தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக மாநில அரசு தாக்கல் செய்த வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் கோரிக்கை ஏற்று ஒரு வாரம் தள்ளி வைத்த உச்சநீதிமன்றம்
தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில் ஒரு வாரத்துக்குள் முடிவெடுக்கும் படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காதது,
துணை வேந்தர் நியமனக் குறுக்கீட்டுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடர்ந்ததில், சட்டமன்றப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்
அளிக்காமல் தாமதப்படுத்துகிறார். மேலும் துணைவேந்தர்கள் நியமனத்தில் குறுக்கிடுகிறார் எனக் கூறப்பட்டிருந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் , தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்பான விவகாரத்தில் ஒரு வாரத்தில் மத்திய அரசு முடிவு எடுக்கவில்லை எனில் நீதிமன்றத்தின் இறுதித் தீர்வை உத்தரவாகப் பிறப்பிப்போம் எனத் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடித்து வருவதாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கூறும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்களைத் தாக்கல் செய்ததில், ‘‘தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே குறிப்பிட்ட கால வரம்புக்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், அதைப்போல் துணை வேந்தர்கள் நியமனத்திலும் ஆளுநர் ஆர்.என்.ரவி தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்
எனத் தெரிவிக்கப்பட்டது. வழக்கை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கட்டுப்பட்டவர். குறிப்பாக மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரம் உட்பட அனைத்திலும் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நினைக்கிறாரா என கேள்வி எழுப்பி வழக்கின் விசாரணையை மதியம் தள்ளி வைத்திருந்ததையடுத்து
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக ஒரு புதிய மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில்,‘‘அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்களின் பதவி காலம் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் முடிவுக்கு வந்தது. பாரதிதாசன் மற்றும் பெரியார் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் பணி நீட்டிப்புக் காலமும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மே மாதம் நிறைவாகிறது. அந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு தேடுதல் குழுவை அமைத்துள்ளது.
ஆனால் ஏற்கனவே செய்தது போலவே பல்கலைக்கழக மானிய குழுவின் உறுப்பினரை இந்த குழுவில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே இதே விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் மீண்டும் தமிழ்நாடு ஆளுநரின் இந்த அறிவுறுத்தல் விதிமுறைகளுக்கு எதிரானதாகும். எனவே இந்த விவகாரத்தில் மூல வழக்கை விசாரிக்கும் பொழுது இந்த புதிய தகவல்களையும் கருத்தில் கொண்டு உரிய விதமான கூடுதல் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமென்று தெரிவித்திருந்த நிலையில் அந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, ‘‘தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்பான வழக்கு விவகாரத்தில் இருக்கும் நிலவரத்தை அறிந்து பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்கிறோம். எனவே விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் கூடுதல் முன்னேற்றங்கள் உள்ளது. அதனையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆர்.மகாதேவன் ‘‘தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளதா அல்லது பழைய நிலையே தொடருகிறதா என்று கேள்வியெழுப்பினார். தொடர்ந்து தமிழ்நாடு அரசு தப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர் வாதத்தில், ‘‘தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையேயான மோதல் போக்கு என்பது பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதுவரை முடிவுக்கு வரவில்லை. குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் ஆளுநர் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. முக்கிய மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகிறார். இதனால் மக்களுக்கான முக்கியமான திட்டங்கள் அனைத்தும் நிலுவையிலுள்ளது. குறிப்பாக தற்போது பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான பிரச்னையும் எழுந்துள்ளது. துணை வேந்தர்களை நியமனம் செய்யும் விவகாரத்திலும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் தலையீடு உள்ளது குறித்த புதிய கூடுதல் ரிட் மனுவும் தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்வான உத்தரவை விரைந்து பிறப்பிக்க வேண்டுமென தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘இந்த வழக்கை ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கிறோம். அதற்குள் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் தரப்பில் இருந்து இந்த விவகாரத்தில் ஒரு தீர்வைக் காண வேண்டும். இல்லையெனில், வழக்கை நாங்கள் விசாரித்து இறுதியாக தீர்த்து வைப்போம். எனவே இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதிரடியாக உத்தரவிட்டனர். அதனால் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு இறுதி விசாரணைக்காக அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் பட்டியலிடப்படும்.
கருத்துகள்