இராமநாதபுரத்தில் பட்டா பெயர் மாறுதலுக்காக ரூபாய்.37 ஆயிரம் லஞ்சம் கேட்ட நிலையில் தப்பித்துச் சென்ற கிராம நிர்வாக அலுவலர்
பார்த்திபனை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தேடுகின்றனர். லஞ்சம் பெற்றுக் கொடுப்பதற்கு உடந்தையான தனியார் இ-சேவை மையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
தனியார் இ-சேவை மையம் மூலமாக பட்டா மாறுதலுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்து இதற்குரிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பத்தை பதிவு செய்து ரூ.60 கட்டணம் பெற்றுக் கொண்டு ரசீது வழங்கப்பட்ட வகையில், இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் அருகே பகவதிமங்கலம் குரூப் கிராமத்தில் பட்டா மாறுதலுக்காக, இ-சேவை மையத்தில் விண்ணப்பித்த நபர்
அப்போது கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் தனக்கு லஞ்சம் கொடுத்தால் தான் பட்டா செய்து தர முடியும் எனக் கூறியுள்ளார். முதலில் அதிக தொகை கேட்டவர், பேரம் பேசியதில் குறைத்து முடிவில் 37,000 ரூபாய் லஞ்சத்துக்கு ஒப்புக்கொண்டார். லஞ்சப் பணத்தை, இ-சேவை மைய உரிமையாளரிடம் கொடுத்து விடும்படியும் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத மனுதாரர், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனைப்படி, பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய புகார் தாரர் தந்த ரூபாய் நோட்டுகளை பதிவு செய்து லஞ்சமாகக் கொடுக்க புகார் தாரர் கொண்டு சென்ற பணத்தை இ-சேவை மைய உரிமையாளர் அகமது ஜாப்ரின் அலி வாங்கிய போது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும், லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் தப்பியோடிய நிலையில் தலைமுறைவாகி விட்டார். அவரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
கருத்துகள்