் ஹாவேரி பசவேஸ்வர நகரில் உள்ள கிராம குடிநீர், வணிக துணை பிரிவு உதவி இன்ஜினியர் காசிநாத் பஜந்த்ரி வீட்டிற்கு நேற்று முன்தினம் அலுவலர்கள் சென்றனர். ஜன்னல் வழியாக லோக் ஆயுக்தா காவலர்கள் வந்ததைப் பார்த்த காசிநாத், 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணக்கட்டுகளை கட்டி, ஜன்னல் வழியாக வீசினார். கதவைத் திறந்த பின் உள்ளே வந்த அலுவலர்கள், ஜன்னல் வழியாக வெளியே வீசப்பட்ட பணத்தைப் பார்த்தனர். அத்துடன், காசிநாத்தின் படுக்கை அறையில் இருந்த 2 லட்சம் ரூபாய் என மொத்தம் 11 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். மைசூரு மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் நாகேஷின், ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள வாடகை வீடு, ஷிவமொக்கா, பெங்களூரில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தி, ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். தாவணகெரேயின் வர்த்தகம், தொழில்துறை உதவி இயக்குனர் கமல்ராஜ் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, அவருக்கு சித்ரதுர்கா, தாவணகெரேயில் பல சொத்துக்கள், மூன்று பிளாட்கள், வீடு இருப்பது தெரியவந்தது. அத்துடன் அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், இன்னோவா கார் குறித்த ஆவணங்களும் சிக்கின. இந்த சோதனையில், எட்டு அலுவலர்கள் தொடர்புடைய இடங்களிலும், 22.51 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகைகள், சொகுசு கார்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ஹாவேரியில் பெண்கள், குழந்தைகள் நலத்துறை துணை இயக்குனர் சீனிவாஸ் அல்தர்டி வீட்டிற்கு அலுவலர்கள் சென்றபோது, வீடு பூட்டியிருந்தது. அவரது மொபைல் போனில் லோக் ஆயுக்தா காவலர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, தன் தாயார் இறந்துவிட்டதால், யாத்கிருக்கு சென்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்லோக் ஆயுக்தாவினரும், விஷயத்தை கூறினர். அவரும் ஹாவேரி வருவதாக உறுதி அளித்தார். இதனால், நேற்று முன்தினம் காலை 6:00 மணி முதல் பூட்டிய வீட்டின் வெளியே, லோக் ஆயுக்தா காவலர்கள் நின்றிருந்தனர். வெளியில் இருந்தபடியே காலை, மதிய உணவு சாப்பிட்டனர். ஆனால், வருவதாக கூறிய ஸ்ரீனிவாஸ் இரவு வரை வரவே இல்லை. கர்நாடகாவில் நேற்று நடந்த சோதனையில், எட்டு அலுவலர்கள் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில், 22.51 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகைகள், சொத்து ஆவணங்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் விபரம் வருமாறு:பெலகாவியில் கிராம கணக்காளர் விட்டல் சிவப்பா ரூ.1,08,52,244


வணிக வரி துறை உதவி கமிஷனர் வெங்கடேஷ் மஜும்தார் ரூ.2,21,43,900

ஹாவேரியில் கிராம குடிநீர், வணிக துணை பிரிவு உதவி இன்ஜினியர் காசிநாத் பஜந்த்ரி ரூ.3,20,72,000

தாவணகெரேயின் வர்த்தகம், தொழில்துறை உதவி இயக்குனர் கமல்ராஜ் ரூ.1,99,35,000

பீதரில் மாவட்ட பயிற்சி மைய உதவி இயக்குனர் ரவீந்திர குமார் ரூ.4,22,92,204

மைசூரு மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரி நாகேஷ் ரூ.2,72,74,716

ராம்நகர் கே.எஸ்.ஆர்.டி.சி., மெக்கானிக்கல் இன்ஜினியர் பிரகாஷ் ரூ.4,26,00,700

தார்வாடில் கர்நாடக தொழில்பகுதி மேம்பாட்டு வாரிய உதவி செயல் இன்ஜினியர் கோவிந்தப்பா ரூ.2,79,22,300

மொத்தம் 22,50,93,064 பணம் கைப்பற்றிய நிலையில் இனி வழக்கு விபரங்கள் தெரியவரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...