அதானி குழுமத்தின் மீது குற்றச்சாட்டுகளைத் தெரிவித்த அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனர் நடே ஆண்டர்சன் அவரது ஆய்வு நிறுவனத்தை கலைக்கப் போகும் முடிவினை அறிவித்தார். உடனடியாக பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பு இன்று உயர்ந்துள்ளது. இந்த நிறுவனம் அதானி குழுமத்தின் மீது பங்கு முறைகேடுகள் குறித்து குற்றச்சாட்டை ஏற்கனவே முன் வைத்தது. ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் பங்குச் சந்தை குறித்த ஆய்வை மேற்கொண்டது.
2023-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டதில், அதானி குழுமத்தின் கணக்கில் முறைகேடு செய்திருப்பதாகவும் பங்குகள் விலையை செயற்கையாக அதிகரித்திருப்பதாகவும் குற்றம்சாட்டியதால் அப்போது அதானி குழுமத்தின் பங்குகள் 50 சதவீதம் வரை சரிந்தது. இந்தக் குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்தது.
ஹிண்டன்பர்க் நிறுவனம் உலகம் முழுவதுமுள்ள பல முன்னணி நிறுவனங்களின் மீது குற்றச்சாட்டுகளைக் கூறி அறிக்கை வெளியிட்டது. பங்குத் தரகு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும் இந்த நிறுவனம், சுயலாபத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாகவும் எதிர் தரப்பினர் மத்தியில் பேஞப்பட்டது. ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் நிறுவனர் நாதன் ஆண்டர்சன், தனது நிறுவன இணையதளத்தில், “நாங்கள் மேற்கொண்டு வந்த திட்டங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், நிறுவனத்தைக் கலைக்க முடிவு செய்துள்ளோம். எங்களுடைய கடைசி திட்டத்தையும் (போன்ஸி) முடித்து விட்டோம். அது குறித்து பங்குச்சந்தை வாரியத்திடம் தெரிவித்து விட்டோம். அதன்படி நேற்று கடைசி நாள்” எனக் கூறியுள்ளார்.
இந்த மாற்றம் நடக்க என்ன காரணம் என உற்று நோக்கினால், அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் ஜனவரி மாதம் 20-ஆம் தேதி அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்கும் நிலையில், எங்கள் நிறுவனத்தை மூடும் முடிவுக்கு பின்னால் எவ்வித அச்சுறுத்தலுமில்லை என ஆண்டர்சன் தெரிவித்துள்ள போதும். அதை உலக மக்கள் நம்பும் நிலையில் இல்லை. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களைப் பெற அதானி குழுமம் இலஞ்சம் வழங்கியதாக, அமெரிக்காவில் கவுதம் அதானி மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கும் பதிவு செய்யப்பட்ட செயல் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் விரிசலும், பாதிப்பையும் ஏற்படுத்தும் என ஜோ பைடன் அரசுக்கு குடியரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லான்ஸ் கூடன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுபோல, அதானி குழுமம் மட்டுமல்லாது இந்திய பங்குச் சந்தை வாரியத்தின் (செபி) தலைவர் மாதவி புரி புச் மற்றும் அவருடைய கணவர் மீதும் ஹிண்டன்பர்க் நிறுவனம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. பாஜகவின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா எக்ஸ் தளத்தில், தெரிவித்த கருத்து “அமெரிக்காவில் புதிய அதிபராக ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்டிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்துக்கு ஜார்ஜ் சோரஸ் அறக்கட்டளை நிதியுதவி வழங்கி வந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையை மேற்கோள் காட்டி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தை முடக்கி வந்தது. ஹிண்டன்பர்க் நிறுவனம் மற்றும் அதற்கு நிதியுதவி வழங்கிய ஜார்ஜ் சோரஸ் அறக்கட்டளையுடன் காங்கிரஸ் கட்சி கூட்டு சேர்ந்து இந்தியாவின் சில்லறை முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது” எனவும் கூறியுள்ளார். ஆக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இந்திய வர்த்தகத்தில் அமெரிக்காவை துருப்புச் சீட்டாக வைத்து அரசியல் நடத்தி வந்த நிகழ்வு தற்போது புலப்படுகிறது.
கருத்துகள்