முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

20 வருடமாக போலி பால் தயாரித்த அகர்வா(பா)ல் வீதியில் விற்பனைக்கு வந்த வேதிப் பொருள்

20 வருடமாக போலி பால் தயாரித்த அகர்வா(பா)ல் வீதியில் விற்பனைக்கு வந்த வேதிப் பொருள். 


 1 லிட்டர் வேதியியல் பொருட்கள் பயன்படுத்தி 500 லிட்டர் பால் தயாரித்து விற்பனை செய்த- 20 ஆண்டுகளாக ஏமாற்றிய அகர்வால் என்ற தொழிலதிபர் கலப்பட தடுப்புச் சட்டத்தில் கைதானார். பாலில் தண்ணீரைக் கலந்து விற்பது, பால் பவுடர் கலந்த நீரை சுத்தமான பால் என் விற்பது போன்ற மோசடியை மக்கள் அறிந்த நிலையில் கலப்படம் என்றாலும் அது மக்களையோ அல்லது சமூகத்திலோ பெரிதாக பாதிப்பு ஏற்படாது ஆனால் வேதியியல் பொருட்கள் மக்களுக்கு நேரடியாக நோய்களை உருவாக்கும்.


அப்படி உத்தரப்பிரதேசத்தில் ஒரு அகர்வால் என்பவர் அகர்வால் டிரேடர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வெறும் வேதியியல் பொருட்கள் மூலம் செயற்கையாகப் பால் மற்றும் பால் பொருள்களை.      இவர் 20 ஆண்டுகளாக பால் மற்றும் பனீர் விற்று வந்த சம்பவம் தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது1 லிட்டர் வேதியியல் பொருட்களில் இருந்து 500 லிட்டர் பால்' - 20 ஆண்டுகளாக ஏமாற்றியது எப்படி?         

பாலில் சேர்க்கப்படும் சில செயற்கை சுவையூட்டிகளை உணவு கலப்படத் தடுப்புச அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். அவைகளுடன்  இரண்டு ஆண்டுகள் கடந்து காலாவதியானவை. மேலும், அவரது குடோன்களிலிருந்து காஸ்டிக் பொட்டாஷ் (caustic potash), வே பவுடர் ( whey powder), சர்பிடால் (sorbitol), மில்க் பெர்மீட் பவுடர் (milk permeate powder) மற்றும் ரீஃபைனுடு சோயா கொழுப்புகள் (refined soya fats) ஆகியவற்றை உணவுக் கலப்படத் தடுப்பு அலுவலர்கள்  பறிமுதல் செய்தனர். இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) அலுவலர்கள், அகர்வாலுக்கு சொந்தமான கடை மற்றும் நான்கு குடோன்களில் இரண்டு நாள்களுக்கு முன் புலந்த்ஷாஹரில் `அகர்வால் டிரேடர்ஸ்' என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாகப் பால் மற்றும் பால் பொருள்களை விற்று வருகிறார்.


இது குறித்து சரியாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திடீர் சோதனையை மேற்கொண்டனர். சோதனைகள் முடிவில், வேதிப் பொருட்கள் வைத்து உண்மையான பாலைப் போலவே நிறம், சுவை தரம் என செயற்கையாகப் பாலை அகர்வால் உற்பத்தி செய்திருப்பதைக் கண்டு அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  செய்தியாளர்களிடம் பேசிய அலுவலர் ஒருவர், ``போலியான பாலை உருவாக்கப் பயன்படுத்திய கெமிக்கல் குறித்த தகவலை அகர்வால் வெளியிடவில்லை. இருப்பினும், 5 மில்லி லிட்டர் கெமிக்கலில் 2 லிட்டர் பாலை அவர் உருவாக்குகிறார்." எனக் கூறினார். மேலும், இந்தப் ஃபார்முலாவை அகர்வால் எங்கிருந்து கற்றுக்கொண்டார் என்பது குறித்து அவரிடம் தொடர்ந்து  விசாரணை நடத்தி வரும் அதே வேளையில்,


``கடந்த 6 மாதங்களில் அகர்வால் இந்த பால் பொருள்களை எங்கு சப்ளை செய்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்." என FSSAI அலுவலர் வினித் சக்சேனா தெரிவித்தார்.செயற்கை பால் மற்றும் பனீர் உருவாக்கப் பயன்படுத்திய இரசாயனங்களை இதுவரை வெளியிடவில்லை. ஆனால் 5 மில்லி கிராம் மட்டுமே கொண்டு, அவர் 2 லிட்டர் வரை போலி பாலை உருவாக்க முடியும்," எனத் தெரிவித்தனர், மேலும் அவர் உண்மையான பாலில் இருந்து செயற்கை பாலின் வாசனை, தோற்றம் மற்றும் சுவையை மறைக்க சுவையூட்டும் கலவைகளைப் பயன்படுத்துவார் என்றும் கூறினார்.


கலப்படம் செய்யப்பட்ட பால் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை அலுவலர்கள் டெமோ வழங்குவதை ஒரு வீடியோ காட்டுகிறது. அவற்றில் ஒன்று, பால் பாட்டிலை உருவாக்க பல தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டதாகக் கூறிய முன் கலந்த வெள்ளைக் கரைசலைக் காட்டுகிறது. ரசாயனத்தின் ஒரு சிறிய பகுதி பால் சுவைகள், செயற்கை இனிப்புகள் மற்றும் அதன் மொத்த அடர்த்தியை அதிகரிக்க மற்றொரு தீர்வுடன் இயற்கையான நீரில் ஊற்றப்படுகிறது. "சுவை மற்றும் இனிப்பு உள்ளிட்ட பொருட்கள் பாலின் நம்பகத்தன்மையை மக்களை நம்ப வைக்கும்" என்று அலுவலர்கள் கூறினார்.


பால் கலவை தவிர, குடோனில் இருந்து கைப்பற்றப்பட்ட இனிப்புகளும் காலாவதியானதாகக் கூறினர். இதற்கிடையில், மற்ற இரசாயனங்கள் காஸ்டிக் பொட்டாஷ், பால் பெர்மீட் பவுடர், மோர் பவுடர், சர்பிடால் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சோயா கொழுப்புகள் ஆகியவை அடங்கும்.

அஜய் அகர்வாலுக்கு  கீழ் பணிபுரிபவர்களிடம் ஃபார்முலா பற்றி அறிந்து கொள்ள  விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரது தொழிற்சாலையிலிருந்து போலி பால் வாங்குபவர்களைக் கண்டுபிடிக்கும் விசாரணையும் நடைபெறுகிறது. "கடந்த ஆறு மாதங்களில் அவர் எங்கிருந்து பால் தயாரிப்பு வேதியியல் பொருட்களை வாங்கி சப்ளை செய்தார் என்பதை நாங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்," என்று எஃப்எஸ்எஸ்ஏஐ அலுவலர் வினித் சக்சேனா மணிகண்ட்ரோல் மேற்கோளிட்டுள்ளார்.


இந்தியாவில் உள்ள  பாதி பால் பண்ணைகள் அமைப்புசாரா துறையைச் சேர்ந்தவை, அதனால் பால் மற்றும் இதர பால் பொருட்களில் கலப்படம் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இதன் விளைவாக, தரத்தை உறுதி செய்வதற்கான சோதனைகள் சவாலானதாக மாறுகிறது, அமைப்புசாரா துறைகள் திரவத்தை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதற்கு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...