முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் விளக்கம் ஏற்று ஒருவாரம் வழக்கு தள்ளிவைப்பு

தேசிய பாரம்பரியச் சின்னமான, விஜய வரதராஜப் பெருமாள் கோவிலை பாதுகாக்க, அறநிலையத் துறை அலுவலர்கள் முனைப்புக் காட்டாதது துரதிருஷ்டவசமானது.


கோவில் தொடர்பாக, நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை, முறையாக அமல்படுதாவிட்டால், அறநிலையத் துறை ஆணையரை நீக்கம் செய்ய உத்தரவிட நேரிடும்' என, சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்தது.


செங்கல்பட்டு மாவட்டம், பாபுராயன்பேட்டை கிராமத்தில், ஸ்ரீ விஜய வரதராஜப் பெருமாள் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது.  வடகலை வைணவ சம்பிரதாயப்படி, திருப்பணிகள் செய்து,



கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் பி.ஜெகந்நாத் பொது நல மனு தாக்கல் செய்தார் விசாரித்த உயர் நீதிமன்றம், கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த, 12 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,




2020 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, வழக்கறிஞர் பி.ஜெகந்நாத், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் இராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்த போது,


வழக்கறிஞர் ஜெகந்நாத் நேரில் ஆஜராகி, ''பழமையான கோவில், தற்போது மிகவும் சிதிலமடைந்துள்ளது. கோவிலைச் சுற்றி முட்செடிகள் முளைத்து, புதர் மண்டியுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை கோவில் நிர்வாகம் செய்து வரும் ஹிந்து சமய அறநிலையத் துறை கும்பாபிஷேகம் நடத்த முயற்சி எடுக்கவில்லை,'' எனக் கூறி, அதற்கான புகைப்படங்களை தாக்கல் செய்தார்.


அதைப் பார்த்த முதல் பெஞ்ச், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர், பிற்பகலில் உயர்நீதிமன்ற பெஞ்ச் முன் ஆஜராக உத்தரவிட்டது; மதியம் 2.15 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்தது.

வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, அறநிலையத் துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் ஆஜரானார். அறநிலையத்துறை தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, 'கோவில் முழுமையும் ஆய்வு செய்யப்படும். ஒரு வாரத்துக்குள் சீரமைக்கும் பணிகள் துவக்கப்படும். பணிகள் முடிக்கப்பட்டு, அது தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படும்' எனத் தெரிவித்தனர்.

அதையடுத்து நீதிபதிகள் தெரிவித்ததாவது:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இரண்டு ஆண்டுகளாக நிலுவையிலுள்ளது. பொது நல வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்படியிருந்தும், இந்த விஷயத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை அலட்சியத்துடனும், மந்த கதியிலும் செயல்பட்டுள்ளது. இது ஏமாற்றமளிக்கிறது.

மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்த புகைப்படங்களைப் பார்க்கும்போது, கோவில் குளம், வசந்த மண்டபம், மிகவும் சிதிலமடைந்துள்ளது நன்றாகவே தெரிகிறது. ஆலயம் சீரமைப்பு செய்யாவிட்டால் ஆணையரை நீக்கம் செய்யும் படியும், இணை ஆணையருக்கு, எந்தவிதமான பதவி உயர்வும் வழங்கக்கூடாது என்றும், உத்தரவு பிறப்பிக்க நேரிடும்.


எனவே, உடனே ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், கோவிலை ஆய்வு செய்து, பணிகளை விரைவில் துவக்க வேண்டும். மேலும், புதர்களை அகற்ற வேண்டும். பணிகள் நடந்துள்ளதா என்பதை, மனுதாரர் நேரில் சென்று, புகைப்படங்கள் எடுத்து, நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கலாம்.

விஜய வரதராஜ பெருமாள் கோவிலில் இதுவரை நடந்துள்ள சீரமைப்புப் பணிகள் என்ன, அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்பது குறித்து, அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் மாதம் 29 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர். ஐந்து கோபுரங்களும் அதன் பிரகாரங்களும் கொண்ட சிறப்புற்ற கோயில் கவனிப்பின்மையால் காலப்போக்கில் சிதிலமடைந்தது. 2013 ஆம் ஆண்டு புனர்நிர்மாணப் பணிக்குழு பக்தர்களாலும் கிராமத்தாராலும் துவக்கப்பட்டது.     தற்போது சென்னை உயர்நீதிமன்றம்  W.P. 9692 / 2020 ன் படி வழக்கறிஞர் பி.ஜெகநாத் முயற்சியில் டிவிஷன் பெஞ்ச் உத்தரவு மூலம் ஹிந்து சமய அறநிலையத்துறை பணிகள் துவங்க வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் உற்சவர் ஆண்டுக்கொருமுறை இங்கு எழுந்தருள்வது வழக்கம். பாபுராயன், காடாக இருந்த இடத்தை மாற்றியமைத்த போது அங்கே புற்று ஒன்றில் பசு தானாகவே பால் சொரிவது கண்டு அந்த இடத்தை சுத்தம் செய்து நிலத்தை அகழ்வு  செய்யவே அங்கு இரண்டு ஆஞ்சநேயர் சிலைகள் வெளிப்பட்டன.   விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட திருத்தலமே பாபுராயன்பேட்டை ஸ்ரீ விஜயவரதராஜப் பெருமாள் திருக்கோவில். தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகில் பாபுராயன்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள விஜய வரதராஜ பெருமாள் கோவில்.                                      சுமார் 500 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பிரமாண்டமான பெருமாள் கோவிலாகும்.                               கோவில் சிதிலமடைந்து விட்டாலும், தினமும் ஒரு காலப் பூஜை நடக்கிறது,                             மூலவர் விஜய வரதராஜர் , தாயார் விஜயவல்லி தாயார் என அழைக்கப்படுகிறார், கோவில் 16 ஏக்கர் நிலப் பரப்பளவில் அமைந்துள்ளது. மிகப்பெரிய பரப்பளவில் அமைதியான சூழ்நிலையில் அழகாக அமைந்திருக்கும் இந்தக் கோவில் அதன் முக்கிய கடந்த காலத்தில் எப்படி இருந்திருக்கும் என கற்பனை செய்தால் தற்போது நிலை காண வருத்தமே மிஞ்சும்.                      கோவிலுக்கான மானியம் நிலங்கள் அதிகமாக இருந்தும், கோவில் பராமரிப்பின்றி உள்ளது. இது இப்போது HR & CE துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சென்னை - திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலையில் உள்ள தொழுப்பேடுக்கு மேற்கே 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தொழுப்பேட்டிலிருந்து கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்லும்.                           இதில் பொது நீதி யாதெனில் :- நீதிமன்றம் உத்தரவிருந்தும் நடவடிக்கைகள் எடுக்காமலிருக்கக் காரணம் ஹிந்து சமய அறநிலையத் துறை என்பது ஆலயத்தில் வருவாய் வந்தால் உள்ளே நுழைந்து ஊழல் செய்வதும், வருவாய் இல்லாத ஆலயங்கள் பல கண்டு கொள்ளாமல் இருப்பதும் பல இடங்களில் கண்கூடு. வருவாய் வரவில்லை எனில் அந்த ஆலயத்தில் விபூதி குங்குமம் கூட அறநிலையத் துறை சார்பில் வாங்க மாட்டார்கள், அதற்கும் யாராவது உபயதாரர்கள் வருவார்களா? எனக் காத்திருக்கும் நிலை தான் இன்னும் தொடர்கின்றது, இதை மாற்ற ஜெகநாத் போல வழக்கறிஞர்கள் வரவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...