ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திவ்ய பாசுரம் இசைக்கச்சேரியில் பங்கேற்ற இளையராஜா அங்குள்ள புகழ்பெற்ற ஆண்டாள் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
அங்கு ஆடிப்பூர விழாப் பந்தலில் நடைபெற்ற விழாவில் இளையராஜா இசையமைத்துப் பாடிய திவ்ய பாசுரம் இசைக்கச்சேரியும், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றதில் பங்கேறப்பதற்காக வந்திருந்த இளையராஜா ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனத்திற்காகச் சென்றார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கருவறை முன்புள்ள அர்த்த மண்டபத்தின் குலசேகரப் படி மீது தெரியாமல் ஏறி நிற்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ள இசையமைப்பாளர் இளையராஜா 108 திவ்ய தேசங்களான வைணவக் கோவில்களில் அர்த்த மண்டபத்தின் படியாக 13 ஆழ்வார்களின் ஒருவரான குலசேகர ஆழ்வாரே இருப்பதால் அந்தப் படி "குலசேகரப் படி" என்றே அழைக்கப்படுகிறது.
"செடியாய் வல்வினைகள் தீர்க்குந்திருமாலே
அந்தக் குலசேகரப் படி மீது ஏறி நிற்க வேண்டாம் என்று ஜீயர் ஸ்வாமிகள் ஹைதராபாத்தை சேர்ந்த ஜீயர்கள் ஆண்டாள் கோயிலிலுள்ள மணவாளன் மாமுனிவர் மடத்தின் சடகோபர் ராஜனுஜர் ஜீயரும் பங்கேற்றார். இளையராஜாவிடம் ஆகம விதிப்படி அறிவுறுத்த இளையராஜா அறியாமல் செய்த தவறை உணர்ந்து பின் வாங்குகிறார் இதுவே உண்மை நிலை, தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கோம்பை-பண்னைப்புரம், கரியமனம்பட்டி இராஜய்யா எனும் இளையராஜா கருவறைக்குள் நுழையவும் இல்லை!
அதே சமயம் கோவில் அர்ச்சகர்கள் இசைஞானியாக இன்று அழைக்கப்படும் இளையராஜாவுக்கு பரிவட்டம் கட்டி ஆண்டாள் தாயார் மற்றும் ஸ்ரீ ரங்கமன்னாரின் மாலையையும் பிரஸாதமாகக் கொடுத்து உரிய மரியாதை அளிக்கத் தான் செய்தார்கள்!
ஆனால் ஊடகங்களால் இதை சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்பதே, இதை எப்படி மடைமாற்றுகிறார்கள். இதில் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்கள் கூட இதை பெரிதாக பேசுகிறார்கள் இந்த ஆலயங்களில் மன்னர்கள் வந்தாலும் அதை நிலை தான்
இளையராஜா வேதனையோடு கவலைப்பட்டு கண்ணீர் மல்க, தான் செய்யமுனைந்தது தன்னையறியாமல் செய்தபிழை என வருந்தி தழுதழுக்கும் போது. அவருக்காக இங்கே பலர் முகநூலில் கூட குற்றம் சாட்டுகிறார்கள். இது புதுக்கோட்டை மாவட்டம். வேங்கைவயலில் நடந்த அக்கிரமத்தைக் கண்டித்தவர்களா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கே அதிபரானாலும் வாடிகனில் போப்பாண்டவர் ஆசனத்தில் அமரமுடியுமா? அதுபோலவே இதுவும் என் பலரும் வினா எழுப்பும் நிலையில், இப்போது இப்படி நவீன கால பொது வெளியில் வேலை இல்லாத. ஒருவன் 'பூனையைப் பிடித்து சானை பிடித்த கதை' போல ஆகிவிட்டது சமூக நிலை. பக்தி மார்க்கத்தில் ஆகம விதிப்படி தான் அணைத்து நடைமுறைகளும். இசைஞானியாகப் பார்க்கப்படும் இளையராஜா சாமி கும்பிட மட்டும் தானே வந்தார்; பூஜை செய்ய அல்லவே!. இதுவே பொது நீதி. "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் "இறைவனையே ஆண்டவள்" என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.
"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்" இதை அழகான தமிழில் "கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்; கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்".. என வரலாறு கூறும் "ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி (ரெங்கமன்னார்) ஆண்டாள் திருக்கோயில்" பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த. திருத்தலம்.108 திவ்ய தேசங்களில் ஒன்று.வில்லி என்ற மன்னன் ஆண்டதால். வில்லிபுத்தூர் என்றும், மஹாலக்ஷ்மி அவதாரம் ஆண்டாள் பிறந்த ஊராதலால், 'ஸ்ரீ'எனும் திருநாமத்தோடு ஸ்ரீவில்லிபுத்தூர் அழைக்கப்படுகிறது. இதன் சிறப்பம்சம் 192 அடி உயர இராஜகோபுரம் (இது தமிழ்நாடு அரசு முத்திரையில் அலங்கரிக்கும்) பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டில். நிறுவப்பட்டது. இக் கோபுரத்தைப் பற்றி கவிச்சக்கரவர்த்தி கம்பர், ”திருக்கோபுரத்துக்கு இணை அம்பொன் மேரு சிகரம்'' என,அழகான பொன்னிறமுடைய மேருமலை சிகரத்திற்கு ஒப்பாகப் பாடியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் முகுந்தபட்டர், பத்மவல்லி. தம்பதியர் வசித்து வந்தனர். இவர்கள் தங்கள் ஊரிலுள்ள வடபத்ரசாயி கோவிலில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு கருடாழ்வாரின் அம்சமாக, ஐந்தாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு,“விஷ்ணு சித்தர்’ எனப் பெயரிட்டனர்.இவரும் பெருமாள் மீது தீராத பக்தி கொண்டிருந்தார்.
பெருமாளின் துணைவியான பூமாதேவி, இவருக்கு வளர்ப்பு மகளாக ஐந்து வயதுக் குழந்தையாக துளசித்தோட்டம் ஒன்றில் ஆடி மாத பூரம் நட்சத்திரநாளன்று அவதரித்தாள். அவளுக்கு, “கோதை’'என்று பெயர். சூட்டப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் மூலவரான வடபத்ரசாயிக்கு, விஷ்ணுசித்தர் தினமும் மாலை கட்டி சூட்டுவார். அந்தப் பெருமாள் மீது ஆண்டாள். காதல் கொண்டாள். தன்னை அவரது மனைவியாகவே கருதி, அவருக்கு சூட்டும் மாலையை தன் கழுத்தில் போட்டு, அழகு பார்த்து, அனுப்பி விடுவாள்.இதையறியாத விஷ்ணு சித்தர், பெருமாளுக்கு அதை அணிவித்து வந்தார்.ஒருநாள், கூந்தல் முடி. ஒன்று மாலையில் இருக்கவே, அதிர்ந்து போன ஆழ்வார்,அது எவ்வாறு வந்தது என நோட்டமிட ஆரம்பித்தார். தன் மகளே அதைச்சூட்டி அனுப்புகிறாள் என்பதை அறிந்து, மகளைக் கடிந்து கொண்டார். மறுநாள் மாலையைக் கொண்டு சென்ற போது, அதை ஏற்க பெருமாள் மறுத்துவிட்டார்.“கோதை சூடியதையே நான் சூடுவேன். மலரால் மட்டுமல்ல,மனதாலும் என்னை ஆண்டாள் உம் பெண்…’ என்று குரல் எழுந்தது. அன்று. முதல் கோதைக்கு, “ஆண்டாள்’ எனும் திருநாமம் ஏற்பட்டது. ஆண்டாள்
`சூடிக்கொடுத்த சுடர் கொடியாள்' ஆனாள்.ஒருநாள் பெரியாழ்வார் கனவில் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் தோன்றி, "உனது மகளை ஸ்ரீரங்கம் அழைத்து வா.அங்கே யாம் அவளை மணந்து கொள்வோம்'' என்றார். அதன்படி ஆண்டாளை பல்லக்கில் அமர வைத்து. ஸ்ரீரங்கம் அழைத்து சென்றனர்.ஸ்ரீரங்கத்தின் எல்லையை அடைந்தபோது திடீரென்றுஆண்டாள் மாயமாகிவிட்டார். பெரியாழ்வார் அதிர்ச்சி அடைந்து பெருமாளை நோக்கி வேண்டினார். அப்போது ஆண்டாளுடன் பெருமாள் காட்சி கொடுத்தார்."உமது மகள் இலட்சுமியின் அம்சம். அவளையாம் ஏற்றுக் கொண்டோம்'' என்றார். ஆனால் அதை பெரியாழ்வார் ஏற்றுக்கொள்ளவில்லை. "தாங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து முறைப்படி என் மகளை மணந்து செல்ல வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார். அதன்படி பங்குனி உத்திர நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஆண்டாளை மணந்தார் பெருமாள். "தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தனங்கதேவா
உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி
உன்னையு மும்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே". -ஆண்டாள், நாச்சியார் திருமொழி, முதல் திருமொழி, முதல் பாசுரம். இதில் பொது நீதி யாதெனில்: வழிபாடு நடத்திவிட்டு வந்தவர் அமைதியாக உள்ளார்
ஆனால் சில ஊடகங்களும் தெய்வமறுப்புக் கொள்கை உள்ளவர்கள் இதில் பிரச்சினைகள் வராதா என நெருப்பைப் பற்ற வைத்து ஊதுகிறார்கள் வேறில்லை. அதே இளையராஜா இந்த அளவு வளர உதவிய பஞ்சு அருணாசலம் மற்றும் தூயவன் மீண்டு வந்தாலும் ஆன்மீக ஆகம விதிகளை இங்கு மீற முடியாது.
கருத்துகள்