மதுரை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் 17 ரயில் நிறுத்தங்களுடன் அமைகிறது
மதுரையில் 17 மெட்ரோ ரயில் நிறுத்தங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்ட நிலையில் அவற்றின் எண்ணிக்கை மாறுபடலாமென திட்ட இயக்குநர் அர்ஜூனன் கூறினார்.
மதுரையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்ட இயக்குநர் அர்ஜுன் தலைமையில் கள ஆய்வுப் பணிகள் நடைபெற்ற போது செய்தியாளர்களிடம் திட்டம் குறித்து அர்ஜூனன் தெரிவித்ததாவது, நிச்சயமாக மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வருமென்று உறுதி அளித்தார்.
மதுரை மெட்ரோ ரயில் பாதை, பாலம், சுரங்கம் அமைக்க ரூபாய் 11,368.35 திட்டமிடப்பட்டுள்ளது அதற்கான பூர்வாங்கமான பணிகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் தலைமையில் மதுரை ரயில்வே தண்டவாளம் மற்றும் மெட்ரோ
சுரங்கம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து இராமேஸ்வரம் ரயில் லைன் மற்றும் விருதுநகர் ரயில் லைன் அலுவலர்களுடன் ஆண்டாள்புரம் பகுதிகளில் ஆய்வு நடத்தினார் தொடர்ந்து மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் கூறிய போது;
மதுரை மெட்ரோ ரயில் ஒத்தக்கடை விவசாய கல்லூரியில் துவங்கி புதூர் வழியாக தமிழ்நாடு ஹோட்டல் அருகில் சுரங்க பாதையாக தொடங்குகிறது.
தொடர்ந்து வைகை ஆறு, மீனாட்சி அம்மன் கோவில் கடந்து ஆண்டாள்புரத்தில் முடிவடைந்து பின்னர் அங்கிருந்து மேலெழும்பி பாலமாக திருப்பரங்குன்றம் வழியாக திருமங்கலம் வரையில் 32 கி மீ க்கு இந்தத் திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வைகை ஆறு, ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் கடந்து ஆண்டாள்புரத்தில் முடிவடைந்து பின்னர் அங்கிருந்து மேலெழும்பி திருப்பரங்குன்றம் வழியாக திருமங்கலம் வரையில் 32 கி மீ க்கு திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆண்டாள்புரத்திலிருந்து திருப்பரங்குன்றம் வழியாக இந்தப் பாதையில் செல்கிறது. இதில் தொழில்நுட்ப ஆய்வுக்காக தற்போது வந்துள்ளேன்.
மெட்ரோ பனியானது ரூபாய் 11,340 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசிடமிருந்து விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சென்றுள்ளதை பரிசினையில் வைத்துள்ளனர். தற்போது நடத்தப்படும் ஆய்வு மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்காக காலதாமதமில்லாமல் இருக்க ஏதுவாக இருக்கும். கோயம்புத்தூருக்கும் சேர்த்து மொத்தமாக தான் திட்ட அறிக்கைகள் மத்திய அரசிடம் அனுப்பப்பட்டுள்ளது.
மெட்ரோ சுரங்கப்பாதை மதுரையில் 6 கிலோமீட்டர் அமைக்க சிறிது கடினமாக இருக்கலாம். ஏனென்றால் பாறைகள் மிகுந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது.மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த எந்தவித தொய்வும் ஏற்படாது.
மொத்தம் 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் நிறுத்தம் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவற்றின் எண்ணிக்கை இன்னும் மாறுபடலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்