முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வழக்கு தடை விலகிய நிலையில் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு வந்த முதல் சரிவு

வழக்கு தடை விலகிய நிலையில் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு வந்த முதல் சரிவு. கொடி மற்றும் சின்னம் குறித்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம். தீர்ப்பு 


கொடி மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக  எடப்பாடி கே.பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம், அருள்முருகன் அமர்வு முடிவு. இரட்டை இலை சின்னம் தீர்ப்பு குறித்து  அதிமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் முன்னாள் அமெரிக்க சி.வி.சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் 

"அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிப்பது தேர்தல் ஆணையத்தின் வேலையல்ல. அதற்கு அதிகாரமுமில்லை.  மனு கொடுத்துள்ள நபர் அதிமுகவிலேயே இல்லை. இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இருவரும் கையெழுத்திட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி இந்த வழக்கைதா தொடுத்துள்ளார் தேர்தல் ஆணையம் இதை விசாரிக்கலாமா? என்று  முதலில் முடிவு செய்ய வேண்டும் என்றுதான் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது குமாஸ்தா வேலை மட்டுமே தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டும். அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது" என்றார். முன்னாள் காலஞ்சென்ற எம்ஜிஆர் உருவாக்கி பின்னர் காலஞ்சென்ற ஜெ.ஜெயலலிதா வளர்த்த அதிமுகவை அவர் மரணத்திற்கு பிறகு பல கூறுகளாக உடைத்தவர்கள்


தற்போது உடைந்தவைகளை  வைத்து ஒட்ட வைக்க முயற்சி செய்யும் நிலையில் உடைந்த கண்ணாடி (அதிமுக) ஒட்ட மறுக்கிறது. இதுவே அதிமுகவில் நடக்கும் நிலை, அதிமுக முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் வீட்டுக்கு தற்போது கூடுதலாக காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.




ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் குள்ளம்பாளையத்திலுள்ள கே.ஏ.செங்கோட்டையன் வீட்டில் ஏற்கனவே 2 காவலர்கள் பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது, ஒரு ஆய்வாளர் தலைமையில் மேலும் 4 பேர் பாதுகாப்புப்  பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.


அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திண்டுக்கல் சூரியமூர்த்தி மற்றும் புகழேந்தி உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனுவில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்கக் கோரியிருந்தார் சூரியமூர்த்தி. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் இது தொடர்பாக 4 வாரங்களில் முடிவெடுக்க 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி உத்தரவிட்டது. இதனால் புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் தங்களது தரப்பு வாதங்களை மனுக்களாகத் தாக்கல் செய்தனர்.

இதற்கு எதிராக எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அந்த முறையீட்டு மனுவில், அதிமுகவில் உறுப்பினராகவே இல்லாதவர்கள் எப்படி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்ய முடியும்? (எப்போதிலிருந்து உறுப்பினராக இல்லாதவர்கள்? ஜெயலலிதா உயிருடன் இருந்த போதா இல்லை அதற்கு பிறகா என்பதே இதில் எழுவினா)

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இந்த விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது. எடப்பாடி கே.பழனிசாமி தரப்பின் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்த தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.



இது தொடர்பான வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்ககு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்த போது எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி, அதிமுகவின் கட்சி விதிகளில் திருத்தம் செய்வது, புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்வது என அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட எந்த விதமான அதிகாரமும் இல்லை. இத்தகைய அதிகாரம் உரிமையியல் நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. அதிமுகவில் எந்த பிளவும் இல்லை. எடப்பாடி கே. பழனிசாமிக்கு கட்சியில் நீடித்த ஆதரவு அப்படியே உள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில் இரட்டை இலை சின்னத்தை முடக்கினால் கட்சிக்கு பேரிழப்பு ஏற்படும். ஆகையால் அதிமுக விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்ய வேண்டும் என வாதிட்டார்.


ஆனால் இந்தியத் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், தேர்தல் ஆணையமானது அதிமுக வழக்கை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் விசாரிக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படியே அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பி வைத்தது என்றார்.மேலும் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையிலுள்ள உரிமையியல் வழக்குகளின் இறுதி முடிவுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்படும். அதிமுகவில் நிலைமை மாறி உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பெரும்பாலானோர் ஆதரவாக உள்ளனர். ஆகையால் தேர்தல் ஆணையம் இதனை விசாரிக்க அதிகாரம் கொண்டதாகும். ஆகையால் தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க முடியாது எனவும் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்


இந்த வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி மாதம் 12- ஆம் தேதி தள்ளி வைத்த நிலையில் தொடர்ந்து இன்று இந்த வழக்கில் வெளியாகும் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரம் உள்ளது என தீர்ப்பு வந்த நிலையில் அதிமுகவில் தற்போது மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின்  தீர்ப்பு மிக முக்கியமானதாகும். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு இன்னும் என்னென்ன சோதனைகளோ, இந்தக் கட்சிக்கு!

அதிமுக  விவகாரம் மீண்டும் ஆரம்ப சிக்கல் நிலைக்கே வந்துவிட்டது!  காரணம் இதில் பின்னணியில் உள்ள ஒரு சட்டாம்பிள்ளை கட்சியின் வேலை தான் 


’ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி’ என்ற நிலையில் இன்றைக்கு அதிமுக நிலை உள்ளது!

ஆளாளுக்கு எகிறி அடிக்கவும், வம்புக்கு இழுக்கவுமான பரிதாப நிலை!

இரண்டாண்டுக்கும் மேலாக நீதிமன்றங்களில் அடுத்தடுத்து போராட்டம் நடத்தி, ’அதிமுக எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தான் உள்ளது’ என நிருபிக்கப் படாதபாடு பட்டார்கள்!

95 சதவிகித சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சி நிர்வாகிகளும் எடப்பாடி கே. பழனிச்சாமி பக்கம்  இருப்பது பட்டவர்த்தனமாக தெரிந்த நிலையிலும், ஒ.பன்னீர் செல்வம்  இணைப்பு தேக்கி நகரும் வழக்கு இத்தனை இழுத்தடிப்புகள்!


எல்லாவற்றையும் கடந்து, சின்னம் கிடைத்தது. ’’அப்பாடா நிம்மதி’’ என பெருமூச்சு விட்ட நிலையில், தேர்தல் கமிஷனில் புகார் தரச் செய்து மீண்டும் விசாரணை! 

ஒ.பன்னீர் செல்வம் பொறுத்த வரை கவுன்சிலர் தேர்தலில் கூட தான் இருக்கும் இடத்தில் தன் அணியைச் சார்ந்தவரை வெற்றி பெற வைக்க இயலாதவர். 


தற்போது பழங்குடிகளுக்கான நிலத்தை  முறைகேடாக அபகரித்த வழக்கில் சிக்கி இருப்பவர். ஊர் மக்களுக்கு தண்ணீர் கிடைக்க வழியில்லாமல் ஏற்கனவே வேறு ஒரு ஆக்கிரமிப்பில் சம்பந்தப்பட்டு ஊரே திரண்டு அவருக்கு எதிராக போராட்டம் செய்தது. 

இவ்வளவு செல்லாக்காசான ஒரு நபருக்கு ஆதரவாக இந்திய நிர்வாக அமைப்பே வரிந்து கட்டிக் கொண்டு, ஒரு பெரும் கட்சியை சிதைத்து சின்னாபின்னப்படுத்தி வருவது !


எடப்பாடி கே.பழனிச்சாமி பாஜகவிடமிருந்து விலகி வந்தாலும், பாஜகவிடம் பம்மிப் பதுங்கி தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். காரணம் கொடநாடு உள்ளிட்ட பல வழக்குகள் பாஜகவை  எதிர்த்துப் பேசி மக்கள் நலன் சார்ந்த அரசியலுக்கு தயார் இல்லாதவராகவே இருக்கிறார். 20 சதவிகித ஓட்டு வங்கி தற்போது சரிந்து இருந்துமே இப்படி மக்கள் நலப் பிரச்சினைகளில் உறுதியான நிலைப்பாடு இல்லாமல், எல்லாவற்றிலும் பாஜக மனம் கோணாமல் நடப்பதிலேயே குறியாக உள்ளார். தன்னை காப்பாற்றிக் கொள்ள இந்த நிலையே தொடர்ந்தால் அதிமுகவிற்கு மீட்சியே இல்லை. 

தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத கட்சி எப்படி தமிழ்நாடு மக்களை காக்கும்? தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை கோரிய எடப்பாடி கே.பழனிச்சாமியின் கோரிக்கை நிராகரிப்பு.

தேர்தல் ஆணையத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சி.பழனிசாமி, OP ரவீந்திரநாத், பெங்களூர் புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், எம்.ஜி.ராமச்சந்திரன், மதுரை காந்தி ஆகியோரது மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரித்து வந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி கே.பழனிசாமி அந்த விசாரணைக்கு தடை ஆணை பெற்றார்.

அந்த தடை ஆணையை நீக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம்  விசாரணை நடத்தலாம் என தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இந்த நிலையில் தற்போது கே. ஏ செங்கோட்டையன் தரப்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் 30 பேர் அணிவகுத்துள்ள தாக ஒரு தகவல் வரும் நிலையில் அவர் ஜெயலலிதா காலத்தில் பிரிந்து போன பல அமைப்புகளை ஒன்று சேர்ந்து பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வருவார் என்றே அரசியல் களம் தற்போது உள்ளது.     மதியம் 2 மணி

வீட்டில் குவியும் தொண்டர்கள் கையெடுத்து கும்பிட்டு எதிர்பாரா பதில் பரபரப்பான சுழலில் கே.ஏ.  செங்கோட்டையன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...