முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யூஜிசி வரைவு மசோதா உதவிப் பேராசிரியர் நியமனத் தகுதிகளில் மாற்றம்

உதவிப் பேராசிரியர் நியமனத் தகுதிகளில் மாற்றம்

தகுதித் தேர்வுகள் கட்டாயமில்லை,



முதுகலைப் பட்டம் பெற்றாலும் உதவி பேராசிரியர் ஆகலாம் இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு NET மற்றும் SET மற்றும் Ph.D அவசியமில்லை; UGC-யில் புதிய விதிமுறைகள் மாற்றம். 



இந்தியாவிலுள்ள அனைத்து பல்கலைக்கழகம், சார்ந்த கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு குறைந்தபட்சத் தகுதியாக நெட் அல்லது செட் உள்ளிட்ட தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை தற்போது இருக்கும் நிலையில், இனி நெட் அல்லது செட் அல்லது செலெட் உள்ளிட்ட தகுதித் தேர்வுகள் கட்டாயமில்லை என்ற விதிமுறையை  UGC கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.




பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனம், ஆசிரியர் நியமனம் மற்றும் உயர்கல்வியில் தரத்தை உயர்த்துதல் உள்ளிட்டவற்றுக்கான விதிமுறைகளில் UGC மாற்றம் கொண்டுவர உள்ளது. அதற்கான வரைவு அறிக்கை கருத்துக்கள் கேட்பிற்காக வெளியிடப்பட்டுள்ளது.   (UGC Regulations 2025 for Assistant)  பல்கலைக்கழகம் மற்றும்

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனம் என்பது பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) விதிமுறைகளின் படி நடைபெறுகிற நிலையில், உதவிப் பேராசிரியர் நியமத்திற்கான தகுதிகளில் UGC முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதாவது, உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு குறைந்தபட்சம் 

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் கல்வி கற்பிக்கும் பணியில் முதல் தொடக்க பதவி உதவிப் பேராசிரியர் ஆகும். அதனைத்தொடர்ந்து, அனுபவம் மற்றும் கல்விசார் அடிப்படையில் இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் ஆகிய பணிகளுக்குச் செல்ல முடியும். இதற்கான நியமன தகுதிகளை UGC வகுக்கிறது. மற்றும் 




அதனையே நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும்.இந்த நிலையில், டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி UGC இந்த விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவந்து அதற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஆகியவற்றுக்கான வரைமுறைகள் மாற்றப்பட்ட புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதில் குறிப்பிடத்தக்கதாக உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதிகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களில் , ஒருவர் நான்கு வருட இளங்கலையில் (UG) இயற்பியல் மற்றும் முதுகலையில் (PG) கணிதப் பட்டம் பெற்றிருந்தாலும், நெட் தேர்வில் (NET) வேதியியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், பிஎச்.டி (Ph.D) வேதியியலில் பெற்றிருந்தாலும், அவர்கள் வேதியியல் பாடத்திற்கு கற்பிக்க தகுதியானவர்கள்



ஆவார்கள். ஒன்று நெட் உள்ளிட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஎச்.டி பெற்றிருக்க வேண்டும். இரண்டுமே பெற்றிருகக் வேண்டும் என்ற அவசியம் இல்லை.     2. தகுதி தேர்வு கட்டாயம் இல்லை


உதவிப் பேராசிரியர் பதவிக்கு NET அல்லது SET அல்லது SLET ஆகிய தகுதித் தேர்வு அவசியம் என்ற நிலை இருக்கிறது. இந்நிலையில், இத்தகுதி தேர்வுகள் கட்டயாமில்லை என மாற்றியமைக்கப்படுகிறது. அதாவாது, எந்த பாடத்தில் உதவிப் பேராசிரியர் ஆக விரும்புகிறார்களே அதில் பிஎச்.டி அல்லது முதுகலை பட்டம் பெற்றிருந்தால் போதுமானது.3. பிஎச்.டி கட்டாயம் இல்லை



ஆம், உதவிப் பேராசிரியாராக நியமிக்க பிஎச்.டி பட்டம் கட்டாயமில்லை என மாற்றப்படுகிறது. 55 சதவீத மதிப்பெண்களுடன் பெறும் முதுகலை பட்டம் போதுமானது.உதவிப் பேராசிரியர் பணிக்கான புதிய 3 தகுதிகள் 



முதலில்.75 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் அல்லது 55 சதவீதத்துடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பிஎச்.டி முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.               இரண்டாவதாக. 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் மற்றும் NET அல்லது SET அல்லது SLET ஆகிய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.        மூன்றாவதாக முதுகலை பட்டம் (கிரெடிட் நிலை 7 -M.E., M. Tech) 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதில் எஸ்சி. மற்றும் எஸ்டி மற்றும் ஒபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் தளர்வு உள்ளது.


பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பதவிகளுக்கான பதவி உயர்விற்கு பிஎச்.டி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலை, வணிகம், மனிதநேயம், கல்வி, சட்டம், சமூக அறிவியல், அறிவியல், மொழிகள், நூலக அறிவியல், உடற்கல்வி, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பு, பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மேலாண்மை ஆகிய துறைகளுக்கு இந்த புதிய விதிமுறைகளின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர்கள் பணி


நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டுமென  UGC கட்டாயமாக்க உள்ளது. தற்போது இந்த வரைவு அறிக்கை கருத்து கேட்பிற்காக வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறைகள் தேசிய கல்விக் கொள்கை 2020 அடிப்படையில் கொண்டுவரப்படுகிறது. இதனை மீறும் கல்வி நிறுவனங்கள் நடத்தும் பட்டங்கள் ரத்து செய்யப்படும், உயர்கல்வி நிறுவன அங்கீகாரம் நீக்கப்படும் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...