முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தான் பணி செய்யும் அலுவலகம் தீப்பிடித்து எரிந்ததில் சதித் திட்டம் உள்ளதாக ஏடிஜிபி குற்றச்சாட்டும், டிஜிபி மறுப்பும்

தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் காவல்துறை கூடுதல் இயக்குனராகப் பணி செய்துவரும் கல்பனா நாயக்.


2024 ஆம் ஆண்டு சென்னை எழும்பூரில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் ஐஜியாகப் பணியாற்றிய போது, ஜூலை மாதம் 28-ஆம் தேதி அவரது அலுவலக அறை திடீரெனத் தீப்பிடித்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் அணைத்தனர். இந்த விபத்தில் பல முக்கியமான ஆவணங்கள் சேதமடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில் இந்த விவகாரம் குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலுக்கு கல்பனா நாயக் கடிதம் அனுப்பியதில்,"நான் என் அறையைச் சென்று பார்த்தபோது, எனது நாற்காலி எரிந்து, கருகிப் போயிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். நான் எனது அலுவலகத்திற்கு சற்று முன்பாக வந்திருந்தால் நான் என் உயிரைக் கூட இழந்திருப்பேன். காவல்துறையினரைத் தேர்வுசெய்வதில் அந்த ஆண்டு மட்டுமல்லாமல் அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் இருந்த மிகப் பெரிய தவறுகளைச் சுட்டிக்காட்டியதே என் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்குச் சென்றுவிட்டது. "தீ விபத்து நடந்ததற்கு அடுத்த நாள், தன்னை பரிசீலிக்காமலும் தன்னுடைய ஒப்புதல் இல்லாமலும் தேர்வுசெய்யப்பட்டவர்களின் புதிய பட்டியல் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் வெளியானது. மற்ற காவலர்கள் சூழ்ந்திருக்கும்போதே ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாதது காவல்துறையின் மீதே களங்கத்தை ஏற்படுத்துகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.


‘தனது அலுவலகம் தீப்பிடித்து எரிந்ததில் சதித் திட்டம் உள்ளதாகவும், தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சதித் திட்டம் நடந்துள்ளதாவும் தெரிவித்திருந்தார். மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திலுள்ள குறைப்பாடுகளை நான் சுட்டிக்காட்டியதால் இந்த சதித் திட்டம் நடந்திருக்கலாம் என தான் கருதுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கின்றன.



தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் தனது அறையில் தீ வைக்கப்பட்டதாக ADGP எழுப்பிய குற்றச்சாட்டை DGP மறுத்துள்ளார். மேலும், பெண் ADGP அறையில் நிகழ்ந்த தீ விபத்துக்கு சதித்திட்டம் காரணமல்ல என  விளக்கமளித்துள்ளார். DGP சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் :- கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி கூடுதல் DGP கல்பனா நாயக்கிடமிருந்து கடிதம் வந்தது. அது தொடர்பாக உடனடியாக விசாரிக்க சென்னை காவல் துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிந்து விசாரித்தனர். திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையர், தடயவியல் துறை நிபுணர்கள், தமிழ்நாடு தீயணைப்புத் துறை அலுவலர்கள், தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி கழகத்தின் தொழில்நுட்ப பிரிவு மற்றும் தனியார் ஏர்கண்டிஷன் நிறுவன நிபுணர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு மாற்றப்பட்டது. இதனிடையே நிபுணர்கள் குழு அளித்த அறிக்கையில், அறையிலுள்ள காப்பர் வொயர்கள் மூலம் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பெட்ரோல், டீசல் போன்ற எளிதில் தீப்பிடிக்க கூடிய எந்த எரிபொருளும் அறையில் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே கூடுதல் DGP கல்பனா நாயக்கின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவித சதித் திட்டமும் இல்லை என்று நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர். என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்-: 2023-ஆம் ஆண்டு 750 சார்பு ஆய்வாளர்கள் மற்றும் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர்கள் தேர்வு நடைபெற்றதன் முடிவுகள் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 5 விண்ணப்பதாரர்கள் வழக்குத் தொடர்ந்தனர். மேலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. இதில் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும் வழிகாட்டுதல் அடிப்படையிலும் தேர்வு முடிவுகள் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்.3-ஆம் தேதி வெளியிடப்பட்டன. எனவே கூடுதல் DGP கூறியுள்ள குற்றச்சாட்டுகளில் எந்தவித உண்மையுமில்லை. என கூறப்பட்டிருந்தது. இதனிடையே இந்த பிரச்சினை தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் சீனிவாசலு தலைமையிலான தனிப்படை காவல்துறை தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுவரை 31 பேரிடம் விசாரித்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் DGP கல்பனா நாயக் ஐ.பி.எஸ் அவர்கள் தெரிவித்திருப்பதாக வரும் செய்தியில் 

"சற்று நேரம் முன்பு நான் சென்றிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன்" என அவரின் கூற்று 

ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.

உடனடியாக ADGP கல்பனா நாயக் ஐ.பி.எஸ். அவர்களின்  குற்றச்சாட்டை வெளிப்படைத் தன்மையுடன் முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ளோர் இருப்பின், அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தி பல்வேறு கட்சியின் தலைவர்கள் தெரிவித்த நிலையில் பெண் ஏ.டி.ஜி.பி திருமதி கல்பனா நாயக்  கொலை செய்ய முயற்சி சம்பந்தமாக புகார் மனு கொடுத்துள்ளார்   

விசாரணை முடிவில் ஏடிஜிபி கல்பனா நாயக் அவர்களின் குற்றச்சாட்டுக்கு நீதி கிடைக்குமா என்பது தெரியும்.

காவல்துறை துணை ஆய்வாளர்கள் நியமனத்தில், தற்போதைய மற்றும் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளை, ஏடிஜிபி கல்பனா நாயக் அவர்கள் சுட்டிக்காட்டியதற்குப் அவரது அலுவலகம் எரிக்கப்பட்டிருப்பதாக. சந்தேகம் மேலும் தீ விபத்து நடந்த போது அவர் அங்கு இல்லை என்பதே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...