முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக மாநில அரசு தாக்கல் செய்த வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் கோரிக்கை ஏற்று ஒரு வாரம் தள்ளி வைத்த உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில் ஒரு வாரத்துக்குள் முடிவெடுக்கும் படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காதது,


துணை வேந்தர் நியமனக் குறுக்கீட்டுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது 
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடர்ந்ததில், சட்டமன்றப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்


அளிக்காமல் தாமதப்படுத்துகிறார். மேலும் துணைவேந்தர்கள் நியமனத்தில் குறுக்கிடுகிறார் எனக் கூறப்பட்டிருந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் , தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்பான விவகாரத்தில் ஒரு வாரத்தில் மத்திய அரசு முடிவு எடுக்கவில்லை எனில் நீதிமன்றத்தின் இறுதித் தீர்வை உத்தரவாகப் பிறப்பிப்போம் எனத் தெரிவித்தனர். 

 தமிழ்நாடு அரசுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடித்து வருவதாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கூறும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்களைத் தாக்கல் செய்ததில், ‘‘தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே குறிப்பிட்ட கால வரம்புக்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், அதைப்போல் துணை வேந்தர்கள் நியமனத்திலும் ஆளுநர் ஆர்.என்.ரவி தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்



எனத் தெரிவிக்கப்பட்டது. வழக்கை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கட்டுப்பட்டவர். குறிப்பாக மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரம் உட்பட அனைத்திலும் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நினைக்கிறாரா என கேள்வி எழுப்பி வழக்கின் விசாரணையை மதியம் தள்ளி வைத்திருந்ததையடுத்து


தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக ஒரு புதிய மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில்,‘‘அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்களின் பதவி காலம் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் முடிவுக்கு வந்தது. பாரதிதாசன் மற்றும் பெரியார் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் பணி நீட்டிப்புக் காலமும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மே மாதம் நிறைவாகிறது. அந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு தேடுதல் குழுவை அமைத்துள்ளது.

ஆனால் ஏற்கனவே செய்தது போலவே பல்கலைக்கழக மானிய குழுவின் உறுப்பினரை இந்த குழுவில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே இதே விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் மீண்டும் தமிழ்நாடு ஆளுநரின் இந்த அறிவுறுத்தல் விதிமுறைகளுக்கு எதிரானதாகும். எனவே இந்த விவகாரத்தில் மூல வழக்கை விசாரிக்கும் பொழுது இந்த புதிய தகவல்களையும் கருத்தில் கொண்டு உரிய விதமான கூடுதல் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமென்று தெரிவித்திருந்த நிலையில் அந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, ‘‘தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்பான வழக்கு விவகாரத்தில் இருக்கும் நிலவரத்தை அறிந்து பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்கிறோம். எனவே விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் கூடுதல் முன்னேற்றங்கள் உள்ளது. அதனையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆர்.மகாதேவன் ‘‘தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளதா அல்லது பழைய நிலையே தொடருகிறதா என்று கேள்வியெழுப்பினார்.   தொடர்ந்து தமிழ்நாடு அரசு தப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர் வாதத்தில், ‘‘தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையேயான மோதல் போக்கு என்பது பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதுவரை முடிவுக்கு வரவில்லை. குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் ஆளுநர் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. முக்கிய மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகிறார். இதனால் மக்களுக்கான முக்கியமான திட்டங்கள் அனைத்தும் நிலுவையிலுள்ளது. குறிப்பாக தற்போது பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான பிரச்னையும் எழுந்துள்ளது. துணை வேந்தர்களை நியமனம் செய்யும் விவகாரத்திலும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் தலையீடு உள்ளது குறித்த புதிய கூடுதல் ரிட் மனுவும் தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்வான உத்தரவை விரைந்து பிறப்பிக்க வேண்டுமென தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘இந்த வழக்கை ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கிறோம். அதற்குள் மத்திய  அரசு மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் தரப்பில் இருந்து இந்த விவகாரத்தில் ஒரு தீர்வைக் காண வேண்டும். இல்லையெனில், வழக்கை நாங்கள் விசாரித்து இறுதியாக தீர்த்து வைப்போம். எனவே இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதிரடியாக உத்தரவிட்டனர். அதனால் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு இறுதி விசாரணைக்காக அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் பட்டியலிடப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...