முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்

உடல் நலக்குறைவால் சென்னை மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற  உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  காலமானார்.


அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள்  சார்ந்த பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவரது மகன் திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானதையடுத்து அத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு லட்சத்து பத்தாயிரத்து 156 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.எதிர்த்து  நின்ற அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு 43,923 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. 66,575 வாக்குகள் வித்தியாத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார். ஈ.வே.ராமசாமி நாயக்கர் (பெரியார்) சகோதரர் ஈ.வே.கிருஷ்ணசாமியின் பேரன் மூத்த திராவிட தலைவர் ஈ.வே.கி.சம்பத் மற்றும் அதிமுகவில் முன்னணி தலைவர் சுலோக்ஷ்னா சம்பத் மகனவார். இவர் தொடர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்ற நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர். தொடர்ந்து ஜூன் ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகளிலும் பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டார்,


தொடர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்ற நிலையில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நவம்பர் மாதம் 27 ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில்மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாக அவ்வப்போது மருத்துவமனையில் வந்த தகவல் கூறியது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வெ.கி.ச இளங்கோவன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த பல தலைவர்கள் மத்தியில் பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தனது இரங்கல் செய்தியில் 

"நீண்ட பாரம்பரியம் கொண்ட அரசியல் குடும்பத்திலிருந்து வந்த ஈ.வெ.கி.ச. இளங்கோவன் தமிழகத்தில் மிகவும் நெருக்கடியாக கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்று, அதை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்.



என் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தவர். தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை வழிகாட்டிகளாக தந்தைப் பெரியார், அண்ணல் அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் உருவச் சிலைகள் அமைக்கப்பட்ட போது, அவற்றில் தந்தைப் பெரியாரின் சிலையை இளங்கோவன் அவர்களை அழைத்துத் தான் திறக்கச் செய்தேன். தமிழ்நாட்டு அரசியலில் அவர் பயணிக்க வேண்டிய தொலைவும், படைக்க வேண்டிய சாதனைகளும் ஏராளமாக இருந்த நிலையில் அவரது மறைவை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.

ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.        சென்னை மணப்பாக்கத்தில்  காலமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் பூத உடல் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியப் பின்னர், நடிகை குஷ்பூ கூறியதாவது,

"ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நல்ல தலைவர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட. அவருக்கு ஈகோ கிடையாது. எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர். உலகமே தலைகீழாக நின்றாலும், கட்சிக்காக நான் பாடுபடுவேன் என்று கூறுவார். அப்படி ஒரு விசுவாசி அவர். நான் என் அண்ணனை இழந்து நிற்கிறேன் என்று சொல்வதா, என் நண்பரை இழந்து நிற்கிறேன் என்று சொல்வதா? அல்லது என்னுடைய குடும்பத்தின் மூத்தவரை இழந்து நிற்கிறேன் என்று சொல்வதா என்பது எனக்குத் தெரியவில்லை. அவர் எப்போதும் உனக்கும் எனக்கும் போன ஜென்மத்து பந்தமுள்ளது. அது என்ன என்று சொல்லத் தெரியவில்லை' எனக் கூறுவார். எனக்கும் இன்று அப்படித்தான் தோன்றுகிறது. அவர் எப்போதும் நிச்சயமாக என் மனதிலிருப்பார். கட்சி ரீதியாக மட்டுமில்லாமல், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒரு நண்பரை இழந்துள்ளதாக உணர்கிறார்கள்.

அவர் மாதிரி இன்னொரு ஆள் வரமுடியாது. என்னுடைய அரசியல் பயணம், அவர் இருக்கும் போது தான் தொடங்கியது. அவர் தான் என்னை காங்கிரஸ் கட்சிக்கு அழைத்து வந்தார். நான் காங்கிரஸை விட்டுப் பிரிந்த போதும் கூட, அவரிடம் அதே அன்பு, அதே மரியாதை, அதே பாசம் தொடர்ந்தது.


இன்று இந்த இழப்பு எனக்கு தனிப்பட்ட இழப்பு. இதிலிருந்து எப்படி மீண்டு வருவேன் எனத் தெரியவில்லை. அவருடன் பழகியவர்களுக்குத் தான் அவருடைய மதிப்புத் தெரியும். அவரது தைரியம், உண்மையை மட்டும் பேச வேண்டும் என நினைப்பது, மனதில் பட்டதை பேசுவது போன்ற தைரியம் வேறு எந்தத் தலைவருக்கும் வராது" எனத் தெரிவித்தார்.           அரசியல் ரீதியாக நாமறிந்த வரை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ஆதரவாளர், எப்போதும் அன்புக்கு குறை இல்லாக் குணக்குன்று!அசை போடுகிறேன்.  அரசியல் ரீதியாக மூத்த தலைவர் வாழப்பாடி கூ.இராமமூர்த்திக்குப் பின்னர் ஒரு பண்புகள் நிறைந்த தலைவர் ஆகவே மனம் கலங்குகிறது. பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலுடன்

"போய் வா தலைவா!  உன் காலம் அரசியல் பொற்காலம்!" இதுவே நமது அஞ்சலி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...