முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஒரு வாரம் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 5000 அபராதமும் விதித்துத் தீர்ப்பு

தமிழகத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத அலுவலர்கள் மற்றும் உயர் அலுவலர்களுக்கு நீதிமன்றங்கள் கண்டனம் தெரிவித்த நிலையில்


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஒரு வாரம் சிறைத் தண்டனையும், ரூபாய் 5000  அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வு உத்தரவு பிறப்பித்தது.



திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி ஹெலின் ரோனிகா ஜேசுபெல். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்:


திசையன்விளை சமாரியா செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில், தற்காலிக உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்தேன்.




இங்கு ஏற்கனவே பணியாற்றிய ஆசிரியர், பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், காலியாக இருந்த அந்தப் பணியிடத்தில் நியமிக்கப்பட்டேன். என் நிய மனத்தை அங்கீகரிக்க, பள்ளி நிர்வாகம், மாவட்டக் கல்வி அலுவலருக்குப் பரிந்துரை செய்தது. பல காரணங்களைக் கூறி, என்னை பணி நிரந்தரம் செய்ய, மாவட்டக் கல்வி அலுவலர் மறுத்துவிட்டார். என் நியமனத்தை அங்கீகரிக்கக் கோரி,




சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடர்ந்த
வழக்கை விசாரித்த நீதி மன்றம். 2023 ஆம் ஆண்டில் என் நியமனத்தை அங்கீகரிக்கவும், பணி நியமனத் தேதியிலிருந்து, அதற்குரிய பணப்பலன்களை வழங்கவும் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை என் நியமனத்தை அங்கீகரிக்க வில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத,



பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குனர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவ டிக்கை எடுக்க வேண்டும். 
எனக் கூறப் பட்ட நிலையில்.எதிர் தரப்பினராக  1.காகர்லா உஷா,           2) அறிவொளி, 3)சின்னராசு,4) தயாபதிநல்லதம்பி, ஆகியோர் சேர்க்கப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் அம்ஜத் கான் ஆஜரான நிலையில்



இந்த மனு, நீதிபதி எல். விக்டோரியா கௌரி முன்னிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

2019 ஆம் ஆண்டிலிருந்து ஒப்புதல் அளிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டதை நிறைவேற்ற வில்லை.

அதற்கு மாறாக, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் ஒப்புதல் அளித்ததாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்; இது ஏற்புடையதல்ல.


அவர், நீதிமன்றத்தில் ஆஜராக, நோட்டீஸ் பிறப்பித்தும் ஆஜராகவில்லை; நீதிமன்றத்தின் உத்தரவும் நிறைவேற்றப் படவில்லை. எனவே, திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராசுக்கு, ஒரு வாரம் சாதாரண சிறைத் தண்டனையும் மற்றும் ரூபாய் 5000  அபராதமும் விதிக் கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றி, பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதியில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது இந்த மாவட்டத்தில் மட்ட்டுமல்ல புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இதே நிலையில் தான் உள்ளது. 

சமீப காலமாக, உயர் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல் லஞ்சம் எதிர்பார்த்து தட்டிக் கழித்து வரும் அலுவலர்கள் மற்றும் உயர் அலுவலர்களின் செயல்களுக்கு, நீதிமன்றம் அவ்வப்போது அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்துத் தான் வருகிறது.


இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், முதன்மைக் கல்வி அலுவலருக்கு தண்டனை விதிக் சுப்பட்டிருப்பது, அரசு அலுவலர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில் உள்ளது. காரணம் தவறு செயுயம் அரசு சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மற்றும் உயர் அலுவலர்களுக்கு மக்கள் மற்றும் அரசாங்கம் மற்றும் நீதிமன்றத்தின் மீதிருந்த பயம் 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அறவே இல்லாமல் போனதும் ஒரு காரணம். அந்த நிலை மாற வேண்டும் இல்லை மாண்புமிகு நீதிமன்றம் தான் மாற்ற வேண்டும்.இந்த ஊழல் அரசு அலுவலர்களை நினைத்தால் மலைக்கள்ளன் திரைப்படத்தின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது 

"எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்.  சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார். 

பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டிப் பாமர மனுஷனை வலையினில் மாட்டி. எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே.. நம் நாட்டிலே....!?"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...