பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் சந்தித்தது மறக்க முடியாததென்று இசை ஞானி இளையராஜா தெரிவித்தார்
'இளையராஜா சிம்பொனி இசையமைத்து, புதிய சரித்திரம் படைத்துள்ளார்' என நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அது குறித்து இசை ஞானி இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாதது. அவருடன் பேசியபோது, சிம்பொனி வேலியண்ட் உள்ளிட்ட பல கருத்துக்கள் குறித்துப் பேசினோம். அவருடைய அன்பும், ஆதரவுக்கும் நான் தலை வணங்குகிறேன். என இசை ஞானி இளையராஜா கூறியுள்ளார். சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான இசை மேதை இளையராஜாவை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நமது இசை மற்றும் கலாசாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்.
லண்டனில் சில நாட்களுக்கு முன், 'வாலியன்ட்' என்ற பெயரில் மேற்கத்திய சிம்பொனியை இசைத்து சரித்திரம் படைத்துள்ளார். உலகப்புகழ் பெற்ற ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவினருடன் இணைந்து இந்த சாதனையை படைத்துள்ளார். அவரது ஈடு இணையற்ற இசைப்பயணத்தில் இது ஒரு பெருமைக்குரிய அத்தியாயம். இவ்வாறு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்