முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சோழவந்தான் வெற்றிலை புவிசார் குறியீடு பெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தான் வெற்றிலை புவிசார் குறியீடு பெற்றது பெருமைக்குரிய தாகும். 


"கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்  காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்"... மஹாகவி பாரதியார்.                     


மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா  சோழவந்தான் பகுதியில் பயிரிடப்படும் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட ஊரக கல்வி மற்றும் வளர்ச்சி மையம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.மதுரை மாநகரில்  சந்தைக்கு விற்பனைக்கு வரும் பொருட்களின் சிறப்புகளை விவரிக்கும், சங்க இலக்கியம் 'மதுரை காஞ்சி' பாடல்களில் வெற்றிலை குறிப்பிடப்பட்டுள்ளது."பாகனூர் கூற்றத்து சோழாந்தக சதுர்வேதி மங்கலம் என கல்வெட்டுகளில் அழைக்கப்பட்ட இவ்வூர் சோழவந்தான் என தற்போது அழைக்கப்படுகிறது. சோழாந்தகன் என்பது வீரபாண்டியனின் சிறப்புப் பெயர். சோழவந்தான்

'கொடிகால் பிள்ளைமார்' என்ற பிரிவு வெள்ளாளர் சமூகத்தின் சார்பில் வெற்றிலை பயிரிடப்படுவதாக மதுரை காஞ்சிப் பாடல்களில் உள்ளது.சோழவந்தான் எனும் பெயர் சோழர்களுக்கு அந்தகன் (எமன்) என்ற சிறப்புப் பெயரே அது. கோவீர பாண்டியன் சோழாந்தகன் எனப்பட்டான். அது மருவி சோழவந்தான் என்றானது.


வயிற்றிலிருந்து வாயுவை வெளிக்கொண்டு வரும் தன்மை பெற்றது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றைப்  பலப்படுத்தி ஆரோக்கியம் தரும். நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு  கொடுத்து வர ஞாபக சக்தி கூடும்.வெற்றிலையை மெல்லுவதால், பல் ஈறுகளில் உள்ள வலி, இரத்தக் கசிவை நீக்கி, ஆட்டம் காணும் பற்களையும் கெட்டியாக்கும் ஈறுகளை வெற்றிலை தயார் செய்கிறது.வெற்றிலை பாக்கு ஸ்கிசோஃப்ரினியாவுக்கு பயன்படுத்தப்படுகிறது, இது பார்வை இழப்பு ( கிளாக்கோமா ), மோசமான செரிமானம் மற்றும் பல நிலைமைகளுக்கு வழிவகுக்கும் கண் கோளாறுகளின் குழு ஆகும், வெற்றிலையைப் பயன்படுத்துவதும் பாதுகாப்பற்றதாக இருக்கலாம். சிலர் வெற்றிலையை ஒரு பொழுதுபோக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்,  இது மத்திய நரம்பு மண்டலத்தை (சிஎன்எஸ்) துரிதப்படுத்துகிறது வெற்றிலை மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தின் பிற பகுதிகளில் உள்ள சில இரசாயனங்களை பாதிக்கிறது.

வெற்றிலை மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தின் பிற பகுதிகளில் உள்ள சில இரசாயனங்களை பாதிக்கிறது. வெற்றிலைக்கு தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல், மெல்லிலை எனப் பல பெயர்கள் உண்டு.  வெற்றிலையில், கம்மாறு வெற்றிலை,  கற்பூர வெற்றிலை, சாதா வெற்றிலை போன்ற வகைகள் உள்ளது. வெற்றிலையில் அதன் இலையும் வேரும் மருத்துவப் பலன்களை  கொண்டவை.

கொடி வகையைச் சேர்ந்தது, வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ‘சி’ சத்துக்கள் அதிகம். வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை  நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை  குணப்படுத்துகிறது. வெற்றிலை என்பது பிப்பரேசியா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொடி வகை இது இந்தியா மற்றும் ஆசியாவில் 'பான்' ஆக 'பாக்கு' உடன்  உட்கொள்ளப்படுகிறது.

பலர் பலமான விருந்துக்குப் பிறகு வெற்றிலை போடுவர், சிலர் அடிக்கடி வெற்றிலைப் போடுவதையே ஒரு பழக்கமாகவே வைத்திருப்பர். ​​​​இந்தியாவில் மத சடங்குகளின் போது தாம்பூலம் வெற்றிலை குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கிறது. வெற்றிலை என்பது அரேகா தாவரத்திலிருந்து வரும் கொட்டை. இது சில நேரங்களில் மருந்து தயாரிக்க பயன்படுகிறது. வெற்றிலை தனியாக அல்லது க்விட் வடிவில்,  வெட்டப்பட்ட வெற்றிலை மற்றும் பிற பொருட்களின் கலவையாக வடமாநிலங்களில் அதிக நபர்களால் உட்கொள்ளும் நிலை.வைகை ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள ஊர் சோழவந்தான்


மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்படும் வெற்றிலைகள் மிகவும் பிரபலமானவை. வண்டல் மண்ணில் பயிரிடப்படுவதால் வெற்றிலையின் சுவை, மனம் உள்ளிட்ட பிரத்யேகத் தரமானவை. குறைவான காரத்தன்மையுடைய இந்த வெற்றிலைகளை ஏராளமான மக்கள், உடல் நலன்களை பேணும் நோக்கில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். சோழவந்தான் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் சார்பில், வெற்றிலை விவசாய பாதுகாப்பு நலச் சங்கம் கடந்த 1964 ஆம் ஆண்டு தொடங்கி, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகள், வேறு பயிர்களை சாகுபடி செய்தாலும், தங்கள் நிலத்தின் சிறு பகுதியை ஒதுக்கி அதில் வெற்றிலை பயிரிடுவதை மன்னர் காலம் தொட்டே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அவற்றை கள்ளழகர் கோவிலுக்கு கொண்டு செல்வதை பரம்பரியமாக கடைப்பிடிக்கின்றனர். பாண்டிய நாட்டில் சோழவந்தான் வெற்றிலை தான் மிகவும் சிறந்தது என்ற அடிப்படையில், ஐரோப்பியர்கள் இங்கு வந்து வெற்றியை வாங்கிச் சென்றதாக பேசும் கருத்துள்ளது. 

இப் பகுதியில், சாகுபடி செய்யப்படும் வெற்றிலை தொன்மையான சிறப்புக் கொண்டவை என்பதற்குச் சான்றாக கல்வெட்டுகள், சங்க கால இலக்கியங்கள் பலவற்றில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சோழவந்தான் பகுதியிலுள்ள 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 'ஜனக நாராயணசாமி பெருமாள்' கோவிலில் உள்ள கல்வெட்டில் அதன் வரலாறு கூறப்பட்டுள்ளது. அதாவது, “சோழவந்தான் பகுதியில் உள்ள வெற்றிலை விவசாயிகள், தங்கள் வருமானத்திலிருந்து ஜனக நாராயணசாமி பெருமாள் கோவிலுக்கு நன்கொடை வழங்க வேண்டும். கோவிலுக்காக விவசாயிகள் செலவிடும் தொகையை, பாண்டியப் பேரரசிடமிருந்து மூன்று மடங்காகப் பெற்றுக் கொள்ளலாம்'' என்று கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...