முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அடுத்த விரிசலை நோக்கி அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் குமுறல்

முதன் முதலாக அத்திக்கடவு - அவினாசி நீர் வழித்திட்டத்தை நிறைவேற்றக் கோரி 


முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரப்பக் கவுண்டர் தமிழ்நாடு அரசிடம் 1957ஆம் ஆண்டு கோரிக்கை வைத்தார். அறுபதாண்டு காலமாக நிலுவையிலுள்ள அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி பகுதி மக்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக, திட்டத்துக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில், 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு - செலவுத் திட்டத்தை 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதியன்று தாக்கல் செய்த தமிழ்நாடு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இந்தத்திட்டம் 34 மாதங்களில் நிறைவடையும் என அறிவித்தார். இந்த நிலையில் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வரான போது அடிக்கல் நாட்டப்பட்டு,


ரூபாய்.1652 கோடி நிதி ஒதுக்கப்பட்டதால், அத்திக்கடவு – அவிநாசித் திட்ட கூட்டமைப்பு மற்றும் 3 மாவட்ட விவசாயிகள் சார்பில், அவருக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையன்று, கோயமுத்தூரில் பாராட்டு விழா

நடந்தது. எடப்பாடி கே.பழனிசாமியுடன், முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்ற நிகழ்வில். அதிமுக மூத்த தலைவரும், திட்டத்தில் பயனடையும் பகுதியின் தற்போதய சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்காததுடன் டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை, சென்னை இராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டிலுள்ள அதிமுக தலைமை  அலுவலகத்தில்  காணொளிக் காட்சி வாயிலாக எடப்பாடி கே. பழனிசாமி  திறந்து வைத்தார். அதிமுக மூத்த தலைவர்கள் பெரும்பாலானோர் பங்கேற்ற நிலையில், கே.ஏ.செங்கோட்டையன் அதிலும் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு  மனுக்கொடுக்க வந்த கே.ஏ.செங்கோட்டையன், பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.

கோபிசெட்டிப்பாளையமா நகராட்சியுடன் சில ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிராக மனுக் கொடுக்க வந்ததாகக் கூறியவர், பாராட்டு விழாவில், பங்கேற்காததற்கான காரணத்தை கூறினார்.

பாராட்டுவிழா அழைப்பிதழில், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை என விழா ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்ததாகக் கூறிய செங்கோட்டையன், ''நீங்கள் கலந்து பேசியிருந்தால் என்னுடைய உணர்வுகளைக் கூறியிருப்பேன். 3 நாட்களுக்கு முன்புதான் அழைப்பிதழ் கொடுக்கிறீர்கள்'' என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கூறினேன் என்றார்.


அத்துடன், '' பாராட்டு விழாவை புறக்கணித்தேன் என்பதை விட என் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறேன் '' எனத் தெரிவித்தார். எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு நடந்த பாராட்டு விழாவை, அதிமுக ஏற்பாடு செய்யவில்லை. விவசாயிகள் கூட்டமைப்புதான் ஏற்பாடு செய்தது. அதில் அனைத்துக் கட்சி விவசாயிகளும் உள்ளதால் அரசியல் கலப்பு இருக்கக் கூடாது என்பதற்காக எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை அவர்கள் வைக்கவில்லை.'' என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டி.ஜெயக்குமார் பேட்டி வெளியான சிறிது நேரத்தில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், ''எம்ஜிஆர் கட்சி துவக்கிய நாளிலிருந்து, செங்கோட்டையன் இருக்கிறார். 1977 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். அவர் தற்போது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஜெயலலிதாவின் தொண்டன் என்ற முறையில், அவர் சரியாகச் சொல்லியிருக்கிறார் எனக் கருதுகிறேன். அதிமுக தொடர் தோல்விக்கு எடப்பாடி கே.பழனிசாமி காரணமாகவுள்ளார். அவர் விரைவில் அதிமுகவுக்கு மூடுவிழா நடத்திவிடுவார் என்று நான் கூறிவருகிறேன். அதை ஏற்கும் விதமாக செங்கோட்டையன் கருத்துத் தெரிவித்துள்ளதாக நினைக்கிறேன்.'' என்றார். அத்திக்கடவு–அவிநாசி திட்டத்தை ஆய்வு செய்யச் சொல்லி முதலில் நிதி ஒதுக்கியது ஜெயலலிதா தான்; அவருடைய ஆட்சியின் நீட்சி தான் பழனிச்சாமியின் ஆட்சி அப்படியிருக்கையில் ஜெயலலிதாவின் படத்தைப் போடாததை ஏற்க முடியாது'' என டி.டி.வி. தினகரன் கருத்துத் தெரிவித்திருந்தார், இந்த நிலையில் அதிமுகவில் அடுத்த விரிசலை நோக்கி பயணிக்கும் நிலை நன்றாகவே தெரிகிறது.   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...