திருச்சிராப்பள்ளியில் மோசடி பத்திரப்பதிவு நடந்தது எவ்வாறு மொத்தமாக சிக்கிய அலுவலர்கள். ஏழு நபர்கள் மீது பாய்ந்தது வழக்கு
திருச்சிராப்பள்ளி மாவட்ட இணை சார்பதிவகம் எண் 3-ல் சார் பதிவாளராக முரளி 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை பணியற்றிய காலத்தில் போலியான ஆவணங்கள் மூலம்
பத்திரப்பதிவு செய்து, அரசுக்கு ரூபாய்.2 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதான புகாரில் சார்பதிவாளர் உள்ளிட்ட ஏழு நபர்கள் மீது திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
குறிப்பாக பத்திரப் பதிவுத்துறை சார் பதிவாளர்கள், தங்களது பணிக்கு உள்பட்ட பகுதிகளில், உள்ள ஊராட்சி ஒன்றியங்கள், மற்றும் கிராமப் பஞ்சாயத்துகளில் விவசாய நஞ்சை நிலங்களுக்கு வரன்முறை கோரி வரும் மனுதாரர்களின்
விண்ணப்பங்களை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்த பிறகு தான் கூராய்வுக் கட்டணம், மற்றும் வரன்முறைக் கட்டணம் மற்றும் வளர்ச்சிக் கட்டணங்களைப் பெற வேண்டும். அதன் பிறகே பத்திரப்பதிவுகளைச் செய்ய வேண்டும். அதுதொடர்பாக அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் IGR சுற்றறிக்கை சென்றுள்ளது.
இந்த நிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட இணை சார்பதிவகம் எண் 3-ன் சார் பதிவாளராக முரளியின் கட்டுப்பாட்டில் இருந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் தாலுகா அந்தநல்லூர் ஒன்றியத்திலுள்ள விவசாய நிலங்களுக்கு அரசு உத்தரவுகளை மீறியும், அரசுக்கு இழப்பு ஏற்படும் வகையிலும் போலியான ஆவணங்களை உற்பத்தி செய்து பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்ததனை ஆவண எழுத்தர்களான அல்லித்துறை கங்காதரன், பிரபு, சின்னக்கடைத்தெரு சக்திவேல் மற்றும் தென்னூர் காயிதேமில்லத் நகர் சையதுஅமானுல்லா, மேலசிந்தாமணி முகமது சலீம், பாலக்கரை முகமதுஉவைஸ் ஆகிய ஆறு நபர்கள் செய்து வந்ததாகவும், இதற்கு உடந்தையாக சார்பதிவாளர் முரளி இருந்து வந்ததாகவும் புகார் எழுந்தது உண்மை எனக் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் அரசுக்கு ரூபாய்.2 லட்சத்து 13 ஆயிரத்து 405 இழப்பு ஏற்பட்டது தெரியவந்ததையடுத்து சார்பதிவாளர் முரளி, கங்காதரன், பிரபு, சக்திவேல் உள்ளிட்ட ஏழு நபர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள்