முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகளின் 8-ஆம் ஆண்டு மஹா குருபூஜை விழா

சிறப்புச் செய்திகள்:- ரங்கநாதன் திருப்பதி                                                   ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகளின் 8-ஆம் ஆண்டு மஹா குருபூஜை விழா

குரோதி வருடம் தை மாதம் 14-ஆம் தேதி திங்கட்கிழமை 27 ஜனவரி 2025 மஹா குருவின்  பூராடம் நட்சத்திரத்தில், சித்த யோகம் கூடிய சுபதினத்தில் ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகளின்
8-ஆம் ஆண்டு மஹா குருபூஜை விழா
மதகுபட்டியில் பாகனேரி சாலையில் அமைந்துள்ள பீடத்தில் 
நடைபெறுவதால் மேற்கண்ட நிகழ்வில் மஹாகுருவின் சீடர்கள். சிவனடியார்கள், ஆன்மீக மெய்யன்பர்கள்,

பக்த கோடிப் பெருமக்கள் திரளாக வருகை தந்து குருவருளும், திருவருளும் பெற்றுச்செல்ல வேண்டுமென. ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகள் அருளாசி பீட நிர்வாக அறங்காவலர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார் 
ஆலயத்தில் குருபூஜை நிகழ்ச்சி நிரல் விபரம்:-

ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரிகிரி சுவாமிகள் ஆசியுடன்.
காலை 6.00 மணிக்கு மங்கள இசையுடன் விழா ஆரம்பம்,
சிங்கப்பூர், மலேசியா புகழ்பெற்ற மதகுபட்டி M.காளிஸ்வரன் நாதஸ்வர குழுவினரின் நாதஸ்வர கச்சேரி 
தை மாதம் 13 ஆம் தேதி 26 ஜனவரி 2025 ஞாயிற்றுக்கிழமை
மாலை 5.00 மணி,

இரவு 7.00 மணி, இரவு 8.00 மணி,
விளக்கு பூஜையும். பின்னர் 
இரவு உணவும்.
 சுவாமிகளின் அற்புதங்களை
பகிர்ந்து கொள்ளும்
பக்தர்களின் சொற்பொழிவுகள் 
நடைபெறும்.
தை மாதம் 14 ஆம்  தேதி 27 ஜனவரி 2025 திங்கட்கிழமை


காலை 8.30 மணி
யாக வேள்வி பூஜைகள் ஆரம்பம் தொடர்ந்து கோ பூஜையும் நடைபெறும்.
காலை 8.40 மணி பக்தர்களுக்கு 
காலை உணவு  பூர்ணாகுதியும்  தொடர்ந்து சுவாமிக்கு தீபதூப ஆராதனைகள் நடைபெறும்.
காலை 10.00 மணி தேவாரம், திருவாசகம். முற்றோதல் 
காலை 10.30 மணி பாராயணம்.
காலை 10.50 மணி அன்னக்கொடி ஏற்றுதல், நண்பகல் 11.00 மணி
மகேஸ்வர பூஜையும் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். பீடத்தில் சர்வசாதகம் மயில்ராயன் கோட்டை நாட்டுக் குருக்கள் வடவன்பட்டி G.சிவசுப்ரமணியக் குருக்கள் நடத்தி வைக்கும் நிலையில் பக்தர்கள் மற்றும் மெய்யன்பர்கள் வந்து கலந்து கொண்டு வழிபட்டு ஆசி பெற்றுச் செல்ல வேண்டுமாய்


விழா ஏற்பாடுகளை கவணிக்கும் திருப்புத்தூர் இராமலிங்கம் சேர்வை அழைப்புடன் தெரிவித்தார். 
மகேந்திரகிரி மலை என்பது தென்தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட, காவல்கிணறு கிராமத்தின் அருகிலுள்ள மலை மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள இவ்விடத்தின் உயரம் 1654 மீட்டர் (5427 அடி) ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) நடத்தும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் ஒன்று இந்த மலையடிவாரத்தில் செயல்படுகிறது. அது நாகர்கோவில் பகுதியில் மிக உயர் மலைச்சிகரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.இஸ்ரோ ப்ராபல்ஷன் காம்ப்ளக்ஸ் , இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏவுகணை வாகனம் மற்றும் செயற்கைக்கோள் உந்துவிசை அமைப்புகளுக்கான சோதனை வசதி , இந்த மலையின் கீழ் சரிவுகளில் அமைந்துள்ளது.
மகேந்திரகிரி காப்புக் காடுகள் என்பது கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவில் உள்ள காப்புக்காடாகும் . மத்வ ஹிந்து பிரிவின் துறவி ஸ்ரீ வாதிராஜ தீர்த்தர் தனது புனித யாத்திரையான தீர்த்த பிரபந்தத்தில் மகேந்திர பர்வதத்தை (மகேந்திர கிரி) பற்றி விவரித்துள்ளார். நமது சித்தர் ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசர் வழி வந்த மஹான் என்பது அவரை நெருங்கி அருள் பெற்ற பலரது வாக்கு, சித்தர் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் அதில் கண்டனூர் சாமி, கணக்கன்பட்டி சாமி என இன்னும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...