வழக்கு தடை விலகிய நிலையில் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு வந்த முதல் சரிவு. கொடி மற்றும் சின்னம் குறித்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம். தீர்ப்பு
கொடி மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி கே.பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம், அருள்முருகன் அமர்வு முடிவு. இரட்டை இலை சின்னம் தீர்ப்பு குறித்து அதிமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் முன்னாள் அமெரிக்க சி.வி.சண்முகம் செய்தியாளர் சந்திப்பில்
"அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிப்பது தேர்தல் ஆணையத்தின் வேலையல்ல. அதற்கு அதிகாரமுமில்லை. மனு கொடுத்துள்ள நபர் அதிமுகவிலேயே இல்லை. இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இருவரும் கையெழுத்திட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி இந்த வழக்கைதா தொடுத்துள்ளார் தேர்தல் ஆணையம் இதை விசாரிக்கலாமா? என்று முதலில் முடிவு செய்ய வேண்டும் என்றுதான் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது குமாஸ்தா வேலை மட்டுமே தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டும். அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது" என்றார். முன்னாள் காலஞ்சென்ற எம்ஜிஆர் உருவாக்கி பின்னர் காலஞ்சென்ற ஜெ.ஜெயலலிதா வளர்த்த அதிமுகவை அவர் மரணத்திற்கு பிறகு பல கூறுகளாக உடைத்தவர்கள்
தற்போது உடைந்தவைகளை வைத்து ஒட்ட வைக்க முயற்சி செய்யும் நிலையில் உடைந்த கண்ணாடி (அதிமுக) ஒட்ட மறுக்கிறது. இதுவே அதிமுகவில் நடக்கும் நிலை, அதிமுக முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் வீட்டுக்கு தற்போது கூடுதலாக காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் குள்ளம்பாளையத்திலுள்ள கே.ஏ.செங்கோட்டையன் வீட்டில் ஏற்கனவே 2 காவலர்கள் பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது, ஒரு ஆய்வாளர் தலைமையில் மேலும் 4 பேர் பாதுகாப்புப் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திண்டுக்கல் சூரியமூர்த்தி மற்றும் புகழேந்தி உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனுவில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்கக் கோரியிருந்தார் சூரியமூர்த்தி. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் இது தொடர்பாக 4 வாரங்களில் முடிவெடுக்க 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி உத்தரவிட்டது. இதனால் புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் தங்களது தரப்பு வாதங்களை மனுக்களாகத் தாக்கல் செய்தனர்.
இதற்கு எதிராக எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அந்த முறையீட்டு மனுவில், அதிமுகவில் உறுப்பினராகவே இல்லாதவர்கள் எப்படி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்ய முடியும்? (எப்போதிலிருந்து உறுப்பினராக இல்லாதவர்கள்? ஜெயலலிதா உயிருடன் இருந்த போதா இல்லை அதற்கு பிறகா என்பதே இதில் எழுவினா)
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இந்த விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது. எடப்பாடி கே.பழனிசாமி தரப்பின் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்த தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
ஆனால் இந்தியத் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், தேர்தல் ஆணையமானது அதிமுக வழக்கை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் விசாரிக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படியே அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பி வைத்தது என்றார்.மேலும் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையிலுள்ள உரிமையியல் வழக்குகளின் இறுதி முடிவுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்படும். அதிமுகவில் நிலைமை மாறி உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பெரும்பாலானோர் ஆதரவாக உள்ளனர். ஆகையால் தேர்தல் ஆணையம் இதனை விசாரிக்க அதிகாரம் கொண்டதாகும். ஆகையால் தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க முடியாது எனவும் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்
இந்த வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி மாதம் 12- ஆம் தேதி தள்ளி வைத்த நிலையில் தொடர்ந்து இன்று இந்த வழக்கில் வெளியாகும் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரம் உள்ளது என தீர்ப்பு வந்த நிலையில் அதிமுகவில் தற்போது மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மிக முக்கியமானதாகும். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு இன்னும் என்னென்ன சோதனைகளோ, இந்தக் கட்சிக்கு!
அதிமுக விவகாரம் மீண்டும் ஆரம்ப சிக்கல் நிலைக்கே வந்துவிட்டது! காரணம் இதில் பின்னணியில் உள்ள ஒரு சட்டாம்பிள்ளை கட்சியின் வேலை தான்
’ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி’ என்ற நிலையில் இன்றைக்கு அதிமுக நிலை உள்ளது!
ஆளாளுக்கு எகிறி அடிக்கவும், வம்புக்கு இழுக்கவுமான பரிதாப நிலை!
இரண்டாண்டுக்கும் மேலாக நீதிமன்றங்களில் அடுத்தடுத்து போராட்டம் நடத்தி, ’அதிமுக எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தான் உள்ளது’ என நிருபிக்கப் படாதபாடு பட்டார்கள்!
95 சதவிகித சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சி நிர்வாகிகளும் எடப்பாடி கே. பழனிச்சாமி பக்கம் இருப்பது பட்டவர்த்தனமாக தெரிந்த நிலையிலும், ஒ.பன்னீர் செல்வம் இணைப்பு தேக்கி நகரும் வழக்கு இத்தனை இழுத்தடிப்புகள்!
எல்லாவற்றையும் கடந்து, சின்னம் கிடைத்தது. ’’அப்பாடா நிம்மதி’’ என பெருமூச்சு விட்ட நிலையில், தேர்தல் கமிஷனில் புகார் தரச் செய்து மீண்டும் விசாரணை!
ஒ.பன்னீர் செல்வம் பொறுத்த வரை கவுன்சிலர் தேர்தலில் கூட தான் இருக்கும் இடத்தில் தன் அணியைச் சார்ந்தவரை வெற்றி பெற வைக்க இயலாதவர்.
தற்போது பழங்குடிகளுக்கான நிலத்தை முறைகேடாக அபகரித்த வழக்கில் சிக்கி இருப்பவர். ஊர் மக்களுக்கு தண்ணீர் கிடைக்க வழியில்லாமல் ஏற்கனவே வேறு ஒரு ஆக்கிரமிப்பில் சம்பந்தப்பட்டு ஊரே திரண்டு அவருக்கு எதிராக போராட்டம் செய்தது.
இவ்வளவு செல்லாக்காசான ஒரு நபருக்கு ஆதரவாக இந்திய நிர்வாக அமைப்பே வரிந்து கட்டிக் கொண்டு, ஒரு பெரும் கட்சியை சிதைத்து சின்னாபின்னப்படுத்தி வருவது !
எடப்பாடி கே.பழனிச்சாமி பாஜகவிடமிருந்து விலகி வந்தாலும், பாஜகவிடம் பம்மிப் பதுங்கி தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். காரணம் கொடநாடு உள்ளிட்ட பல வழக்குகள் பாஜகவை எதிர்த்துப் பேசி மக்கள் நலன் சார்ந்த அரசியலுக்கு தயார் இல்லாதவராகவே இருக்கிறார். 20 சதவிகித ஓட்டு வங்கி தற்போது சரிந்து இருந்துமே இப்படி மக்கள் நலப் பிரச்சினைகளில் உறுதியான நிலைப்பாடு இல்லாமல், எல்லாவற்றிலும் பாஜக மனம் கோணாமல் நடப்பதிலேயே குறியாக உள்ளார். தன்னை காப்பாற்றிக் கொள்ள இந்த நிலையே தொடர்ந்தால் அதிமுகவிற்கு மீட்சியே இல்லை.
தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத கட்சி எப்படி தமிழ்நாடு மக்களை காக்கும்? தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை கோரிய எடப்பாடி கே.பழனிச்சாமியின் கோரிக்கை நிராகரிப்பு.
தேர்தல் ஆணையத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சி.பழனிசாமி, OP ரவீந்திரநாத், பெங்களூர் புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், எம்.ஜி.ராமச்சந்திரன், மதுரை காந்தி ஆகியோரது மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரித்து வந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி கே.பழனிசாமி அந்த விசாரணைக்கு தடை ஆணை பெற்றார்.
அந்த தடை ஆணையை நீக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இந்த நிலையில் தற்போது கே. ஏ செங்கோட்டையன் தரப்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் 30 பேர் அணிவகுத்துள்ள தாக ஒரு தகவல் வரும் நிலையில் அவர் ஜெயலலிதா காலத்தில் பிரிந்து போன பல அமைப்புகளை ஒன்று சேர்ந்து பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வருவார் என்றே அரசியல் களம் தற்போது உள்ளது. மதியம் 2 மணி
வீட்டில் குவியும் தொண்டர்கள் கையெடுத்து கும்பிட்டு எதிர்பாரா பதில் பரபரப்பான சுழலில் கே.ஏ. செங்கோட்டையன்
கருத்துகள்