அமெரிக்க ராணுவ விமானம் மூலம் இந்திய நாட்டிற்கு கடத்தப்பட்ட சட்டவிரோதமான குடியேறிகள் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்
சட்ட விரோதமாக கடவுச்சீட்டு மற்றும் வீஷா இல்லாமல்
அமெரிக்காவிலிருந்த இந்திய நபர்கள் இராணுவ விமானம் மூலம் 100 க்கும் மேற்பட்டோர் நாடு கடத்தப்பட்ட நபர்கள் அமிர்தசரஸில் இறங்கினர். USA விலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களில் 79 ஆண்கள் மற்றும் 25 பெண்களில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 30 பேர்,
ஹரியானா மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தலா 33 பேர், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் சண்டிகரைச் சேர்ந்த இருவர் அடங்குவர்.
104 சட்டவிரோத இந்திய நாட்டின் அமெரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த அமெரிக்க நாட்டு இராணுவ விமானம் புதன்கிழமை அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது, இது ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் முதல் நாடு கடத்தலாகும்.
இந்திய சட்ட விரோதக் குடியேறிகளை நாடு கடத்துவதற்கு அமெரிக்கா ஒரு இராணுவ விமானத்தைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை, இதற்கு முன்பு வணிக விமானங்களில் நாடுகடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டன.
ஜெர்மனியில் உள்ள ராம்ஸ்டீன் விமான தளத்தில் எரிபொருள் நிரப்பப்பட்ட சி-17 குளோப்மாஸ்டர், நாடுகடத்தப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு, பிற்பகலில் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
நாடு கடத்தப்பட்ட 104 புலம்பெயர்ந்தோரில் 79 பேர் ஆண்கள் மற்றும் 25 பேர் பெண்கள். அதில் பதின்மூன்று பேர் 4 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறார்களாவர். நாடு கடத்தப்பட்டவர்களில் வயதான நபர் மும்பையைச் சேர்ந்த 44 வயதான குர்விந்தர் சிங்.
பஞ்சாபைச் சேர்ந்த 30 பேரில், ஆறு பேர் கபுர்தலாவைச் சேர்ந்தவர்கள், ஐந்து பேர் அமிர்தசரஸைச் சேர்ந்தவர்கள், தலா நான்கு பேர் ஜலந்தர் மற்றும் பாட்டியாலாவைச் சேர்ந்தவர்கள், தலா இரண்டு பேர் லூதியானா மற்றும் எஸ்.பி.எஸ். நகரைச் சேர்ந்தவர்கள், தலா ஒருவர் குருதாஸ்பூர், சங்ரூர், எஸ்.ஏ.எஸ். நகர், ஃபதேகர் சாஹிப் மற்றும் தர்ன் தரன் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள்.
இதற்கிடையில், ஹரியானாவைச் சேர்ந்த 33 நபர்கள் நாடுகடத்தப்பட்டவர்கள் பெரும்பாலும் குருக்ஷேத்ரா, கர்னல் மற்றும் கைதலைச் சேர்ந்தவர்கள். .
, மேலும் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட வேண்டிய சுமார் 18,000 சட்டவிரோதக் குடியேறிகளை அமெரிக்கா அடையாளம் கண்டிருந்தது , அவர்களில் பெரும்பாலோர் பஞ்சாப் மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. அமெரிக்காவில் உரிய ஆவணமற்ற இந்தியக் குடியேறிகளின் மொத்த மக்கள் தொகை தெளிவாக இல்லாததால், உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாமென்றும் அது குறிப்பிட்டிருந்தது
பியூ ஆராய்ச்சி மையத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து சுமார் 7,25,000 சட்டவிரோதமான குடியேறிகள் அமெரிக்காவில் வசிக்கின்றனர், இது மெக்சிகோ மற்றும் எல் சால்வடாருக்குப் பிறகு மூன்றாவது பெரிய அங்கீகரிக்கப்படாத குடியேறியவர்கள் குழுவாக இது அமைகிறது.
"கழுதை வழிகள்" அல்லது சுற்றுலா வீஷா பிற சட்டவிரோத வழிகளில் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து அமெரிக்காவிற்குள் நுழைந்த பஞ்சாபிலிருந்து சென்ற பலர் இப்போது நாடு கடத்தப்படுவதை எதிர்கொள்கின்றனர்.
அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (USCBP) படி, 2022 ஆம் ஆண்டு முதல் நவம்பர் மாதம் 2024 ஆம் ஆண்டு வரை சுமார் 1,700 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
2022 ஆம் ஆண்டில், 409 பேர் இடைமறிக்கப்பட்டனர், 2023 ஆம் ஆண்டில் 730 பேர், 2024 ஆம் ஆண்டில் நவம்பர் வரை 517 பேர் இடைமறிக்கப்பட்டனர், இதில் 42 சிறார்களும் அடங்குவர்.
டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் பரந்த குடியேற்றக் கொள்கையின் முக்கிய பகுதியாக இந்த பெருமளவிலான நாடுகடத்தல்கள் உள்ளன , இது கடுமையான அமலாக்கம் மற்றும் ஆவணமற்ற நபர்களை அகற்றுவதில் கவனம் செலுத்தியுள்ளது .கடந்த வாரம், அமெரிக்க ஜனாதிபதி பிரதமர் நரேந்திர மோடியுடன் குடியேற்றம் குறித்து விவாதித்ததாகக் கூறினார், மேலும் "சட்டவிரோதக் குடியேறிகள்" திரும்பி வருவதைக் கையாள்வதில் இந்தியா "சரியானதைச் செய்யும்" என்றும் கூறினார்.
இதேபோல், வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் முன்பு, அமெரிக்கா உட்பட வெளிநாடுகளில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்திய பிரஜைகள் "சட்டப்பூர்வமாகத் திரும்புவதற்கு" புது தில்லி திறந்திருக்கும் என்று கூறியிருந்தார்.
சரிபார்ப்புக்குப் பிறகு இந்த புலம் பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோவிடம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார். நாடுகடத்தலுக்கு தகுதியானவர்களின் அடையாளங்களை இந்தியா சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் , இருப்பினும் சரியான எண்ணிக்கை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமளியைத் தொடர்ந்து நேற்று மதியம் 2 மணிக்கு அவை மீண்டும் கூடும்போது இதுபற்றி விளக்கமளித்தார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். ஆனால் அதில் பொது நீதி யாதெனில் :-
சட்ட விரோதமாகத் தங்கியவர்களுக்கு கை விலங்கு போட்டால் என்ன? கால் விலங்கு போட்டால் என்ன? எதற்காக இந்த சட்டவிரோத குற்றவாளிகள் மீது எதிர் கட்சிகள் கரிசனம் ஒன்றும் புரியவில்லையே என மக்கள் பேசுவது நம் காதில் விழுகிறது..அமெரிக்கோ வெஸ்புக்கி கண்டறிந்து 13 ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் பலர் குடியேற்றம் நடந்த நிலையில் தான் அமெரிக்கா ஐக்கிய நாடு உருவான நிலையில் அமெரிக்கக் குடியேற்ற சட்டம்,
அமெரிக்காவுக்கு சென்றவர்கள் எல்லாம் அதிகம் சம்பாதிக்கும் அதி புத்திசாலிகள் என்ற ஒரு மோகம் இந்திய உயர் தட்டு மக்கள் மத்தியில் பரவியது ஒரு காலம், காரணம் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் பிடிக்காத பாசிச ஏகாதிபத்திய நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது,ஆகவே அதை உயர் தட்டு மக்கள் அமெரிக்கா, லண்டன் என புலம் பெயர்ந்தது உண்டு, அதில் சட்ட விரோதமாக 2023 ஆம் ஆண்டு சென்ற ஹரியானாவின் கைதலைச் சேர்ந்த சந்தீப்பும் ஒருவர்.
2023 ஆம் ஆண்டு 'கழுதை வழி' எனப்படும், சட்ட விரோத பாதையில் அதாவது கலிபோர்னியா வழி இவர் அமெரிக்கா சென்று, குடியேறியுள்ளார். அங்கு வேலை செய்வதற்கான பணி அனுமதியும் ஓட்டுநர் உரிமம் பெற்றபின், அவர் தஞ்சம் கோரிய அசைலம் அதாவது அகதி வீஷா மனு USA எம்பசி மூலம் நிராகரிக்கப்பட்டது.
160 நாட்களுக்குப் பிறகு, அவருக்கு வேலை செய்வதற்கான அனுமதி கிடைத்துள்ளது. ஓட்டுநர் உரிமமும் கிடைத்தது. எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்தது. தஞ்சம் கோரிய மனு நிராகரிக்கப்பட்டு, நவம்பர் 20 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு, 72 நாட்கள் சிறையில் வைக்கப்பட்ட நிலையில். தற்போது இந்தியாவிற்கு நாடு கடத்திவிட்டார்கள்" அமெரிக்கா செல்லும் ஆசையில்
2 ஏக்கர் விவசாய நஞ்சை நிலத்தை விற்று, ரூபாய் 42 லட்சம் பணம் முகவர்களுக்கு கொடுத்ததாக, சந்தீப் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். நிலம் போய்விட்ட பின்னும் கூட சந்தீப் பாதுகாப்பாக திரும்பியதால் மகிழ்ச்சியடைவதாக அவரது தாயார் கூறுகிறார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாம் முறையாக பதவியேற்ற பின், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்த அமெரிக்கா தொடங்கியதால், சந்தீப் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி விமானத்தில் ஏற்றப்பட்டு அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார். தற்போது தாய் நாட்டிற்கு இந்தியா திரும்பிய நிலையில் தான் செய்த சட்ட விரோதமான செயல் குறித்து உணரும் நிலையில் உள்ளார். இராணுவ விமானத்தில் ஏற்றப்பட்ட போது எப்படி நடத்தப்பட்டார் என்பது குறித்து குஷ்பிரீத் தகவல்.
"அவர்கள் எங்களுக்கு கைவிலங்கிட்டபோது, சூழலின் தீவிரத்தை உணர்ந்தோம். முதலில் அவர்கள் வரவேற்பு மையத்துக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார்கள்.
நாங்கள் அங்கேயே விடப்படுவோம் என்று நினைத்தோம், ஆனால் நாங்கள் தரையிறங்கியபோது, எங்கள் முன் ஒரு இராணுவ விமானம் நிற்பதைக் கண்டோம்" என்று விவரிக்கிறார்.
குஷ்பிரீத் கடந்த காலத்தில்
அமெரிக்காவை அடைய நிறைய பணம் செலவானது, மேலும் "எங்கள் பணத்தை நாங்கள் திரும்பப் பெற்றால், நாங்கள் இங்கே ஏதாவது வேலை செய்வோம்" என்றார், ஆனால் இப்போது நாங்கள் வெளியே வேலை தேட மாட்டோம்" என்றும் கூறினார்.
குஷ்பிரீத் சிங்கின் தந்தை உணர்ச்சிவயப்பட்டு காணப்பட்டார். அழுதுகொண்டே, "எங்கள் பணத்தை எங்களுக்குத் திருப்பிக் கொடுங்கள், முழுத் தொகையையும் கொடுக்கவில்லை என்றாலும், குறைந்தபட்சம் பாதியையாவது கொடுங்கள்" என்றார்.
அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கான விதிகளை விதிக்கிறது. குடிவரவு மற்றும் தேசிய சட்டம் (INA) அமெரிக்க குடியேற்றச் சட்டத்தின் முக்கியமான சட்டமாகும்.
அமெரிக்க குடியேற்ற சட்டத்தின் சில விதிகள்:
குடும்ப அடிப்படையில் குடியேற்ற வீஷாக்கள் வழங்கப்படுகின்றன.
குடியேறுபவர்கள் மற்றும் குடியேறாதவர்கள் என்றும், தற்காலிக பார்வையாளர்கள் என்றும் பிரிக்கப்படுகின்றனர்.
குடியேற்ற சட்டத்தை மீறி வேற்று நாட்டினர்களை அமெரிக்காவுக்கு கொண்டுவரும் போக்குவரத்து நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
சில குறிப்பிட்ட மண்டலங்களில் இருந்து வரும் குடியேற்றம் தடை செய்யப்படும்.
அமெரிக்கக் குடியேற்ற சட்டத்தின் சில முக்கிய சட்டங்கள்: 1924 ஆம் ஆண்டின் குடியேற்றச் சட்டம், ஜான்சன்-ரீட் சட்டம். சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த குடியேறிகளை இந்தியா திரும்பப் பெறத் தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை உயர் அலுவலர்கள் அமெரிக்க உயர் அலுவலர்களிடம் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்