முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மார்ச் 5 ஆம் தேதி தொகுதி மறு சீரமைப்பு பாதிப்பு குறித்து பேச தமிழ்நாட்டில் அணைத்துக் கட்சிக் கூட்டம்

தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தெற்கு மாநிலங்கள் சந்திக்க போகும் பாதிப்பு 

சுதந்திரத்திற்குப் பின்னர் 1951, 1961, 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புகளின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. 

1951ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிக்கப்பட்ட பின்னர் தொகுதிக்கு சராசரியாக 7.3 லட்சம் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைக்கு 494 தொகுதிகள் என நிர்ணயிக்கப்பட்டது.


1961 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் தொகுதிக்கு சராசரியாக 8.4 லட்சம் மக்கள் தொகை என்கிற அடிப்படையில் நாடாளுமன்றத்திற்கு 522 தொகுதிகள் என நிர்ணயம் செய்யப்பட்டது.

1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின்னர் தொகுதிக்கு சராசரியாக 10.1 லட்சம் மக்கள் தொகை என்கிற அடிப்படையில் மக்களவைக்கு 543 தொகுதிகள் என நிர்ணயம் செய்யப்பட்டது. 

தற்போது மக்களவையில் 23.74 சதவீதமாக உள்ள தென் இந்தியாவின் பிரதிநிதித்துவம், 18.97 சதவீதமாகக் குறையும் என தேர்தல் ஆணைய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 


மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் தலா 8 இடங்களை இழக்க நேரிடும்.  ஆந்திரப் பிரதேசமும், தெலுங்கானாவும் தலா 8 இடங்களை இழக்க நேரிடும். ஆனால் அதே நேரம் உத்திரப்பிரதேசம், பீகார், இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் முறையே 11, 10, 6, 4 இடங்களைக் கூடுதலாக பெறும்.

2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 848 ஆக உயர்த்தப்பட்டால், தென் இந்தியாவின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 164 ஆக உயரும். 


ஆனால் பிரதிநிதித்துவத்தின் சதவீதம் தற்போது உள்ளதை விடக் குறைவாக 19.34 சதவீதமாகத்தான் இருக்கும்.

உத்தரபிரதேசம் தற்போது 80 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளை கொண்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரை செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 848 ஆக உயரும் போது உத்தரபிரதேசத்தின் எண்ணிக்கை 143 ஆக அதிகரிக்கும். தற்போதுள்ள 14.73 சதவீத பிரதிநிதித்துவம் 16.86 சதவீதமாக ஆக அதிகரிக்கும். 




பீகாரில் தற்போது உள்ள 40 இடங்கள் மொத்த எண்ணிக்கை 848 ஆக அதிகரிக்கும்போது 79 ஆக உயரும். தற்போது 7.36 சதவீதமாக உள்ள பிரதிநிதித்துவம் 9.31ஆக அதிகரிக்கும்.

மத்தியப் பிரதேசத்தில் தற்போதுள்ள 29 என்கிற எண்ணிக்கை 848ல் 52 ஆக உயரும். தற்போது 5.34 சதவீதமாக உள்ள மத்திய பிரதேசத்தின்  பிரதிநிதித்துவம் 6.13ஆக உயரும்.நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாக


அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு  மார்ச் மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு 45 கட்சிகளுக்கு  தமிழ்நாடு அரசு சார்பில் அழைப்பு :-

1.திராவிட முன்னேற்றக் கழகம்

2.இந்திய தேசிய காங்கிரஸ்

3.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

4.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

5.இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

6.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

7.விடுதலை சிறுத்தைகள் கட்சி

8.மனிதநேய மக்கள் கட்சி

9.அகில இந்திய பார்வர்டு பிளாக்

10.தமிழக வாழ்வுரிமை கட்சி

11.மக்கள் நீதி மய்யம்

12.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

13.ஆதி தமிழர் பேரவை

14.முக்குலத்தோர் புலிப்படை

15.மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

16.மக்கள் விடுதலை கட்சி

17.அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

18.பாட்டாளி மக்கள் கட்சி

19.தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்)

20.தேசிய முற்போக்கு திராவிட கழகம்

21.அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

22.பாரதிய ஜனதா கட்சி

23.தமிழக வெற்றிக் கழகம்

24.நாம் தமிழர் கட்சி

25.புதிய தமிழகம்

26.புரட்சி பாரதம் கட்சி

27.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

28.புதிய நீதிக் கட்சி

29.இந்திய ஜனநாயகக் கட்சி

30.மனிதநேய ஜனநாயகக் கட்சி

31.இந்திய சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி

32.இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்

33.பெருந்தலைவர் மக்கள் கட்சி

34.அனைத்து  இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்

35.பசும்பொன் தேசிய கழகம்

36.அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்

37.தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி

38.கலப்பை மக்கள் இயக்கம்

39.பகுஜன் சமாஜ் கட்சி




40.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை

41.ஆம் ஆத்மி கட்சி

42.சமதா கட்சி

43.தமிழ்ப்புலிகள் கட்சி

44.கொங்கு இளைஞர் பேரவை

45.இந்திய குடியரசு கட்சி. ஆகிய கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...