முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது இந்தியத் தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது இந்தியத் தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு 


நடவடிக்கை.      2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பொய்யான தகவல்களை தெரிவித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது






தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.சி.வீரமணி பொய்யான தகவல்களை தெரிவித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக தேர்தல் ஆணையம்  நடவடிக்கை மேற்கொண்டது. நாட்டிலேயே முதன்முறையாக






மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125 A பிரிவின் படி கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, பொய்யான தகவல்களை தெரிவித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.






2021 ஆம் ஆண்டு ஏப்ரல், மே, ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் கே.சி.வீரமணி மீது ராமமூர்த்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்தார் ராமமூர்த்தி அளித்த புகாரை விசாரித்து கே.சி.வீரமணி மீது






உரிய நடவடிக்கை எடுக்க தலைமைத் தேர்தல் அலுவலருக்கு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் நடத்திய ஆய்வில் கே.சி.வீரமணி, பிரமாணப் பத்திரத்தில் சொத்துகளை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. கே.சி.வீரமணி தனது பிரமாணப் பத்திரத்தில் பல பரிவர்த்தனைகளை மறைத்திருப்பதையும், வருமான வரிக் கணக்கில் முரண்பாடுகள் உள்ளதையும் கண்டுபிடித்து தேர்தல் ஆணையம் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.






கவனக்குறைவால் பிரமாண பத்திரத்தில் தவறு நேர்ந்துவிட்டதாக கேசி வீரமணி சமாளித்து அளித்த காலதாமத விளக்கத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. கேசி வீரமணி பொய்யான தகவல்களை தெரிவித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிட்டதாக திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் தேர்தல் அலுவலர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.






மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125 A பிரிவின் கீழ், கேசி வீரமணி மீது தேர்தல் அலுவலர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். நாட்டிலேயே முதன்முறையாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125 A பிரிவின் கீழ் கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





இந்த வழக்கு, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நவம்பர் மாதம் 26 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்  முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு 6 மாத காலம் சிறை தண்டனையும் மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.






2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஜோலார்பேட்டையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.சி.வீரமணி, 1,091 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் க.தேவராஜியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

வேலூரில் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகிருக்கும் ரூபாய் .300 கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் 90 சென்ட் பரப்பளவில் உள்ள காலி நிலம் யாருக்கு என்பதில் மீண்டும் மோதல் வெடித்திருக்கிறது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி இருவருமே அந்த நிலத்தைக் கைப்பற்ற முயல்வதால் விவகாரம் முற்றியிருக்கிறது!அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியிடம் தொடர்புகொண்டு கேட்டதற்கு, “எனது நண்பர் பிரம்மனந்தாவும், சேகர் ரெட்டியும் சேர்ந்து 7 ஏக்கருக்கு அளவுள்ள அந்த நிலத்தை வாங்கினர். இதில், 70 சதவீதம் பிரம்மானந்தாவுக்கும், 30 சதவீதம் சேகர் ரெட்டிக்கும் சொந்தமானது. அந்த இடத்தில் சேகர் ரெட்டியின் உறவினர் ரிஷிகுமார் கடந்த 5 ஆண்டுகளாக பார்க்கில் பாயின்ட் நடத்தி வருகிறார். ரிஷிகுமார் என்னுடைய கட்சிக்காரர் தான்.

அவர் கட்சி விஷயமாகவும் தொழில் விஷயமாகவும் என்னுடன் அடிக்கடி பேசுவார்.அதற்கெல்லாம் எல்லா ரெக்கார்டும் என்னிடம் இருக்கிறது. தற்போது, அந்த இடத்தை மொத்தமாக அபகரிக்க சேகர் ரெட்டி நினைக்கிறார். பிரம்மானந்தாவிடம் இருந்து அந்த இடத்தை குறைந்த விலைக்கு வாங்க சேகர் ரெட்டி முயற்சிக்கிறார்.

அந்த இடம் தொடர்பாக எனது வீட்டில் பிரம்மானந்தா இன்று (வியாழக்கிழமை) காலை பேசிக் கொண்டிருந்தார். அப்போது, என்னுடைய செல்போனில் இருந்து ரிஷிகுமாருக்கு தொடர்புகொண்டு பிரம்மானந்தாவுடன் பேசும்படி கூறினேன். அந்த இடத்தை காலி செய்து கொடுக்கும் படி அவர்தான் ரிஷிகுமாரிடம் பேசினார். எனக் கூறினார்.முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது தேர்தல் ஆணையம் 125 A (BNS) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இந்த  விசாரணை திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மாஜிஸ்திரேட் மகாலட்சுமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதித்துறை நடுவர், நவம்பர் மாதம் 26 ஆம் தேதி  கே.சி.வீரமணி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, அவருக்கு 2 நாட்களுக்குள் சம்மன் அனுப்பப்படும் எனத் தெரிகிறது.  அதற்கு முன்னர் 654 மடங்கு சொத்து குவிப்பு செய்த வழக்கில் 
2 ஆண்டுகளுக்கு முன்பு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, வேலூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான 21 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அதையடுத்து, அவர் கடந்த 01-04-2016 ஆம் தேதி முதல் 31-03-2021 ஆம் தேதி வரை வருமானத்துக்கு அதிகமாக 654 மடங்கிற்கு சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...