முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமெரிக்க ராணுவ விமானம் மூலம் இந்திய நாட்டிற்கு கடத்தப்பட்ட சட்டவிரோதமான குடியேறிகள் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்

சட்ட விரோதமாக கடவுச்சீட்டு மற்றும் வீஷா இல்லாமல்


அமெரிக்காவிலிருந்த இந்திய நபர்கள் இராணுவ விமானம் மூலம் 100 க்கும் மேற்பட்டோர் நாடு கடத்தப்பட்ட நபர்கள் அமிர்தசரஸில் இறங்கினர். USA விலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களில் 79 ஆண்கள் மற்றும் 25 பெண்களில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 30 பேர்,


ஹரியானா மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தலா 33 பேர், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் சண்டிகரைச் சேர்ந்த இருவர் அடங்குவர்.

104 சட்டவிரோத இந்திய நாட்டின் அமெரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த அமெரிக்க நாட்டு இராணுவ விமானம் புதன்கிழமை அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது, இது ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் முதல் நாடு கடத்தலாகும்.

இந்திய சட்ட விரோதக் குடியேறிகளை நாடு கடத்துவதற்கு அமெரிக்கா ஒரு இராணுவ விமானத்தைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை, இதற்கு முன்பு வணிக விமானங்களில் நாடுகடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டன.

ஜெர்மனியில் உள்ள ராம்ஸ்டீன் விமான தளத்தில் எரிபொருள் நிரப்பப்பட்ட சி-17 குளோப்மாஸ்டர், நாடுகடத்தப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு, பிற்பகலில் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.


நாடு கடத்தப்பட்ட 104 புலம்பெயர்ந்தோரில் 79 பேர் ஆண்கள் மற்றும் 25 பேர் பெண்கள். அதில் பதின்மூன்று பேர் 4 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறார்களாவர். நாடு கடத்தப்பட்டவர்களில் வயதான நபர் மும்பையைச் சேர்ந்த 44 வயதான குர்விந்தர் சிங்.

பஞ்சாபைச் சேர்ந்த 30 பேரில், ஆறு பேர் கபுர்தலாவைச் சேர்ந்தவர்கள், ஐந்து பேர் அமிர்தசரஸைச் சேர்ந்தவர்கள், தலா நான்கு பேர் ஜலந்தர் மற்றும் பாட்டியாலாவைச் சேர்ந்தவர்கள், தலா இரண்டு பேர் லூதியானா மற்றும் எஸ்.பி.எஸ். நகரைச் சேர்ந்தவர்கள், தலா ஒருவர் குருதாஸ்பூர், சங்ரூர், எஸ்.ஏ.எஸ். நகர், ஃபதேகர் சாஹிப் மற்றும் தர்ன் தரன் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள்.

இதற்கிடையில், ஹரியானாவைச் சேர்ந்த 33 நபர்கள் நாடுகடத்தப்பட்டவர்கள் பெரும்பாலும் குருக்ஷேத்ரா, கர்னல் மற்றும் கைதலைச் சேர்ந்தவர்கள்.    .


, மேலும் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட வேண்டிய சுமார் 18,000 சட்டவிரோதக் குடியேறிகளை அமெரிக்கா அடையாளம் கண்டிருந்தது , அவர்களில் பெரும்பாலோர் பஞ்சாப் மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. அமெரிக்காவில் உரிய ஆவணமற்ற இந்தியக் குடியேறிகளின் மொத்த மக்கள் தொகை தெளிவாக இல்லாததால், உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாமென்றும் அது குறிப்பிட்டிருந்தது

பியூ ஆராய்ச்சி மையத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து சுமார் 7,25,000 சட்டவிரோதமான குடியேறிகள் அமெரிக்காவில் வசிக்கின்றனர், இது மெக்சிகோ மற்றும் எல் சால்வடாருக்குப் பிறகு மூன்றாவது பெரிய அங்கீகரிக்கப்படாத குடியேறியவர்கள் குழுவாக இது அமைகிறது.


"கழுதை வழிகள்" அல்லது சுற்றுலா வீஷா பிற சட்டவிரோத வழிகளில் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து அமெரிக்காவிற்குள் நுழைந்த பஞ்சாபிலிருந்து சென்ற பலர் இப்போது நாடு கடத்தப்படுவதை எதிர்கொள்கின்றனர்.

அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (USCBP) படி, 2022 ஆம் ஆண்டு முதல் நவம்பர் மாதம் 2024 ஆம் ஆண்டு வரை சுமார் 1,700 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

2022 ஆம் ஆண்டில், 409 பேர் இடைமறிக்கப்பட்டனர், 2023 ஆம் ஆண்டில் 730 பேர், 2024 ஆம் ஆண்டில்  நவம்பர் வரை 517 பேர் இடைமறிக்கப்பட்டனர், இதில் 42 சிறார்களும் அடங்குவர்.

டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் பரந்த குடியேற்றக் கொள்கையின் முக்கிய பகுதியாக இந்த பெருமளவிலான நாடுகடத்தல்கள் உள்ளன , இது கடுமையான அமலாக்கம் மற்றும் ஆவணமற்ற நபர்களை அகற்றுவதில் கவனம் செலுத்தியுள்ளது .கடந்த வாரம், அமெரிக்க ஜனாதிபதி பிரதமர் நரேந்திர மோடியுடன் குடியேற்றம் குறித்து விவாதித்ததாகக் கூறினார், மேலும்   "சட்டவிரோதக் குடியேறிகள்" திரும்பி வருவதைக் கையாள்வதில் இந்தியா "சரியானதைச் செய்யும்" என்றும் கூறினார்.


இதேபோல், வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் முன்பு, அமெரிக்கா உட்பட வெளிநாடுகளில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்திய பிரஜைகள் "சட்டப்பூர்வமாகத் திரும்புவதற்கு" புது தில்லி திறந்திருக்கும் என்று கூறியிருந்தார்.




சரிபார்ப்புக்குப் பிறகு இந்த புலம் பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோவிடம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார். நாடுகடத்தலுக்கு தகுதியானவர்களின் அடையாளங்களை இந்தியா சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் , இருப்பினும் சரியான எண்ணிக்கை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.




இது தொடர்பாக, வெளியுறவு அமைச்சகம் ஜனவரி மாதம் 24 ஆம் தேதியன்று, அமெரிக்காவிலோ அல்லது "உலகின் எந்த இடத்திலோ" முறையான ஆவணங்கள் இல்லாமல் "காலதாமதமாகத் தங்கியிருக்கும்" அல்லது வசிக்கும் சட்ட விரோத இந்திய நாட்டினரைத் திரும்ப அழைத்துச் செல்வதற்கு இது உதவும் என்றும்  கூறியது.அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக நேற்று நாடுகடத்தப்பட்ட அல்லது அங்கேயே சிறை வைக்கப்படாமல்  திருப்பி அனுப்பப்பட்ட 104 இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டதாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.


அமளியைத் தொடர்ந்து நேற்று மதியம் 2 மணிக்கு அவை மீண்டும் கூடும்போது இதுபற்றி விளக்கமளித்தார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். ஆனால் அதில் பொது நீதி யாதெனில் :-



சட்ட விரோதமாகத் தங்கியவர்களுக்கு கை விலங்கு போட்டால் என்ன? கால் விலங்கு போட்டால் என்ன? எதற்காக இந்த சட்டவிரோத குற்றவாளிகள் மீது எதிர் கட்சிகள் கரிசனம் ஒன்றும் புரியவில்லையே என மக்கள் பேசுவது நம் காதில் விழுகிறது..அமெரிக்கோ வெஸ்புக்கி கண்டறிந்து 13 ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் பலர் குடியேற்றம் நடந்த நிலையில் தான் அமெரிக்கா ஐக்கிய நாடு உருவான நிலையில் அமெரிக்கக் குடியேற்ற சட்டம்,       


   
அமெரிக்காவுக்கு சென்றவர்கள் எல்லாம் அதிகம் சம்பாதிக்கும் அதி புத்திசாலிகள் என்ற ஒரு மோகம் இந்திய உயர் தட்டு மக்கள் மத்தியில் பரவியது ஒரு காலம், காரணம் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் பிடிக்காத பாசிச ஏகாதிபத்திய நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது,ஆகவே அதை உயர் தட்டு மக்கள் அமெரிக்கா, லண்டன் என புலம் பெயர்ந்தது உண்டு, அதில் சட்ட விரோதமாக 2023 ஆம் ஆண்டு சென்ற ஹரியானாவின் கைதலைச் சேர்ந்த சந்தீப்பும் ஒருவர்.


2023 ஆம் ஆண்டு 'கழுதை வழி' எனப்படும், சட்ட விரோத பாதையில் அதாவது கலிபோர்னியா வழி  இவர் அமெரிக்கா சென்று, குடியேறியுள்ளார். அங்கு வேலை செய்வதற்கான பணி அனுமதியும் ஓட்டுநர் உரிமம் பெற்றபின், அவர் தஞ்சம் கோரிய அசைலம் அதாவது அகதி வீஷா மனு USA எம்பசி மூலம் நிராகரிக்கப்பட்டது.                   

           
160 நாட்களுக்குப் பிறகு, அவருக்கு வேலை செய்வதற்கான அனுமதி கிடைத்துள்ளது.  ஓட்டுநர் உரிமமும் கிடைத்தது. எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்தது. தஞ்சம் கோரிய மனு நிராகரிக்கப்பட்டு, நவம்பர் 20 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு, 72 நாட்கள் சிறையில் வைக்கப்பட்ட நிலையில். தற்போது இந்தியாவிற்கு நாடு கடத்திவிட்டார்கள்" அமெரிக்கா செல்லும் ஆசையில் 

2 ஏக்கர் விவசாய நஞ்சை நிலத்தை விற்று, ரூபாய் 42 லட்சம் பணம் முகவர்களுக்கு கொடுத்ததாக, சந்தீப் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். நிலம் போய்விட்ட பின்னும் கூட சந்தீப் பாதுகாப்பாக திரும்பியதால் மகிழ்ச்சியடைவதாக அவரது தாயார் கூறுகிறார்.


அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாம் முறையாக பதவியேற்ற பின், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்த அமெரிக்கா தொடங்கியதால், சந்தீப் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி விமானத்தில் ஏற்றப்பட்டு அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார். தற்போது தாய் நாட்டிற்கு இந்தியா திரும்பிய நிலையில் தான் செய்த சட்ட விரோதமான செயல் குறித்து உணரும் நிலையில் உள்ளார்.    இராணுவ விமானத்தில் ஏற்றப்பட்ட போது எப்படி நடத்தப்பட்டார் என்பது குறித்து குஷ்பிரீத் தகவல்.

"அவர்கள் எங்களுக்கு கைவிலங்கிட்டபோது, சூழலின் தீவிரத்தை உணர்ந்தோம். முதலில் அவர்கள் வரவேற்பு மையத்துக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார்கள்.


நாங்கள் அங்கேயே விடப்படுவோம் என்று நினைத்தோம், ஆனால் நாங்கள் தரையிறங்கியபோது, ​​எங்கள் முன் ஒரு இராணுவ விமானம் நிற்பதைக் கண்டோம்" என்று விவரிக்கிறார்.

குஷ்பிரீத் கடந்த காலத்தில் 



அமெரிக்காவை அடைய நிறைய பணம் செலவானது, மேலும் "எங்கள் பணத்தை நாங்கள் திரும்பப் பெற்றால், நாங்கள் இங்கே ஏதாவது வேலை செய்வோம்" என்றார், ஆனால் இப்போது நாங்கள் வெளியே வேலை தேட மாட்டோம்" என்றும் கூறினார்.



குஷ்பிரீத் சிங்கின் தந்தை உணர்ச்சிவயப்பட்டு காணப்பட்டார். அழுதுகொண்டே, "எங்கள் பணத்தை எங்களுக்குத் திருப்பிக் கொடுங்கள், முழுத் தொகையையும் கொடுக்கவில்லை என்றாலும், குறைந்தபட்சம் பாதியையாவது கொடுங்கள்" என்றார்.               


 அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கான விதிகளை விதிக்கிறது. குடிவரவு மற்றும் தேசிய சட்டம் (INA) அமெரிக்க குடியேற்றச் சட்டத்தின் முக்கியமான சட்டமாகும். 

அமெரிக்க குடியேற்ற சட்டத்தின் சில விதிகள்: 



குடும்ப அடிப்படையில் குடியேற்ற வீஷாக்கள் வழங்கப்படுகின்றன.

குடியேறுபவர்கள் மற்றும் குடியேறாதவர்கள் என்றும், தற்காலிக பார்வையாளர்கள் என்றும் பிரிக்கப்படுகின்றனர்.


குடியேற்ற சட்டத்தை மீறி வேற்று நாட்டினர்களை அமெரிக்காவுக்கு கொண்டுவரும் போக்குவரத்து நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

சில குறிப்பிட்ட மண்டலங்களில் இருந்து வரும் குடியேற்றம் தடை செய்யப்படும்.

அமெரிக்கக் குடியேற்ற சட்டத்தின் சில முக்கிய சட்டங்கள்: 1924 ஆம் ஆண்டின் குடியேற்றச் சட்டம், ஜான்சன்-ரீட் சட்டம். சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த குடியேறிகளை இந்தியா திரும்பப் பெறத் தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை உயர் அலுவலர்கள் அமெரிக்க உயர் அலுவலர்களிடம் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...