முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோவிலில் தெப்பத் தீர்த்தவாரி நடைபெற்றது

 "வண்ண மாடங்கள் சூழ்  திருக்கோட்டியூர்க் கண்ணன் கேசவன்  நம்பி பிறந்தினில்

எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்

கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே".    - பாசுரம்                    வைணவ 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோஷ்டியூர்           


ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோவிலில் தெப்பத் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

மதுரை பாண்டிய நாட்டுத் திருத்தலங்களில்  இடம்பெற்றுள்ளது. முவரும், தேவர்களும், ரிஷிகளும் கூடி ஹிரண்யகசிபுவைக் அழிக்க உபாயத்தைக் கண்டறிந்த இடமாக இந்தஸ்தலம்  கோஷ்டி (கூட்டம்) கூடிய இடமாக அமைந்ததால் திருக்கோஷ்டியூர் என்று அழைக்கப் பெற்றது.  மஹாவிஷ்ணு நரசிம்மராக அவதரித்து ஹிரண்யகசிபுவை அழித்தார். இங்கு அமைந்த திருக்கோஷ்டியூர்



சௌமியநாராயணப் பெருமாள் கோயில் நான்கு புறமும் பெருமதில்கள் சூழ்ந்த, உயர்ந்த இராஜகோபுரத்தோடமைந்த பெருங்கோவிலாகும். பெருமாளின் நின்ற, நடந்த, இருந்த முக்கோலங்களும் அமைந்துள்ளது. திருவரங்கத்திலிருந்து  ஆச்சாரியார் இராமானுஜர் 17 முறை திருக்கோஷ்டியூர் வந்து நம்பியிடம் உபதேசம் பெற  முயன்று சந்திக்க இயலாது திரும்பிய நிலையில்



18 வந்து முறை வந்து உபதேசம் பெற்றார் (நான் செத்து வா ) அடியேன் என்பது அடக்கம் நான் என்பது அகந்தை இந்த நிலையில் இராமானுஜர் பொதுமக்கள் அனைவருக்கும் கருவரை விமானம் மீதேறி உபதேசம் செய்தார் இது வரலாறு. தற்போது அந்த கோபுரம் விமானம் தங்கத் தகடுகள் பொறுத்தும் பணிகள் நடக்கின்றன. இந்த நிலையில் 
தெப்பத்திருவிழா


சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலர் மேதகு இராணி டி எஸ்.கே. மதுராந்தகி நாச்சியார் ஆளுகைக்கு உட்பட்ட 

திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெரும் மாசி மகத் தெப்பத்திருவிழா  இந்தாண்டு  மார்ச் மாதம் 5-ஆம் தேதி துவங்கியது. விழாவில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சிம்ம வாகனம், ஹனுமன் வாகனம், கருட சேவை, சேஷ வாகனம்,


திருவீதி புறப்பாடு, ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி, சூர்ணாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்ததில் தமிழ்நாடு எங்கும் இருந்து  பல மாவட்டங் களைச் சேர்ந்த பல லட்சம்  வைணவ பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.                                                       -விளம்பரம்-     ‌

                           -விளம்பரம்பௌர்ணமி அன்று காலையில் தங்க தோளுக்கினியான் அலங்காரத்தில் திருவீதியுலா புறப்பாடு நிகழ்ச்சியும், பகலில் தெப்ப நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தில் சுவாமி உலா நிகழ்ச்சியும் நடை பெற்றதில் தமிழ்நாடு முழுவதுமிருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பெண்கள் பிராத்தனை வேண்டுதல்கள் நிறைவேற  தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள நான்கு கரைகளில் அகல் விளக்கேற்றி வழிபட்டனர்.                                                 -விளம்பரம்-
                          -
விளம்பரம்-

நேற்று முன்தினம் காலை கோவில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியுடன் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது. விழா


ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவ லர் இராணி டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியார் உத்தரவில் தேவஸ்தானத்தின் மேலாளர் இளங்கோ, திருக்கோஷ்டியூர் சரக தேவஸ்தானத்தின் கண்காணிப்பாளர் சர வணகணேசன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொள்ள வந்த பக்தர்களின் வாகனங்கள் நெரிசல் ஏற்படுத்திய நிலையில் போக்குவரத்து நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நிகழ்வு உள்ளிட்ட வேறு நிகழ்ச்சியும் இருந்த நிலையில் காவல் துறை பங்களிப்பு குறைவாகவே இருந்தது மாவட்ட நிர்வாகம் பிற மாவட்டங்களில் உள்ள காவல்துறை உதவியைப் பெறாது உள்ளூர் காவல்துறை போக்குவரத்தை சரிசெய்ய  சிரமப்பட்டனர்.

தற்காலிகமாக அமைந்த திருவிழா கடைகள் சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்த நிலையில் வெளியூர் வரவு பக்தர்கள் வழி நெடுக சிரமப்பட்டு தான் தெப்பத்திருவிழா காணவேண்டிய நிலை ஏற்பட்டது.           
"பூதம் ஐந்தொடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால்
ஏதம் ஒன்றும் இலாத வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்
நாதனை நரசிங்கனை  நவின்றுஏத்துவார்கள் உழக்கிய
பாததூளிபடுதலால் இவ்உலகம்பாக்கியம்செய்ததே.".... பாசுரம் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...