2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண்மை நிதிநிலையை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று காலை தாக்கல் செய்து உரையாற்றினார்.
அதற்கு முன்னதாக, சென்னை மெரீனாவில் உள்ள டாக்டர் சி.என்.அண்ணாதுரை, டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் பச்சை துண்டு அணிந்து பங்கேற்றனர்.
வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள் என்பதால் விவசாயத்துடன் உழவர்களின் நலனை மையப்படுத்தி வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது
ரூபாய்.42 கோடி செலவில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் ஆலோசனைகள் வழங்கிட வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்கள் மூலம் 1000 முதல்விரின் உழவர் நல சேவை மையங்கள்.
நெல் உற்பத்தியினை அதிகரித்திட ரூபாய்.160 கோடி ஒதுக்கீடு
ரூபாய்.102 கோடியில் முதல் முறையாக 34 இலட்சம் ஏக்கரில் டெல்டா அல்லாத மாவட்டங்களில் செயல்படுத்துதல்
ரூபாய்.58 கோடி செலவில் டெல்டா மாவட்டங்களில் 18 இலட்சம் ஏக்கரில் செயல்படுத்துதல்.
இயற்கை சீற்றங்களால் பயிர் பாதிப்பிலிருந்து உழவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ரூபாய்.841 கோடி ஒதுக்கீட்டில் பயிர் காப்பீட்டுத் திட்டம்.
2024-25 ஆம் நிதியாண்டில் அரவை பருவத்தில் 1 இலட்சத்து 30 ஆயிரம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூபாய்.349 சிறப்பு ஊக்கத்தொகை - ரூபாய்.297 கோடி. 3 இலட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்திட உழவு மானியமாக ரூ.24 கோடி
நுண்ணீர் பாசனத்திட்டம் - 3 இலட்சம் ஏக்கர் பரப்பிற்கு ரூபாய்.1,168 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் முதல் முறையாக முந்திரி வாரியம் உருவாக்கம் - ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
முதன் முறையாக 20 உழவர் சந்தைகளில் பசுமைக் காய்கறிகளை நுகர்வோர் தங்கள் இல்லங்களில் நேரடியாக பெற்றுக்கொள்ள உள்ளூர் இணைய வர்த்தகத் தளத்துடன் (Online Door Delivery) இணைக்கப்படும்.
வேளாண் விளைபொருட்களுக்கான நல்லூர் வரகு (கடலூர்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். 17,000 உழவர்கள் பயனடையும் வகையில் வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்திற்காக ரூ.215 கோடியே 80 இலட்சம் ஒதுக்கீடு
63 ஆயிரம் மலைவாழ் ஆதிதிராவிட பழங்குடியினருக்கு மலை வாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்திட ரூபாய்.22 கோடியே 80 இலட்சம்
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம் திட்டம் 15 திட்டக் கூறுகளுடன் செயல்படுத்திட ரூபாய்.142 கோடி ஒதுக்கீடு
2,338 கிராம ஊராட்சிகளில் தன்னிறைவு பெற்று உழவர் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திடும் உன்னத முயற்சியில் ரூபாய்.269 கோடியே 50 இலட்சம் ஒதுக்கீட்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.
வேளாண்மை விளைபொருட்களுக்கு 100 மதிப்புக் கூட்டும் அலகுகள் அமைத்திட முதற்கட்டமாக ரூபாய்.50 கோடி ஒதுக்கீடு. இதற்கு அதிகபட்சமாக அலகு ஒன்றுக்கு 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
ரூபாய்.50 கோடியே 79 இலட்சம் மதிப்பீட்டில் 11 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்படும்.
மக்காச்சோளம் விவசாயிகள் அதிக வருமானம் பெற 1,87,000 ஏக்கர் பரப்பளவில் ரூபாய்.40 கோடி ஒதுக்கீட்டில் மக்காக்சோளம் உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் செயலாக்கம் நிலக்கடலை, எள், சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் 90 ஆயிரம் விவசாயிகள் ரூபாய்.108
கோடியே 6 இலட்சத்தில் பயனடையும் வகையில் எண்ணெய் வித்துக்கள் இயக்கம்.
தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் ரூபாய்.52 கோடியே 44 இலட்சத்தில் செயல்படுத்தப்படும்.
உயிர்ம வேளாண்மையினை (Organic Farming) பரவலாக்கம் செய்திட ரூபாய்.12 கோடி ஒதுக்கீடு.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் பண்ணை சுற்றுலா
ஆதிதிராவிடர், மற்றும் பழங்குடியின சிறு, குறு உழவர்களுக்கு கூடுதல் மானியம் வழங்க ரூபாய்.21 கோடி ஒதுக்கீடு
குறைந்த நீர்த்தேவையுள்ள பயிர்களை ஊக்குவித்திட ரூ.12 கோடியே 50 இலட்சம் ஒதுக்கீட்டில் மாற்றுப்பயிர் சாகுபடித் திட்டம்
தளர்வில்லா விளைச்சல் பெற தரமான விதை உற்பத்திக்கு ரூபாய்.250 கோடி ஒதுக்கீடு
ரூபாய்.12 கோடியே 21 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் பருத்தி உற்பத்தி பெருக்கத் திட்டம்
“தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை” உயர் மதிப்பு மரங்களை வளர்ப்பதற்கும், அதனை பதிவு செய்து வெட்டுதல் மற்றும் விற்பனைக்கு எடுத்து செல்லுதல் போன்ற அனைத்து நடைமுறைகளையும் எளிதாக்கி பசுமை தமிழ்நாட்டை உருவாக்குதல். ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் ரூபாய்.125 கோடியில் - வீட்டுத் தோட்டத்திற்காக - காய்கறி விதைகள், பழச்செடிகள், பயறு வகைகள் ஆகிய 25 இலட்சம் தொகுப்புகள் வழங்கப்படும்.
4,000 நடமாடும் காய், கனி விற்பனை வண்டிகள் மானியத்தில் வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டம் ரூபாய்.35 கோடியே 26 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
130 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க ரூபாய்.10 கோடியே 50 இலட்சம்.
காவேரி, வெண்ணாறு, வெள்ளாறு வடிநிலப் பகுதிகளிலும், கல்லணை பகுதிகளிலும் உள்ள “சி” மற்றும் “டி” கால்வாய்களில் தூர்வாரும் பணிகளில் மீதமுள்ள 2,925 கிலோ மீட்டர் நிலத்திற்கு ரூபாய்.13 கோடியே 80 இலட்சம் ஒதுக்கீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டம் ரூபாய் 24 கோடி செலவில் 1000 விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
நெல், மக்காச்சோளம், வாழை, நிலக்கடலை, உளுந்து ஆகிய பயிர்களுக்கு விதைப்பு முதல் அறுவடை முடிய உள்ள சாகுபடியில் இயந்திர மயமாக்குதலை கடைபிடிக்க 1,500 ஏக்கர் பரப்பளவில் ரூபாய். 3 கோடி ஒதுக்கீட்டில் இயந்திர சாகுபடி செயல் விளக்கத் திடல்கள் (Demonstration Plots) அமைக்கப்படும்.
ரூபாய். 20 கோடி மதிப்பீட்டில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் 9 ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அமைக்கப்படும் 56 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூபாய்.39 கோடியே 20 இலட்சம் செலவில் மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் புதியதாக ஒருங்கிணைத்து, உழவர்கள் தேசிய அளவில் வர்த்தகம் செய்து, கூடுதல் வருமானம் பெற வழிவகை செய்யப்படும்.
50 உழவர் சந்தைகளில் ரூபாய்.8 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்துதல்
வட்டாரந்தோறும் தேர்வு செய்யப்பட்ட பொது சேகரிப்பு மையங்களில் வேளாண்மை வர்த்தகம் நடத்திட ஏற்பாடு செய்யப்படும்.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு பொருளீட்டுக் கடன் ரூ.10 இலட்சம் வரை வழங்கப்படும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் புதிய கண்டுபிடிப்பிற்காக டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதியாக ரூபாய் 1 கோடி ஒதுக்கீடு.வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையொட்டி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதோடு பாமக உறுப்பினர்கள் அனைவரும் பச்சைத் துண்டு அணிந்து சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன் நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் தவிர மற்ற திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் பச்சைத் துண்டு அணிந்தனர். வேளாண்மை நிதிநிலை அறிக்கை குறித்து குறித்து எதிர் கட்சிகள் கருத்து வருமாறு:- இந்த வேளாண் பட்ஜெட்டில் முளைக்காத விதை, உபயோகமற்ற உயிர் உரங்கள் என முறைகேடு செய்வதற்கான வசதியான திட்டங்களைத் தவிர, விவசாயிகளுக்கு பயன்படும் எந்தவிதமான திட்டமும் இல்லை. விவசாயிகளுக்கு என்று தனியாக வேளாண் பட்ஜெட் என்பது போலியானது. விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட். விவசாயிகளை ஏமாற்றுவதில் தி.மு.க.,வினர் வல்லவர்கள் என்று நிரூபித்துள்ளனர். தனி பட்ஜெட் என்று கூறி விவசாயிகளை தி.மு.க., அரசு ஏமாற்றி உள்ளது. வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நன்மை என்று எதுவும் இல்லை. என எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக சார்பில் எடப்பாடி கே.பழனிசாமி விமர்சித்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர், ஜி.கே மணி
வேளாண் பட்ஜெட்டில் சிறுதானிய உற்பத்திக்கு முன்னுரிமை அளித்துள்ளதை வரவேற்கிறோம். வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு விற்பனைக் கிடங்கு அமைக்க வேண்டும் என்றார்.
பாரதிய ஜனதா கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்., வானதி சீனிவாசன்
வேளாண் பட்ஜெட்டில் ஒவ்வொரு தலைப்பின் கீழ் பார்த்தால் சிறு தானியங்கள் உள்ளிட்டவற்றில் கூடுதலாக தொகை ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார்கள்.
பிரதமர் மோடியின் திட்டங்களை இவர்கள் அமல்படுத்துகிறார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
பருவ கால பாதிப்பு உள்ளிட்டவற்றிக்கு ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்வதற்காக ஒரு பெரிய திட்டங்கள் ஏதும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. என்றார். இதில் பொது நீதி யாதெனில்:- பச்சை துண்டு போடுவதால் மட்டும் பூமியில் பசுமை வருமா என்பதே எழுவினா?
கருத்துகள்