முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரேமானந்தா அறக்கட்டளையின் சொத்துக்கள் சஃபேமா சட்டத்தின் நோட்டீஸ் செல்லும் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

பிரேமானந்தா ஆஸ்ரம அறக்கட்டளையின் சொத்துக்கள்

சம்பந்தமான சஃபேமா சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்தது இலங்கையில் ஆசிரமம் நடத்தி வந்த பிரேமானந்தா, அங்கு நடந்த உள்நாட்டு சண்டைக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அகதியாக 1984-ஆம் ஆண்டு வந்து,


புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை பகுதியில் 65 ஏக்கர் பரப்பளவில் சீடர்கள் குழந்தைகள் சகிதமாக ஆசிரமம் அமைத்து செயல்பட்டார். 1994-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார். அதே ஆண்டில் வருமான வரித்துறை அலுவலர்கள் ஆசிரமத்தில் சோதனை நடத்தி பல முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றினர்.



அவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் ரூபாய். 76 லட்சத்துக்கு நிரந்தர வைப்பீடு வைத்துள்ளதாகவும், ரூபாய்.15 லட்சம் மதி்ப்பில் அந்நியச் செலாவணியாக கரன்சி நோட்டுகள் வைத்திருந்ததாகவும், ஹவாலா பரிவர்த்தனை உள்ளிட்ட ஏனைய முதலீடுகள் குறித்தும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.அதையடுத்து அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தின் படி



அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு விசாரி்த்த எழும்பூர் நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்தது. இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றம் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குக்காக அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும்



விதித்த நிலையில் 2005-ஆம் ஆண்டு சஃபேமா எனும் கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி மோசடியாளர்களின் சொத்துக்களை முடக்கம் செய்ய வழிவகை செய்யும்The Smugglers and Foreign Exchange Manipulators (Forfeiture of Property) Act, 1976 (SAFEMA)  சட்டத்தின் படி பிரேமானந்தா ஆஸ்ரம அறக்கட்டளையின் சொத்துக்களை முடக்கம் செய்வதற்காக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து பிரேமானந்தா ஆஸ்ரம அறக்கட்டளை சார்பில் 2007-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில் இடைக்கால உத்தரவு பிறப்பி்க்கப்பட்டு 17 ஆண்டுகளாக நிலுவையிலிருந்து



வந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது பிரேமானந்தா ஆஸ்ரம அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், “கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பிரேமானந்தா 2011-ஆம் ஆண்டு கடலூர் மத்திய சிறையில் இறந்துவிட்ட நிலையில் அவரது அறக்கட்டளைக்கு எதிராக சஃபேமா சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விதிமுறைகளுக்குப் புறம்பாக உள்ளது.



நோட்டீஸ் சரியான நபர்களுக்கு அனுப்பப்படவில்லை” என வாதிட்டார். மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “இந்த வழக்கில் கடந்த 2006-ஆம் ஆண்டே அறக்கட்டளை தரப்பினர் நேரில் ஆஜராகி ஆட்சேபம் தெரிவித்து, விசாரணையிலும் பங்கெடுத்துள்ளனர்.


அதன்பிறகு ஓராண்டு கழித்து 2007-ஆம் ஆண்டு இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர். சஃபேமா சட்டத்தின் கீழ் இந்த நோட்டீஸ் சட்ட விதிகளைப் பின்பற்றி முறையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.


மத்திய அரசின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், ஏற்கெனவே நடந்த விசாரணையில் அறக்கட்டளை தரப்பு பங்கெடுத்துள்ள நிலையில்,  இந்த நோட்டீஸை ரத்து செய்ய முடியாது. சட்ட ரீதியாகவே நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். எனவே இது தொடர்பான விசாரணையில் முறையாகப் பங்கெடுக்க வேண்டும், என அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு உத்தரவி்ட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மோகன் என்பவர் சட்டவிரோதமான பணத்தில் தங்கம் வாங்கியுள்ளார். பத்மா என்பவர் பல இடங்களில் சொத்துக்களை வாங்கியுள்ளார். அது குறித்து விசாரணை செய்ய வேண்டும். சட்ட விரோதமாக சொத்துக்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக கருதினால் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பலாம். சொத்துக்கள் அறக்கட்டளையின் கீழ் சேர்க்கப்பட்டிருப்பதால்,




தான் அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. விளக்கம் கேட்பதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து, அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும்" என தெரிவித்தார். சொத்துக்களை வாங்கியவர்கள் உயிரிழந்தாலும், அது எப்படி வாங்கப்பட்டது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அது சட்டவிரோதமானதாக இருந்தால் நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. சந்தேகமிருப்பதாக அமலாக்கத்துறை கருதினால், விளக்கம் கேட்பதில் என்ன தவறு உள்ளது? அறக்கட்டளையின் விளக்கத்தை ஏற்க உரிய காரணமில்லை" எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...