பல கோடி சொத்துக்குவிப்பு. சார்பதிவாளர் திண்டுக்கல் சாந்தி
அவரது மகன், மருமகள் மீதும் வழக்கு. திண்டுக்கல் சாந்தி திண்டுக்கல் மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தவர் 2018-ஆம் ஆண்டில் சார்பதிவாளராக பணி உயர்வான நிலையில் தஞ்சாவூர், சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சார்பதிவாளராகப் பணியாற்றி மேட்டுப்பாளையத்தில் சார்பதிவாளராக (பொறுப்பு) பணியாற்றிய போது அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்திருப்பதாகக் கருதினால் யாரும் புகார் அளிக்கலாம். அப்படி புகார் அளித்தால் அதன் உண்மைத் தன்மையை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரிப்பார்கள். தகுந்த ஆதாரங்கள் இருந்தால் குறிப்பிட்ட அரசு ஊழியர் மீது வழக்குப் பதிவு செய்தங கைது செய்து நடவடிக்கை எடுப்பார்கள் அந்த வகையில்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா மேட்டுப்பட்டி சாந்தி 2000-ம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்து பின்னர் 18 வருடங்களில் படிப்படியாக பணி உயர்வில் கடந்த 2018-ஆம் ஆண்டில் சார்பதிவாளரானார் பின்னர் தஞ்சாவூர், சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல ஊர்களில் சார்பதிவாளராகப் பணியாற்றினார்.
தற்போது அவர் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் மாவட்ட உதவி சார்பதிவாளராக பணியாற்றுகிறார். கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சார்பதிவாளர் (பொறுப்பு) பணியாற்றிய போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் அடுத்து கோயம்புத்தூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திவ்யா தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினார்கள்.
தொடர்ந்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சாந்தி சார்பதிவாளராக பணியாற்றிய தஞ்சாவூர், சத்தியமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர். சார்பதிவாளர் சாந்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக புகாருக்கு அடிப்படை முகாந்திரம் இருந்ததாகக் கண்டறியப்பட்டதையடுத்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சார்பதிவாளர் சாந்தி, அவருடைய மகன் ராஜேஷ், மருமகள் பிரபிஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அது குறித்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை சார்பில் கூறுகையில்
"கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ஆம் தேதி வரை உள்ள காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூபாய்.1 கோடியே 52 லட்சத்து 12 ஆயிரத்து 380-க்கு சொத்து சேர்த்தாக தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. பின்னர் அவர் தனது மகன் மற்றும் மருமகள் பெயரில் சொத்துக்களை வாங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது. எனவே சாந்தி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வேடசந்தூர் அருகே உள்ள சாந்தியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அதில் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதை வைத்து விசாரணை நடத்தப்படுகிறது" எனத் தெரிவித்தனர்.
கருத்துகள்