முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாசிமணிகள் விற்ற நாடோடிப் பெண்ணை நடிகையாக மாற்றிய திரிவேணி சங்கமத்தின் மஹா கும்பமேளா

ஹிந்து சமூகத்தின் மிகப்பெரிய திரிவேணி சங்கமத்தில் மகாகும்பமேளா விழா


உத்தரப்பிரதேச மாநிலம் பழைய பிரயக்ராஜ் (அலஹாபாத்) நகரில் ஜனவரி மாதம் 13 ஆம் தேதி துவங்கி நடக்கிறது. கும்பமேளாவிற்குச் சாதுக்களும், முனிவர்களும், நிர்வாணிகளும், நிர்மோஹிகளும், ஆண் பெண் துறவிகள் மற்றும் பல்துறை சார்ந்த பிரபலங்களும் வந்து குவிகின்றனர். அங்கு ஆண்டு தோறும் யாராவது பிரபலமாவது நிகழும் இந்த ஆண்டு 


கும்பமேளாவில் பாசி மணி, பூ, ருத்ராட்ஷ மாலை வியாபாரம் செய்ய வந்த  ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே என்ற பெண் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சிவப்பு நிற ஆடையுடன் இளம் பெண் சாதுவைப் போல வசீகரமான தோற்றத்தின் மூலம் காட்சியளித்த அந்தப்பெண்  சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்தார். அவர் மாலை விற்பனை செய்யும் விதம் கும்பமேளாவிற்கு வந்த பக்தர்கள் மற்றும் மீடியா குழுவினரைக் கவர்ந்தது. அவர் மாலை வியாபாரம் செய்யும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 



அதன் காரணமாக அவரைச் சுற்றி எப்போதும் புகைப்படங்கள் எடுக்க வந்த கலைஞர்கள் சூழ்ந்திருந்தனர். இதனால் அவரால் தொடர்ந்து பாசி மணி மற்றும்  உத்தராட்ச மாலைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து அவரது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவரது சொந்த ஊரான இந்தூருக்கு அவரது குடும்பத்தினர் அனுப்பி விட்டார்கள். இந்தூருக்குச் சென்றவுடன் அங்கு அழகு நிலையமான சலூன் கடை ஒன்றுக்குச் சென்று தனது அழகை மேம்படுத்திக்கொண்டாவர்



சலூன் கடையில் மேக்கப் செய்து கொள்ளும் காணொளிக் காட்சி (வீடியோ) சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகியது. அதோடு கும்பமேளாவில் தனக்குக் கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த மோனலிசா, சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றைத் துவங்கி, அதில் தான் சலூனில் மேக்கப் செய்து கொண்ட வீடியோவை வெளியிட்டி இருந்தார்.

டிவிட்டர் பக்கத்திலும் அதனைப் பகிர்ந்தார். பெண் துறவியைப் போன்று சிவப்பு ஆடையுடன், பாசி மாலை அணிந்து அவர் தனது முடியைச் சலூனில் சரி செய்யும் வீடியோவை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்தனர். மோனலிசாவை முன்மாதிரியாக வைத்து சிலர் ஓவியம் வரைய ஆரம்பித்தனர். மோனலிசாவும் தினமும் புதுப்புது வீடியோக்களை கடந்த ஐந்து நாட்களாக வெளியிட்டு வருகிறார். அது பார்வையாளர்களைகா கவர்கிறது.                              - விளம்பரம் -

                            -விளம்பரம்-
மோனலிசாவைப் போன்ற உருவத்துடன் இருக்கும் மோனலிசா போஸ்லே அடுத்தகட்டமாக தொலைக்காட்சி தொடர்களில் நுழைவது குறித்துப் பரிசீலிக்கிறார். மாலை விற்பனை செய்த பெண் இப்போது சோசியல் மீடியா பிரபலமாகி இருக்கிறார்.



அவரை சோசியல் மீடியாவில் பலரும் அவரை நேரில் பார்க்காமல் பாராட்டிப் பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே கும்பமேளாவில் புல்லட் பாபா, கோல்டன் பாபா, ஐ.ஐ.டி பாபா என ஏராளமான நபர்கள் பிரபலம் அடைந்தனர். கும்பமேளாவில் சாதுக்கள் அதிக அளவில் வந்து குவிந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் பல துறவிகள் பக்தர்களின் கவனத்தை ஈர்க்கின்றனர். அந்த வரிசையில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஷா ரிசாரியா என்ற இளம் பெண் துறவி கவர்ந்துள்ளார்.

கும்பமேளாவில் அழகான துறவியாகக் கருதப்படும் ஹரிஷா தன்னை ஒருபோதும் துறவி என்று சொல்லிக்கொண்டதில்லை என்கிறார். ஆனால் அவர் துறவிக்கான உடையணிந்து, ருத்ராட்ஷ மாலை அணிந்து கும்பமேளாவில் காணப்படுகிறார்

மகா கும்பமேளாவில் துறவறம் மேற்கொள்ள 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் 

ஜனவரி மாதம் 27-ஆம் தேதி முதல் நடைபெறும் சேர்க்கையில் இணைய சுமார் 1,000 பெண்கள் வரை பதிவு செய்துள்ளனர். மகா கும்பமேளாவில் நாட்டின் 13 அகாடாக்களும் முகாமிட்டுள்ளன. ஜனவரி மாதம் 13-ஆம் தேதி துவங்கி 45 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மஹா கும்பமேளாவில் இளம் தலைமுறையினர் துறவறம் பூணும் நிகழ்ச்சி அகாடாக்களில் நிகழும்.

இந்த முறை மகா கும்பமேளாவில் வரலாறு படைக்கும் வகையில் பெண்கள் துறவறம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டினர். இதுகுறித்து ஜுனா அகாடாவின் மூத்த துறவி திவ்யா கிரி கருத்து, “எங்கள் அகாடாவில் மட்டும் இந்த முறை 200 பெண்கள் துறவறத்துக்காக பதிவு செய்துள்ளனர். மேலும் 12 அகாடாக்களையும் சேர்த்தால் துறவியாகும் பெண்கள் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டுகிறது. இதற்கான முன்பதிவுகள் துவங்கி நடைபெறுகின்றன.


இவர்களுக்கு துறவறம் மேற்கொள்ள வைக்கும் நிகழ்ச்சி இரண்டு நாட்கள் முன்பு ஜனவரி மாதம் 27-ஆம் தேதி நடைபெற்றது” என்றார். ஜனாதன தர்மத்தில், துறவறத்துக்கான பல காரணங்கள் கூறப்பட்டுள்ளன. இந்தத் துறவறத்தை ஒரு சாமானிய மனிதர் முதல் இல்லர வாசம் துறந்து யாரும் மேற்கொள்ளலாம் எனக் கருதப்படுகிறது.குடும்பத்தில் ஏற்படும் விபத்து மற்றும் விஷக்கடி மரணத்தில் தப்பிக்க, மற்றும் உலக வாழ்க்கையில் வெறுப்பு, அளவுக்கு மீறிய புகழ் மற்றும் பணம் அல்லது ஆன்மிக அனுபவத்தில் திடீர் மாற்றம் போன்றவை இதற்குக் காரணமாகின்றன. இந்த ஆண்டு துறவறம் மேற்கொள்ள உள்ள பெண்களில், உயர்க் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.                                                                           -
விளம்பரம்
                            -
விளம்பரம்-

குஜராத் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதத் துறையில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வு செய்யும் ராஜ்கோட்டின் ராதே நந்த் பாரதி கருத்து, “எனது தந்தை மிகப்பெரிய செல்வந்தர். எனது வீட்டில் எனக்காக அனைத்து வசதிகளும் உள்ளன. அதில் இல்லாத ஆன்மிக அனுபவத்துக்காக நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். ஜுனா அகாடாவில் எனது குருவிடம் சீடராக நான் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்கிறேன்” என்கிறார். 




 அதைவிட இந்த பாசி மணி விற்பனை செய்து வந்த மோனாலிசா போஸ்லே கதை கடந்த 400 ஆண்டு காலத்திற்கு முன்பே        மராட்டிய மாநிலத்திலிருந்து சரபோஜி படையெடுப்பு மூலம் படை முன்னோடியாக தஞ்சாவூர் நோக்கி மிருக வேட்டை நடத்தி முன்வந்த  நாடோடி (நரிக்குறவர்) மக்களின் பிள்ளையைப் போலவே ஒரு பூனைக் கண் அழகால் வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனை

உத்தரபிரதேஷ மாநிலத்தின் கும்பமேளாவுக்கு ராஜஸ்தான் மாநிலம் இந்தூரிருந்து கிளம்பி குடும்பத்தோடு பாசி மணி, ஊசி மாலைகள், விற்க வந்துள்ள அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மோனாலிசா போஸ்லே என்ற பெண்




   தற்போது  டைரி ஆஃப் மணிப்பூர் என்பது, மணிப்பூரில் நடந்த வன்முறையைப் பற்றி எழுதப்பட்ட படம் ஒரு பதிவு.

இந்தப் பதிவு, மணிப்பூரில் நடந்த வன்முறையைப் பற்றி எழுதப்பட்ட ஒரு முக்கியமான பதிவு.

இந்தப் பதிவு, மணிப்பூரில் நடந்த வன்முறையை சமாளிப்பதில் உதவியது.

மணிப்பூர் வன்முறை சம்பந்தப்பட்ட வழக்கு டைரிகளை என்ஐஏ கைப்பற்றியது.


மணிப்பூர் வன்முறை சம்பந்தப்பட்ட மூன்று வழக்குகளை மீண்டும் பதிவு செய்தது என்ஐஏ. இந்த நிகழ்வு குறித்து படம் தயாரித்த இயக்குனர் தற்போது மோனாலிசாவுக்கு வாய்ப்புகள் வழங்கிய நிலையில் டைரி ஆப் மணிப்பூர் என்ற பாலிவுட் படத்தின் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா தனது அடுத்த படத்தின் வாய்ப்பு வழங்கியுள்ளார்! அவர் ஒரு ராணுவ கமாண்டர் மகளாக நடிக்கிறார் அதற்கு விரைவில் நடிப்புப் பயிற்சி 

மோனலிசாவிற்கு வழங்குவார்கள் மேலும் அவரது குடும்பம் அதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் விரைவில் திரையுலகில் ஒரு நடிகையாக மோனாலிசா வலம் வருவார், 

ஒரு கும்பமேளா திருவிழா இவரது வாழ்க்கையை ஒரே நாளில் மாற்றியமைக்கிறது அந்த திரிவேணி சங்கமம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...