38 ஐஏஎஸ் உயர் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் உயர் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளதில் கூட்டுறவுத்துறை யின் செயலாளராக சத்யபிரதா சாஹூ. ஐஏஎஸ் தமிழ்நாடு மின்வாரியம் தலைவராக ஜெ. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார், கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியராக பவன்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறையில் செயலாளராக சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறையின் செயலாளராக ஜெயகாந்தன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்
தேனி மாவட்ட ஆட்சியராக, சேலம் மாநகராட்சி ஆணையரான ரஞ்சித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். வனத்துறையின் செயலாளராக சுப்ரியா சாஹூவை நியமிக்கப்ட்டுள்ளது. கைத்தறித் துறையின் இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குநராக அண்ணாதுரை ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு உதவி ஆட்சியரான நாராயண சர்மா செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகராட்சி ஆணையரான ரஞ்சித் சிங் தேனி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளராக சத்யபிரதா சாகு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உயர்கல்வித்துறையின் செயலாளராக சமயமூர்த்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயலாளராக மதுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளராக சுப்ரியா சாகு நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் தலைவராக ஜெ.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வணிக வரி மற்றும் பதிவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக குமார் ஜெயந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.TANGEDCO தலைவர் நந்தகுமாரை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு துறை செயலாளராக செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டார். பணியிட மாற்றம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு முற்றிலும் தமிழில் இருந்தது. அலுவலர்களின் பெயர், அவர்கள் பணியிடம், யாருக்குப் பதிலாக யார் பணி அமர்த்தப்படுகின்றனர் என்பது முழுப் பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள்