முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருப்பரங்குன்றம் ஹிந்து முன்னணி இயக்கத்தின் அறப்போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி குவிந்தது பக்தர்கள் கூட்டம்

ஹிந்து முன்னணி இயக்கத்தின் அறப்போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கியது.


இந்த நிலையில் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருந்த பாஜக மற்றும் ஹிந்து இயக்கங்களைச் சேர்ந்த அனைவரையும் விடுவிக்கவும் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. சில மாற்றங்களை நோக்கி தமிழ்நாடு நகர்ந்து கொண்டுள்ளது எனத் தோன்றுகிறது!


இன்று மதுரையில் கூடிய பெருங் கூட்டமும், அதற்குக் காரணமான நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கும், அரசு தரப்புக்கும் நடைபெற்ற விவாதங்கள் மிக முக்கியத்துவம் பெறுகிறது.

திருப்பரங்குன்றம்  மலை  தொடர்பான விவகாரத்தில் மதுரையில் இன்று மாபெரும் பொதுக்கூட்டம் போல எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. 

இந்த விவகாரத்தில் இன்று நீதிபதிகள்; 




“மலைக் கோவிலில் உள்ள ஆக்கிரமிப்புகள், ஆக்கிரமிப்பாளர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. 

மலையில் கால்நடைகளைப்பலியிட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?” 


எனக் கேள்வி எழுப்பினர்.

அப்போது அரசுத் தரப்பில், 

அது தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து பரிமாற முயன்றதாக 200 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.வழக்கின் விசாரணையில்


  மாநில அரசு தரப்பு வழக்கறிஞர், "மதுரையில் மற்றொரு பாபர் மசூதி போன்ற சம்பவம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காகப் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 11-ஆம் தேதி வரை முருகன் கோவில் தை மாதம் பூசம் விழாக்காலம் என்பதால் இதுபோன்ற சூழலில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது" என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிட்டார். அதற்கு 

உயர்நீதிமன்ற நீதிபதி:-, "போராட்டத்தில் பங்கேற்றால் சட்ட நடவடிக்கை என்பது சரியான முறை இல்லை" என்றார்!


நீதிபதிகள், “இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு முன்பே அதைத் தடுக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” என அறிவுறுத்தினர். 

மேலும், அரசுத் தரப்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.


மனுதாரர்கள் பழங்கானத்தத்தில் நடத்த விருப்பம் தெரிவித்தனர். நீதிமன்றம் அதை ஏற்றது.

“ஆர்ப்பாட்டம் நடத்துவது அரசியலமைப்புக்கு உட்பட்டது. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். பழங்காநத்தம் பகுதியில் இன்று மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கப்படுகிறது.’’ என அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

நீதிமன்றமும், மாநில அரசும் அணுகும் முறை ஒரே கோணத்தில் இருப்பதாகத் தெரிகிறது.


மேலும் இன்று மாலை 5.00 மணிக்கு மதுரை பழங்காநத்தத்தில் அறப்போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்த. 

நிலையில் மாலை சரியாக 5.00 மணிக்கு மதுரை பழங்காநத்தத்தில் ஹிந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலை காக்கும் அறப்போராட்டம் நடைபெற்றது காரைக்குடியிலிருந்து மதுரை பழங்காநத்தம் நோக்கி ஹெச். ராஜா உள்ளிட்ட நபர்கள் 

சென்றனர் இந்த நிலையில் பழனி செல்லும் பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் காவடிகள் புறப்படத் துவங்கியது. இதில் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியுடன் இந்தப் பிரச்சினை அனுகப்படுகிறது 

நேற்று முதல் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்லும் வழியிலும், மலை மீதுள்ள காசி விசுவநாதர் கோயில், சிக்கந்தர் சமாதி எனும் தர்ஹாவுக்கு செல்லும் வழியிலும், கீழேயுள்ள பள்ளிவாசல் முன்பும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.



இன்று காலை பாஜக பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் மதுரையிலுள்ள வீட்டில் காவலில் வைக்கபட்டார். ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் திருப்பூரில் கைது செய்யப்பட்டார். இதனிடையே காவல் துறையினருக்கு தெரியாமல் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முன் பா.ஜ.க. கொடியுடன் வந்து குழுமி முழக்கமிட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள்.



இந்த சூழலில் ஹிந்து முன்னணி சார்பில் தாக்கல் செயப்பட்ட மனுவை இன்று மதியம் விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆர்பாட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும் மதம் மற்றும் தனி நபர்களை விமர்சித்தோ, பிரச்னை ஏற்படும் வகையிலோ ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பக்கூடாதென்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாதென்றும் பொதுமக்களை தொந்தரவு செய்யக் கூடாது, ஒரு மைக்கிற்கு மேல் பயன்படுத்தக் கூடாது, கட்சிக் கொடிகள் பயன்படுத்தக் கூடாதென்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்திருந்தனர். ஹிந்து அமைப்பினருக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் ஆர்ப்பாட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து மதுரை பழங்காநத்தம் ரவுண்டான பகுதியில் 1000 க்கும் மேற்பட்ட இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினர் குவிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த பகுதியைச் சுற்றிலும் தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...