ஜனாதிபதி திரௌபதி முர்மு, நீலகிரி மாவட்ட மகளிர் சுயஉதவிக்
குழுக்களால் தயாரிக்கப்பட்ட உள்ளூர் மற்றும் பாரம்பரிய தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் ஸ்டால்களை பார்வையிட்டு, உதகமண்டலம் ராஜ்பவனில் அவர்களுடன் கலந்துரையாடினார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களுடனும் அவர் உரையாடினார். உள்ளூர் கலைஞர்கள் மற்றும் பழங்குடியின சமூகத்தினரின் கலாச்சார நிகழ்ச்சிகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.நீலகிரி மாவட்டத்திலுள்ள சில பழங்குடியின மக்கள் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்து, கைவினைப் பொருட்களை பரிசாக வழங்கினர். நீலகிரி பழங்குடியின மக்கள் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்து, கைவினைப் பொருட்களை பரிசாக வழங்கினர்.
இந்தியாவில் 15-வது ஜனாதிபதியாக 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார். இதனால் நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியடைந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு முதல்முறையாக தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு வருவதாக இருந்ததனால் நீலகிரிரியில் கோத்தர், இருளர், குறும்பர், பனியர், காட்டுநாயக்கர், தோடர் என 6 பிரிவுகள் சேர்ந்த பழங்குடியின மக்கள் ஜனாதிபதியை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க திட்டமிட்டிருந்தனர் இதற்காக முறையாக அனுமதியும் பெறப்பட்ட நிலையில் வானிலை மாற்றம் காரணமாக ஜனாதிபதியின் பயணம் ரத்து செய்யப்பட்டதனால் பழங்குடியின மக்கள் ஏமாற்றமடைந்தனர். அது தொடர்பாக நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினத் தலைவர் ஆல்வாஸ், செயலாளர் புஷ்பகுமார் ஆகியோர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினர். அதில் பழங்குடியின மக்கள் சந்திக்க விரும்புவதாக தெரிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் 6 பிரிவு பழங்குடியின மக்கள் 57 பேர் ஊட்டியிலிருந்து பேருந்து மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதே போல் மாநிலம் முழுவதும் உள்ள 75 பிரிவுகளைக் கொண்ட பழங்குடியின மக்கள் 1,500-க்கும் மேற்பட்டோர் சென்னையிலிருந்து இராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் டெல்லிக்கு கூட்டிச் செல்லப்பட்டனர். பழங்குடியின மக்களைச் ஜனாதிபதி திரௌபதி முர்மு, குடியரசுத்தலைவர் மாளிகையில் நேரில் சந்தித்தார். மகிழ்ச்சியடைந்த பழங்குடியின மக்கள் தாங்கள் கொண்டு சென்ற மூங்கிலால் செய்த கைவினைபா பொருட்களையும், பிரத்யேக ஓவியங்கள், எம்ராய்டரி துணிகள் உள்ளிட்ட பாரம்பரிய கைவினைப் பொருட்களையும் ஜனாதிபதிக்கு பரிசாக வழங்கினர்.
அப்போது நீலகிரிக்கு கண்டிப்பாக வருகை தர வேண்டுமென ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் பழங்குடியின மக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து ஜனாதிபதி பாரம்பரிய உடையணிந்த பழங்குடியின மக்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அம்பேத்கர் சர்வதேச மையம், நாடாளுமன்றக் கட்டிடம், பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனம் உள்பட பல்வேறு இடங்களுக்கு பழங்குடியின மக்கள் அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை சென்னை திரும்புகின்றனர். இதற்கான முழுமையான செலவையும் பழங்குடியினர் நல அமைச்சகம் ஏற்றுக்கொண்டது.
கருத்துகள்